Skip to main content

பாக்கியவான்கள், அதிக பாக்கியவான்கள்

 

பாக்கியவான்கள், அதிக பாக்கியவான்கள்

 

ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.(லூக் 11:28).

பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற பரத்திலிருந்து புவிக்கு இறங்கிவந்த இயேசுவையும், அதற்காக அவர் தரித்துக்கொண்ட மனுட உருவையும் நாம் அறிந்திருந்தாலும், புரிந்திருந்தாலும், கிறிஸ்துமஸ் என்ற பெயரில் இயேசுவின் பிறப்பினைப் பண்டிகையாக நாம் ஆசரித்தாலும், தனது சரீரத்தினையும், பிதாவின் சித்தத்தினையும் இயேசு அளக்கின்ற வண்ணம் அளக்க நாம் பல வேளைகளில் தவறிவிடுகின்றோம். எனவே இயேசு, 'பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத் 7:21) என அழுத்தமாகச் சொன்னார். மேலும், என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? (லூக் 6:46) என்றும் வினவுகிறார். இயேசுவை புகழ்ந்து பாட மட்டும் அழைக்கப்பட்டவர்களல்ல நாம், அவர் சொற்படி அடியெடுத்து வாழவும் அழைக்கப்பட்டவர்கள். இயேசுவுக்குப் பின்னே எத்தனை வருடம் சென்றுகொண்டிருந்தாலும், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிமடுக்க மறுப்பார்களேயாகில், மறுவுலகில் பரலோகம் அவர்களுக்கு இல்லை என்பது நிச்சயம். ஆலயத்தை நேசிப்பதாலும், போதகரை நேசிப்பதாலும், ஊழியங்களை நேசிப்பதாலும் மாத்திரம் நாம் உன்னத வாழ்விற்குள் பிரவேசித்துவிட முடியாது; மாறாக, நம்முடைய வாழ்க்கையில் அவரது சித்தம் நிறைவேறவேண்டும், அவரது சித்தத்தின்படி நாம் செயல்படவேண்டும்.

ஒருமுறை இயேசு போதித்துக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயாரும், சகோதரரும் அவரைக் காணும்படியாகவும், அவரிடத்தில் பேசும்படியாகவும் அவரைத் தேடி வந்தார்கள். உள்ளே நுழைய வழி இல்லாதபடியினால், வெளியிலே நின்றுகொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார் (மத் 12:47-50). பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களைத் தனது தாயாகவும், சகோதரராகவும் இயேசு சொல்லியிருக்க, நாம் அந்த ஸ்தானத்தினை அடைந்து அவரது தாயாகவும், சகோதரராகவும் பார்க்கப்பட்டால் எத்தனை பாக்கியம் பெற்றவர்களாயிருப்போம்!

சித்தத்தின்படி செய்கிறவர்களே இயேசுவின் தாய் என்று இயேசுவே போதித்திருக்க, சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, இயேசு ஒரு சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்று (யோவா 19:27) ஒருவனுக்குமாத்திரம் சொல்லப்பட்டதை உலகிற்குச் சொல்லப்பட்டதாக உருமாற்றம் செய்துகொள்வது சத்தியமல்ல. அது தனிஒரு மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு அவ்வளவே. இயேசுவின் சித்தத்தையும், சத்தத்தையும் புரிந்துகொள்ளாத கூட்டத்தினர் 'பாக்கியமுள்ளவளென்று' மரியாளை வாழ்த்தி வாழ்த்தி, 'அதிக பாக்கியமுள்ளவர்ளாக' தாங்கள் மாறவேண்டுமென்பதை மறந்துவிட்டனர். இறந்துபோன மரியாளை வாழ்த்துவது இம்மைக்குரியது, உயிர்த்தெழுந்த இயேசுவின் தாயாக நாம் வாழ்வது பரத்துக்குரியது. இயேசுவின் சரீரப்பிரகாரமான தாயாகிய மரியாளின் உயிர்த்தெழுதலும், சித்தத்தின்படி செய்து தாயாக மாறிய நம்முடைய உயிர்த்தெழுதலும் ஒன்றாகவே நிகழும்; நாம் அதிக பாக்கிவான்களல்லவா!

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி