Skip to main content

உயிரைக் காக்கும் உயிர்கள்

 உயிரைக் காக்கும் உயிர்கள்



'ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை' (யோவா 15:13) என்றார் இயேசு கிறிஸ்து. இத்தகைய ஜீவனைக் கொடுக்கும் அன்புள்ள மனிதர்களை அடையாளம் கண்டுகொள்வது அவசியம். யாக்கோபு தன் தகப்பன் வீட்டிலிருந்து, லாபானின் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றபோது, யாரும் உடன் செல்லவில்லை. ராகேலை விவாகம் செய்துகொண்டபின், ஏறக்குறைய தொன்னூற்றோரு வயதாயிருக்கும்போது, யோசேப்பை ராகேலினிடத்தில் பெற்றெடுத்தான் யாக்கோபு. அந்நேரத்திலேயே, யாக்கோபின் தாயாகிய ரெபெக்காள், தனது தாதியாகிய தெபொராளையும் மற்றும் இரண்டு ஈசாக்கின் வேலைக்காரர்களையும் யாக்கோபினிடத்திற்கு அனுப்பிவைத்தாள் என்பது வரலாறு. யாக்கோபுக்கும், ராகேலுக்கும் செய்யவேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்து முடித்த ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் யாக்கோபுக்கும் ராகேலுக்கும் செய்யவேண்டிய கடமைகளையும் செய்து, பின்பு மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு 'அல்லோன்பாகூத்' 'the oak of weeping"  என்னும் பேர் உண்டாயிற்று (ஆதி 35:8). தாதியாகிய தெபொராளின் மரணம், யாக்கோபின் குடும்பத்தை வெகுவாகப் பாதித்தது. ஆபிரகாமின் வேலைக்காரன், ஈசாக்கிற்கு பெண்பார்க்கச் சென்று, பெத்துவேலின் மகளாகிய ரெபெக்காளை அழைத்துக்கொண்டுவந்தபோது, ரெபெக்காளோடுகூட அவள் தாதியையும் அவர்கள் உடன் அனுப்பியிருந்தார்கள் (ஆதி 24:59). ரெபெக்காளோடு கூட அனுப்பப்பட்ட இந்த தாதியையே, ரெபெக்காள் தான் அதிகம் நேசித்த குமாரனாகிய யாக்கோபினிடத்திற்கு அனுப்பியிருக்கக்கூடும். இரண்டு தலைமுறைகளாக எஜமான்களுக்கு ஊழியம் செய்தே உயிரை விட்ட தாதி, நமது ஊழியத்திற்கும் ஓர் மாதிரியே. 

அவ்வாறே, அபிகாயிலை விவாகம்பண்ண மனதாய், தாவீது தன் ஊழியக்காரரை அனப்பியபோது (1சாமு. 25:40), அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப் பெண்களைக் கூட்டிக்கொண்டு, தாவீதின் ஸ்தானாதிபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள் (1சாமு. 25:42). எப்போதும், எங்கேயும் உடன்செல்ல ஆயத்மாயிருப்பவர்கள் இந்த தாதிகள். 

பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தபோது, உடன் வந்த அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவிக்கொண்டிருந்தார்கள். ஒருவேளை பார்வோனின் குமாரத்தியைக் காக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்திருக்கக்கூடும். நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியை பார்வோனுடைய குமாரத்தி கண்டபோது, தான் சென்று உடனே எடுத்துவிடவில்லை, தன் தாதியை அனுப்பியே அதைக் கொண்டுவரும்படி செய்தாள் (யாத் 2:5). எஜமாட்டிகளின் கட்டளையே தாதிகளின் வாழ்க்கையில் இறுதியானது. 

சவுலின் குமாரனான யோனத்தானுடைய மகன் மேவிபோசேத், ஐந்து வயதாயிருந்தபோது, அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போகிற அவசரத்தில், அவன் விழுந்து முடவனானான் (2சாமு. 4:4). மேலும், யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்;கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளி அறையில் ஒளித்துவைத்தார்களே (2 இரா. 11:2) தங்களிடம் ஒப்புவிக்கப்பட்டதை எப்படியாகிலும் தப்புவித்துவிடவேண்டும் என்ற குணம் தாதிமார்களிடத்தில் காணப்பட்டதே. தாதிமார்கள் வேலைக்காரர்களாக மாத்திரம் வைக்கப்படவேண்டியவர்கள் அல்ல; மாறாக, தேவசமுகத்திற்கும் நம்மோடு கூட வரவேண்டியவர்கள். (எஸ்தர் 4:16)

அதுமாத்திரமல்ல, ராஜாவைச் சந்திக்கும் முன் எஸ்தரை ஆயத்தப்படுத்தினது தாதிமார்களே. அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமiனியிலிருந்த ஏழு தாதிமார்கள் எஸ்தருக்காக நியமிக்கப்பட்டிருந்தார்கள் (எஸ்தர் 2:9). நம்முடைய வாழ்க்கையின் நிலை, இத்தகையதாய் உயரவேண்டுமே. மற்றவர்களை பரலோக ராஜாவுக்கு முன் நிறுத்தும்படியான பெரிதானதோர் பணி நம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றதே. இதனை எத்தனை தியாக உணர்வோடு செய்யவேண்டும். தங்கள் எஜமான்கள் சிறையாகும்போது, மார்பிலே அடித்துக்கொண்டு அழுது புலம்பின தாதிகளைப்போல (நாகூம் 2:7) மனந்திரும்பாதவர்களுக்காக நாமும் அழுது புலம்புவோம். 


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி