Skip to main content

பண்டிகை புறப்படட்டும் (மத் 2:6)

 பண்டிகை புறப்படட்டும்



யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே,யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். (மத் 2:6) 

 

சுவிசேஷமாக அறிவிக்கப்படவேண்டியவர், சுவருக்குள்ளேயே கொண்டாடப்பட்டுவிடக்கூடாது. சுவிசேஷத்திற்காகச் செலவழிக்கப்படவேண்டியவைகள், சுவருக்குள்ளேயே அழிக்கப்பட்டுவிடக்கூடாது. கிறிஸ்துவின் பிறப்பு என்றதும், பலருடைய நினைவுவிற்கு வருவது அவர்களே. உள்ளத்தில் கிறிஸ்து பிறந்திராவிட்டாலும், ஊரோடு இணைந்து கொண்டாடத் தயங்குவதில்லை பலர். மேலும், தனிப்பட்ட மற்றும் குடும்ப சந்தோஷத்தையே முன் நிறுத்தி, பல்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருப்போர் அநேகர். ஆடைகள் இல்லையென்றால் சந்தோஷம் அணைந்துபோய்விடும் பலருக்கு; பட்டாசுகள் இல்லையென்றால் பரபரப்பு இருக்காது; பலகாரங்கள் இல்லையென்றால் பசி தீராது; அலங்காரம் இல்லையென்றால் பண்டிகையே அழகாயிராது. இத்தனைக்கு மத்தியில், பின்னுக்குத் தள்ளப்படும் பிறருடைய வாழ்க்கையைச் சற்று எண்ணிப்பார்ப்போமென்றால், 'உன்னிடத்திலிருந்து புறப்படுவார்' என்ற சத்தியத்தினை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். கிறிஸ்து பிறப்பினை நினைவுகூறும் நாம், 'கிறிஸ்து நம்மிடத்திலிருந்து புறப்படவேண்டும்' என்பதையும் மறந்துபோய்விடக்கூடாது. 

ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒருதரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று (லூக் 16:21). என்னிடத்திலிருக்கும் ஐசுவரியம் எனக்கே என்ற ஐசுவரியவான், ஆபிரகாமின் மடியிலிருந்த லாசருவினிடத்திலிருந்து ஒரு துளி நீரைக்கூட வாங்க முடியவில்லையே. அப்படியே, ஆத்துமாவே, உனக்காக (தனக்காக) அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டபோது, தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் (லூக் 12:19,20) என்று சொன்னாரே. நம்முடைய ஐசுவரியம் தரித்திரரை நோக்கி புறப்படட்டும். 

இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார் (மத் 19:23-26). மனுஷரால் கூடாததுதான்; ஆனால், ஐசுவரியவான்கள் தேவனை ஏற்றுக்கொண்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து பரலோகத்தில் சேரும்படியான சிநேகிதர்களைச் சம்பாதிப்பார்களென்றால், இது சாத்தியமே. நம்முடைய ஐசுவரியம் நம்மை பரலோகில் சேர்க்கட்டும். 

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள் (லூக் 16:9) என்று இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்தாரே. இதன் பொருள் என்ன? நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளத்தக்கதான சிநேகிதர்களை நம்முடைய ஐசுவரியம் சம்பாதிக்கவேண்டும் என்பதுதானே. இன்றும், இயேசு கிறிஸ்துவை தங்களுடைய வாழ்க்கைக்காக மாத்திரமே உபயோகப்படுத்திக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளம்; அடுத்தவர்களுடைய வாழ்க்கைக்கும் அவர் வேண்டுமே என்று தங்களிடத்திலிருக்கும் இயேசு கிறிஸ்துவோடு புறப்பட்டுச் செல்லவேண்டுமே. நம்முடைய ஐசுவரியம் பரலோகத்திற்கு ஆள் சேர்க்கட்டும். சமாதானமற்று வாழும் மற்றவர்களை கிறிஸ்து ஆளவேண்டுமென்றால், கிறிஸ்துவை சுமந்துகொண்டிருக்கும் நாம் புறப்பட்டுச் சென்று, சுவிசேஷமாக அவரை அறிவிக்கவேண்டும்.


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி