Skip to main content

புரிந்துகொள்!

 

புரிந்துகொள்!


அப்பொழுது ஆனூன், தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப்பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான். (2சாமு. 10:4)

நமக்கு அருகிலிருக்கும் மனிதர்களைக் குறித்தும், ஆலோசனை அளிக்கும் மனிதர்களைக் குறித்தும் நாம் கவனமுடன் இருக்கவேண்டும். சற்று கவனம் சிதறினால்கூட, நம்மை அவர்கள் கர்த்தரை விட்டு தூரமாகத் துரத்திவிடவும், திசை திருப்பிவிடவும், நம்பும் மனிதர்களுக்கே நம்மை எதிரிகளாக  மாற்றிவிடவும் கூடும். சிங்காசனத்தை எதிர்நோக்கியிருந்த சாலமோனைச் சரிந்துவிழச் செய்த அவனது சக நண்பர்களைப் போல (1 இராஜா. 12:10,11), நம்மையும் சக நண்பர்களே சரிந்துவிழவும் செய்துவிடக்கூடும். 

அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ்-ன் குடும்பத்திலிருந்து தான் பெற்ற நன்மைக்கு கைமாறாக (2 சாமு 17:27-29), தானும் அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற விருப்பத்துடன், நாகாஸ்-ன் மகனாகிய ஆனூனிடத்தில் தனது ஊழியர்களை அனுப்பினான் தாவீது. 'ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயை செய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்' 

(2 சாமு. 10:2) என்றே வாசிக்கின்றோம். தேவ மனிதனான தாவீதின் மனதில் தனக்கு உதவி செய்த மனிதர்களுக்கு தயை செய்யவேண்டும் என்ற எண்ணம் உயர்ந்திருந்தபோதிலும், ஆனூனின் அருகிலிருந்த அவனது பிரபுக்களோ, தாவீதின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், ஆனூனை நோக்கி: 'தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை உம்மிடத்திற்கு அனுப்பினான்' என்றார்கள் (2 சாமு. 10:3). தயை செய்யவேண்டும் என்ற விருப்பத்துடனும், ஆறுதல் சொல்லவேண்டும் என்ற மனதுடனும் தாவீது ஆட்களை அனுப்பியிருந்தபோதிலும், அருகிலிருந்த பிரபுக்களின் ஆலோசனைக்கு அடிபணிந்த ஆனூன், தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப்பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான் (2சாமு 10:4). அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர் மிகவும் வெட்கப் பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிக்கோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான் (2சாமு 10:5). அதுமாத்திரமல்ல, தயை செய்யவேண்டும் என்றிருந்த தாவீதை புரிந்துகொள்ளாமல், தாவீதுடன் போருக்கும் ஆயத்தமானான் ஆனூன் (2 சாமு. 10:6). அநேக நேரங்களில் நமக்கு வரும் நன்மைகளை நாமே கெடுத்துக்கொள்ளுகின்றோம். நமக்கு நன்மை செய்யவேண்டுமென்றிருக்கின்ற ஆண்டவருக்கும், அவரால் அனுப்பப்படும் ஊழியர்களுக்கும் நம்மை எதிராளியாக மாற்றிவிடுகின்றோம். இறுதியில் நன்மைகளையும், தயையையும் இழந்து நிற்பதோடு மாத்திரமல்லாமல், போரிட்டு தோல்வியைத் தழுவின பின்பே அனுப்பப்பட்டவர்களது பெலத்தையும்; புரிந்துகொள்ளுகின்றோம். (2 சாமு. 10:19) 

மேலும், இன்றைய நாட்களிலும், நற்செய்தியையும், பரலோகத்தின் தேவன் நமது கைகளில் அருளியிருக்கும் ஆறுதலின் வசனங்களையும் சுமந்தவர்களாக ஆத்துமாக்களைத் தேடி புறப்பட்டுச் செல்லும் நம்முடைய வாழ்க்கையிலும் தாவீதின் ஊழியர்களுக்கு நிகழ்ந்த காரியங்கள் நிகழக்கூடும். பரலோகத்தின் ராஜாவாகிய தேவனையும், 'ராஜாவின் காரியம் அவசரம்' என்ற மனதுடன் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாக புறப்பட்டுச் சென்றுகொண்டிருக்கும் நம்மையும் புரிந்துகொள்ளாமல் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் கூட்டம் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யக்கூடும். எனினும், நம்மைப் புரிந்துகொள்ளாத மனிதர்களால் நம்முடைய வாழ்க்கையில் உண்டாகும் புண்களைக் குறித்தே அனுதினமும் நமது சிந்தைகளில் போராடிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை; அவகளை நினைத்து நினைத்து கவலைகொள்ளவேண்டிய நிர்ப்பந்தமும் நமக்கு இல்லை; தாவீதின் ஊழியர்கள் எரிகோவில் தங்கியிருந்ததுபோல, அவைகள் ஆறும்வரை நாம் ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்திருந்து, புதுபெலனோடு புறப்பட்டுச் செல்லுவோம்; யுத்தம் கர்த்தருடையது. 


நன்மை செய்தவர்களுக்கு தயை செய்யக் கற்றுக்கொள்.

உன்னைத் தேடிவருபவரைப் புரிந்துகொள். 

அருகிலிருப்பேரின் ஆலோசனைக்கு அடிமையாகிவிடாதே.

•      புரிந்துகொள்ளாதோர்களால் உண்டாகும் புண்களைக்குறித்து  கவலைகொள்ளாதே.

காயங்கள் ஆறும்வரை கர்த்தரின் பாதத்திலேயே காத்திரு. 


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி