Skip to main content

எதிரிக்கு அறிவிக்கும் உளவாளி

எதிரிக்கு அறிவிக்கும் உளவாளி

 

நம்மையும், நம்மைப் பற்றிய செய்தியையும் அறிந்திருக்கும் உளவாளிகள் எதிரிகளின் பாளையத்திற்குள் உலாவுவர் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். இவர்கள் நம்மை வீழ்த்த ஆலோசனை கொடுப்பவர்கள், நமது இருப்பிடத்தைக் காட்டிக்கொடுப்பவர்கள், நமக்கு விரோதமாக யுத்தத்தைக் கிளற உபயோகமாகிறவர்கள். பல நேரங்களில் இதனை அறியாதபடியினால் பலரது வாழ்க்கையில் வீழ்ச்சியும், தோல்வியும் மறுக்க இயலாததாகிப்போய்விட்டது.

சீரியரின் பாளையத்தில் உன்னைப் பற்றியும், உன் இருப்பிடத்தையும் அறிந்த ஒருவன் இருக்கிறான் (காட்டிக்கொடுக்க). எதிரியின் எல்லைக்குள்ளும் என்னைப் பற்றி அறிந்த ஒருவன் உண்டு. இஸ்ரவேலருக்கு விரோதமாக எத்தனையாய் எத்தனித்தும், யுத்தம் பண்ண இயலாமல் சோர்ந்துபோயிருந்த சீரிய ராஜாவின் இருதயம் குழம்பியதால், 'அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார்? (2இரா 6:11) என கோபமுடன் கேட்கிறான். தன்னோடு கூட இருந்தவர்களையே சந்தேகப்படத் தொடங்கினான் சீரிய ராஜா. அமைதியாய் அனைவரும் இருக்கும்போது, ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர்; உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான் (2இரா 6:12).

இதனை விளக்கவே ஓர் உவமையினை இயேசு சொன்னார். 'பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது' (மத் 13:24-26). ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் நித்திரை பண்ணும் வேளையை அறிந்தவன் சத்துருவின் உளவாளி; நித்திரையைத் தவிர்த்துவிட்டால், சத்துருவைத் தகர்த்துவிடலாம்.

நாம் நித்திரை பண்ணுவோமாகில், நம்முடைய வாழ்க்கையில் களைகள் நிச்சயம் உருவாகிவிடும். 'இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை'. ஆனால், நாம் தூங்கும் நேரம் சத்துருவுக்கு அம்பலமாகுமென்றால், ஆபத்து அரங்கேறிவிடும்.

சிம்சோன்-தேவன் இடையிலான உடன்படிக்கையினை அறிய இயலாதவர்களாயிருந்தான் சத்துரு. பெலம் எங்கிருந்து வருகிறது என்பதனை எத்தனையாய் உளவு பார்த்தும் பயனில்லை. ஆனால், சிம்சோனின் படுக்கும் இடம் மாறியபோது, பாவத்தின் போதை மூளையில் ஏறியபோது, 'முடிதான் காரணம்' என சொல்லிவிட்டான்; அதுதான் அவனது முடிவுக்கும் காரணமாயிற்று.

தன்னுடைய சீடர்களை இயேசு நோக்கி, 'உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான்' (யோவா 6:70) என்றாரே, அவன் சீடர்களின் சபைக்குள் இருந்த சத்துருவின் உளவாளிதானே. அப்படியிருந்தும், அவனை அழிக்க இயேசு முற்படவில்ல, சிநேகிதனே என்றுதான் அவனை அழைத்தார். யூதாஸ் தானாகத் தன்னை அழித்துக்கொண்டான். உளவு வேளை செய்பவர்களை அழிக்கும் நோக்கோடு அவர்களைப் பின்தொடரும் பணி நமக்கு இல்லை. நாம் நம்முடைய பணியைச் செய்துகொண்டேயிருந்தால், அவர்கள் தானாகவே அழிந்துபோவார்கள். ஆனால், அவர்களுக்கு முன் கவனமானதோர் வாழ்க்கை அவசியம். 
கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.(கலா 2:4)

சீரிய ஊழியக்காரன் எத்தனையாய் உளவு பார்த்து, எலிசாதான் ராஜாவுக்கு அறிவிக்கிறான், அவன் தோத்தானில் இருக்கிறான் என்று சொன்னபோதிலும், எலிசாவைப் பிடிக்கவோ, எலிசாவை அழிக்கவோ சீரியப் படையினால் கூடாது போயிற்றே! ஏனெனில், எலிசா விழிப்புள்ள ஓர் வாழ்க்கை நடத்தியவன். வேலைக்காரனின் கண்கள் காணக்கூடாதவைகளாக இருந்தபோதிலும், கர்த்தரின் சேனையைக் காணுமளவிற்கு விழித்திருக்கும் விழிகள் பெற்றிருந்தவன்.

அன்றைய நாட்களில் அப்போஸ்தலர்களை வேட்டையாடியதுபோல, இன்றைய நாட்களிலும் உளவு பார்த்து பல ஊழியர்களை வேட்டையாடும் பணியினை சத்துரு செய்துவருகின்றான்.

வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை
கேட்டின் மனுடர் வந்து ஊடே இருப்பதில்லை
என்ன சுகம் ஆஹா என்ன சுகம்
என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம் 

அதைப் பெற்றே அனுபவித்தால் என்ன சுகம் 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி