Skip to main content

பிணைப்பும் பெலமும்

 

பிணைப்பும் பெலமும்



ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். (மத் 18:20)


பிள்ளைகளாகிய நம்முடைய உள்ளத்தில் பிதாவாகிய தேவன் வாசம் செய்கின்றபோதிலும், பிள்ளைகளாக பலர் இணையும்போது உண்டாகும் பிணைப்பினால் அவரது பெலம் இன்னும் பலமாகவும், முழுவதுமாகவும் வெளிப்படத் தொடங்குகின்றது. அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள் (அப் 4:31) என்று அப்போஸ்தலர்களின் நாட்களில் நடைபெற்ற அசைவினை வேதத்தில் வாசிக்கின்றோமே. ஆவிக்குரிய வாழ்க்கையைத் தொடரும் நாம், பிதாவாகிய தேவனுக்குப் பிள்ளைகளாயிருந்தாலும், பிற மனிதர்களோடும் பிணைந்து நிற்கும் மனமுள்ளவர்களாயிருக்கவேண்டியது அவசியம். ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம் (2 கொரி 5:16) என்ற பவுலின் வார்த்தையினை, ஒரு புற அறிவோடு அறிந்துகொண்டு, மறுபுறத்திலிருக்கும் மனிதர்களை புறம்பே தள்ளிடும் மக்கள் இந்நாட்களில் உண்டே. பிற மனிதர்களோடு கலவாமல், உறவாடாமல், பழகாமல், தங்களைத் தாங்களே பெரியவர்களாக நினைத்துக்கொண்டும், ஆவிக்குரிய ஐசுவரியவான்களாக தங்களைத் தாங்களே அளந்துகொண்டும், பெருமையான மனதோடு, ஆவிக்குரிய வாழ்க்கையின் அநாதைகளைப்போல வாழும் மனிதர்கள் உண்டே. 

பெலிஸ்தரின் சேனை படைகளோடு பக்கத்தில் உடன் நின்றுகொண்டிருந்தபோதிலும், உடன் நிற்கும் சேனை வீரர்களின் பலத்தை உதறித் தள்ளிவிட்டு, தனது மாம்சீக உருவத்தினையும் மற்றும் பெலத்தினையும் மனதில்கொண்டவனாக, தன்னிடமிருக்கும் பெலன் மட்டுமே போதும் என்ற மனதுடன், உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள். அவன் என்னிடத்தில் வரட்டும் (1சாமு 17:8) என்று தனியே யுத்தத்திற்குச் சென்றதால், தாவீதினால் வீழ்த்தப்பட்டுவிட்டானே. இராட்சதன் என்ற தன் மனதின் நினைவு யுத்தத்தில் அவனை தாவீதின் கையிலிருந்து இரட்சிக்கவில்லையே. 

ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி? ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (பிர 4:9-12) என்று சாலொமோனும் ஆண்டவர் கொடுத்த ஞானத்தினால் எழுதி உணர்த்துகின்றானே. 

ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,  கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான் (லூக் 10:30-34). 'யூதர்களாயிருந்த, தேவாலயத்தோடு தொடர்பிலிருந்த, தேவாலயத்தின் பொறுப்புகளிலிருந்த, ஆசாரியனும், லேவியனும்' காயமாகக் கிடந்த மனிதனைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்களே; ஆனால், சமாரியனான மனிதனோ, காயம்பட்ட மனிதனுக்கு சகோதரனைப் போல உதவி செய்தானே. இவ்வாறே, கிறிஸ்தவர்களாயிருந்தபோதிலும், ஆவிக்குரியவர்களாயிருந்தபோதிலும், இரட்சிக்கப்பட்டவர்களாயிருந்த போதிலும், அபிஷேகம் பெற்றவர்களாயிருந்தபோதிலும், சகோதரர்களைக் கண்டு பக்கமாய் விலகிச் செல்லும் ஆவிக்குரிய மனிதர்கள் உண்டே. காயம்பட்டவனைத் தொட்;டால், கரங்கள் கறையாகிவிடும் என்ற அச்சத்தினால் அவர்கள் அகன்று செல்லுகின்றார்களோ? இல்லவென்றால், தாமரை இலையின் மேலுள்ள தண்ணீரைப்போல, தங்களைத் தனிமைப்படுத்திக் காண்பிக்க விரும்புகின்றார்களோ? பாடையில் கிடந்த வாலிபனையே தொட்ட இயேசுவே இவர்களுக்கு விடை.

  அடுத்தவரோடு இணைந்து நிற்காமல் அநாதைகளைப் போல  அல்ல, உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் (மத் 18:19,20) என்ற கிறிஸ்துவின் வார்த்தையினால் இணைவோம்.


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி