Skip to main content

தீர்ப்பு

 

தீர்ப்பு



நமக்கும் தேவனுக்கும் இடையிலான தொடர்பினைக் கொண்டு மாத்தி;ரமல்ல, நமக்கும் பிற மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பினையும் மற்றும் உறவினையும் கொண்டே பரலோகத்தில் தீர்ப்பு எழுதப்படுகின்றது என்பதை நாம் வசனத்தின் வாயிலாக அறிந்துகொள்வதும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் வாயிலாகப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியம். மற்றவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டு, நம்முடைய நீதியினால் மாத்திரம் பரலோகத்தின் வீதியில் உலகை விட்டுச் சென்றபின் உலாவிவிடலாம் என்று நாம் மனக்கோட்டை கட்டிவிடக்கூடாது. 

உலகத்தில் உண்ணும்படியாகவும், உடுத்தும்படியாகவும், உறங்கும்படியாகவும் எத்தனையோ விதமான ஐசுவரியங்களைப் பெற்றிருந்ததான். இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான் (லூக் 16:19). என்றபோதிலும், பருக்கள் நிறைந்தவனாக, படுக்க இடமற்றவனாக, பசியாற உணவுமற்றவனாக தன்னுடைய வீட்டின் வாசலினருகே தரித்திரமான நிலையில் கிடந்த லாசருவுக்கு (லூக். 16:20) உதவும்படியாக அவனது உள்ளம் உந்தப்படவில்லையே. நாய்களின் நாவு லாசருவின் பருக்களை நக்கி ருசிபார்த்துக்கொண்டிருந்தபோதிலும், லாசருவின் நாவோ ஐசுவரியவானுடைய மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைக்கூட 'ஆசையாயிருந்தபோதிலும்' (லூக். 16:21)ருசித்துப்பார்க்க இயலவில்லையே. ஆகாரமில்லாதிருந்தும், லாசரு ஆண்டவரோடிருப்பதை ஐசுவரியவானின் கண்கள் காணவில்லையே. எனவே இயேசு கிறிஸ்து, 'பசியாயிருந்தேன்,  எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள்' (மத் 25:35,36) என்று கூறுகின்றார். மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்ற நீதி அல்லவோ பரலோகத்தின் வீதிக்குள் அவர்கள் நுழைய பாத்திரவான்களாக மாற்றிற்று. (மத் 25:40)

 தன்னிடத்தில் எத்தனை ஐசுவரியமிருந்தும், 'தரித்திரனாகிய லாருவை நினைத்துக்கூட பார்க்காத ஐசுவரியவானை' பரலோகம் ஏற்றுக்கொள்ளவில்லையே. நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்ட வாலிபனை நோக்கி, நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்று இயேசு கிறிஸ்து சொன்னபோது, அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 19:16,21-23)

என்று சொன்னாரே. கட்டளைகளையெல்லாம் சிறுவயது முதல் கடைபிடித்திருந்தும் (லூக். 19:20), அவனிடத்தில் காணப்பட்ட குறைவினை நீக்கி, அவனை பூரண சற்குணனாக மாற்ற இயேசு கிறிஸ்து முயற்சித்தபோது, 'பரலோகத்தைக் காட்டிலும் தன்னிடத்திலிருக்கும் ஐசுவரியமே பிரதானமானது; பரலோகத்திற்குள் பிரவேசிப்பதற்காக அதனை தரித்திரர்களுக்குக் கொடுத்துவிட முடியாது' என்ற எண்ணத்தோடு அவன் போய்விட்டது, முதலாவது அவன் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடவில்லை என்பதை எத்தனை தெளிவாகக் காட்டுகின்றது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்றே இயேசு கிறிஸ்து கற்றுத் தந்தார். என்றபோதிலும், 'தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதற்காக' நம்மிடத்தில் கூடக்கொடுக்கப்பட்டிருப்பதையும் விட்டுவிடவும் ஆயத்தமாயிருக்கவேண்டுமே. கோபாக்கினையின் நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும் (நீதி. 11:4) என்றல்லவா வாசிக்கின்றோம். 

சீஷர்களுக்கு ஜெபிக்கும்படியாக இயேசு கற்றுக்கொடுத்தபோதும், எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் என்றும், மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார் (மத் 6:12,14) என்றுமல்லவா கற்றுக்கொடுத்தார். மற்றவர்களுடனான உறவை சரிசெய்யாமல், 'பிதாவே, பிதாவே' என்று கூப்பிடுவதில் பிரயோஜனமில்லை. தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1 யோவான் 4:20). நாம் மன்னிக்கப்பட்டதை மறந்து, நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்டவர்களை நாம் மன்னியாமல் கடினமாய் நடத்துவோமென்றால், நம்முடைய மன்னிப்பும் பிதாவினால் மறக்கப்படுவது உறுதி (மத். 18:23-35). தீர்ப்பினை தீர்மானிப்பது நமது கையிலேயே.  


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி