Skip to main content

என்ன கிடைக்கும்? (மத். 26:14-16)

  என்ன கிடைக்கும்?



பிசாசுக்கு  இடங்கொடாமலும் இருங்கள் (எபே. 4:27) என்றார் பவுல். எனினும், ஆவிக்குரிய பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில், என்ன கிடைக்கும்? என்ற கேள்வி அவர்களை எதிர்முனையை நோக்கி திருப்பிவிடுவதோடு, எதிரிகளிடமே அவர்களைக் கொண்டு சேர்த்துவிடும்; அத்துடன், பிசாசுக்கு இடங்கொடுக்கவும் செய்துவிடும். என்ன கிடைக்கும்? என்ற கேள்வி இடையில் எழும்பினதினால், ஆவிக்குரிய ஓட்டத்திற்கே விடைகொடுத்துவிட்டவர்கள் உண்டு.   

பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;: நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான் (மத். 26:14-16). சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு (யோவான் 13:2) என்றும், திருடனானபடியினால் என்றும் (யோவான் 12:6) யூதாஸைக் குறித்து வாசிக்கின்றோமே. மேலும், முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றும், தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றும் (யோவான் 13:10,11) யூதாஸைக் குறித்து இயேசு கிறிஸ்து எடுத்துரைத்தாரே. பிசாசானவன் யூதாஸின் இருதயத்தைத் தூண்டினபின்பும், யூதாஸின் கால்களை இயேசு கிறிஸ்து கழுவினது எத்தனை மேன்மையானதோர் மாதிரி. வெளிப்படையாக யூதாஸின் கால்கள் கழுவப்பட்டபோதிலும், அவனது அந்தரங்கக் கறைகளோ அப்படியேதான் இருந்தது. என்ன கிடைக்கும் என்று கேட்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்துவிட்டானே (யோவான் 13:27). சீஷன் என்ற ஸ்தானத்தையே இழக்கச் செய்துவிட்டானே. (அப். 1:24)

பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான் (மத். 19:27). ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 19:23) என்று இயேசு கிறிஸ்து சொன்னதும், 'தன்னுடைய தியாகத்தைச் சொல்லிக்காட்டிவிட்டான் பேதுரு.' தியாகத்தைச் சொல்லிக்காட்டினதோடு மாத்திரமல்லாமல், தியாகத்திற்கு ஈடாக என்ன கிடைக்கும்? என்ற கேள்வியையும் முன் வைத்துவிட்டான் பேதுரு. தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்து சொல்லத் தொடங்கினபோது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்கு சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார் (மத். 16:22,23). 'எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்ட பேதுருவுக்குள் சாத்தான் புகுந்துவிட்டானே. என்ன கிடைக்கும்? என்று கேட்ட பேதுரு,  வேலைக்காரி தன்னைக் காட்டிக்கொடுத்தபோது, 'நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது' என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தானே. அதுமாத்திரமல்ல 'அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினானே.' (மத். 26:70,74)

அனனியாவும் சப்பீராளும் தங்களது காணியாட்சியை விற்றபோதிலும், எல்லாவற்றையும் அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்துவிட்டால், தங்களுக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணியதினாலேயே, கொஞ்சத்தை மனைவி அறிய எடுத்துவைத்தான் அனனியா. பேதுரு அவனை நோக்கி: சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? என்று கேட்டானே (அப். 5:1-3). தனக்கென்று சிலவற்றைத் தப்பவைத்ததினால் சவுலும், ஆகானும் பாவஞ்செய்தார்களே (1சாமு. 15:9, யோசு. 7:1). என்ன கிடைக்கும் என்ற வலையில் நாம் மாட்டிக்கொண்டால், விட்டுவந்தவைகளையே மீண்டும் தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்; பின்னோக்கிய பயணத்தில் பிசாசும் உடன் வந்து ஒட்டிக்கொள்ளும் நிலை உருவாகிவிடும்.

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி