Skip to main content

பயப்படாதே, பயப்படு

 

பயப்படாதே, பயப்படு

 

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2தீமோ 1:7) என்ற வசனம் நாம் அறிந்ததே. என்றாலும், அனுதின வாழ்க்கையில் பயம் என்பது அவ்வப்போது வந்து நமது ஆவிக்குரிய பெலத்தைச் சோதித்துப் பார்க்கத்தான் செய்கிறது. வியாதியைக் குறித்து, எதிர்காலத்தைக் குறித்து, திருணமத்தைக் குறித்து, பிள்ளைகளைக் குறித்து, வேலையில்லாமையைக் குறித்து, விரோதமாய் கிரியை செய்வோரைக் குறித்து இன்னும் எத்தனையோ விதஙக்ளில் பயம் என்பது நமது அன்றாட வாழ்க்கையைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டே நிற்கின்றது. பக்கத்தில் பயம் நின்றாலும், ஆவிக்குரிய பெலத்துடன் நாம் எப்படி அதனைச் சந்திக்கின்றோம் என்பதே நமது வாழ்க்கையில் ஜெயத்தைக் கொண்டுவரும். இயேசு போதித்தபோது, 'என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்' (லூக் 12:4) என்று ஆலோசனையான பாடம் கற்பித்தார். பயப்படக்கூடாதவைகளுக்கு நாம் பயந்துகொண்டிருந்தால், நம்முடைய பாதை மாறிவிடும். பயம் என்கிற விதையை மனிதரின் உள்ளத்தில் விதைத்து, அது மனதில் மரமாகி, அவனது ஆவிக்குரிய மரணம் நிகழும் வரை சத்துரு அதற்கு நீரூற்றிக்கொண்டேயிருக்கின்றான். பயத்தை நெஞ்சில் ஊற்றி, விசுவாசத்தை வெளியிலே தூற்றிவிடுகின்றான் அவன்.

'சரீரத்தைக் கொலை செய்து, அதற்குப் பின் ஒன்றும் செய்ய திராணியில்லாத' எத்தனைக் காரியங்களுக்கு நாம் வாழ்க்கையில் பயந்துகொண்டிருக்கின்றோம். நாளைய உணவைக்குறித்த பயம், எதிர்காலத்தில் நான் விரும்புகிற வண்ணம் நடக்காவிட்டால் என் வாழ்க்கையே முடிந்துவிடும் என்ற பயம், திருமணத்திற்கு மாப்பிள்ளையோ அல்லது பெண்ணோ கிடைக்கவில்லையென்றால், வாழ்க்கை வீணாகிவிடுமே என்ற பயம், வியாதியால் மரித்துவிடுவேனோ பயம்; இவை அனைத்தும் உங்கள் சரீரத்தைக் கொல்பவைகளே; ஆத்துமாவை அல்ல. தேவ பயத்தை மனதில் வைத்துக்கொண்டும், மேற்சொன்ன இத்தகைய பயங்களை நெஞ்சில் சுமந்துகொண்டும் நாம் வாழுவோமென்றால், சத்துருவின் சுனாமி வீசும்போது இலகுவாக நாம் அவனால் ஈர்த்துக்கொள்ளப்படுவோம். பயப்படக்கூடியவருக்குப் பயப்படாமல், பயப்படாதவைகளுக்கு பயந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் அநேகர். அவரை ஆராதித்தாலும், அவனைக்குறித்த பயமே இவர்களை ஆளுகின்றது.

நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று (மத் 4:9) இயேசுவிடம் நேரடையாகச் சொன்னது போலவோ அல்லது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு முன்பாக பொற்சிலை நிறுத்தப்பட்டு வணங்கும்படிச் சொல்லப்பட்டது போலவோ (தானி. 3:12) சத்துரு நம்மைச் சந்திக்காமலிருக்கலாம், ஆனால், பயத்தைக் கொடுத்து, தன்னை பணிந்துவிடவைத்துவிடுகின்றான். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன் (உபா 7:21) எனவே நாம் பயப்படவேண்டிய அவசியமில்லையே. தேவைகளுக்கான பயம், தேவனுக்கு விரோதமான பயம், சத்துருவைக் கண்டு பயம் இவை அனைத்தும், நம்மை மோட்ச ராஜ்யத்திற்குள் பிரசவேசிக்கமுடியாதபடி நம்மைத் தடுக்கின்ற காரணிகள். பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (வெளி 21:8).

எகிப்தை விட்டுப் புறப்பட்டு, கானானை நோக்கி பிரயாணப்பட்டுக்கொண்டிருந்த இஸ்ரவேல் மக்களை, மீண்டும் பார்வோன் பின்தொடர்ந்து சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தih நோக்கிக் கூப்பிட்டார்கள். அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? (யாத் 14:10,11) என்று அங்கலாய்த்தார்கள். தேவனால் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தபோதிலும், தொடரும் எதிரியைக் குறித்த பயம் தொடர்ந்துகொண்டேதானிருந்தது. உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய் (சங் 91:7,8) எனவே பயம் வேண்டாம்.

தேவனுடைய சிங்காசனத்தின் மேல் ஆசை கொண்டவன் சாத்தான், தேவனுக்கு மேலாக தான் உயர்வாக வைக்கப்படவேண்டும் என்று நினைத்தவன் அவன். தேவனுக்குரியதை எப்பொழுதும் தன்னுடையதாக்கிக்கொள்வதிலேயே குறியாயிருப்பவன் சாத்தான். தேவனை வணங்கும் மக்களை அவனை வணங்கத் தூண்டுவான்; தேவனைத் தேடும் மக்களை தன்னைத் தேடவைப்பான்; அப்படியே விசுவாசிகளாகிய, ஆவிக்குரியவர்களாகிய நமக்குள் இருக்கிற பயம் தேவனுக்குரியது. அவர் ஒருவருக்கே நாம் பயப்படவேண்டும். ஆனால், நாம் 'கர்த்தருக்குப் பயப்படுவதை' விரும்பாத சத்துரு, நம்மை 'அவனுக்குப் பயப்படுகிறவர்களாக' மாற்றிக்கொள்ள விரும்புகின்றான். எனவே, இத்தகைய 'சத்துருவுக்குப் பயப்படும் பயத்தை' நெஞ்சில் கொண்டிருக்கும் மக்கள் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறதில்லை; கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே பரலோகத்தில் பிரவேசிப்பார்கள்; சாத்தானுக்குப் பயந்துகொண்டிருக்கும் மக்கள், நரகத்திற்கே தள்ளப்படுவார்கள்; இதுவே சத்தியம். எனவே இயேசு, நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் (லூக் 12:5) என்று, நாம் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை அடையாளப்படுத்திக் கூறினார். சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படுங்கள் (யோசு. 4:23). கர்த்தருக்குப் பயப்படும் பயம் நம்மில் நிறைந்திருந்தால், நாம் சத்துருக்களுக்குப் பயப்படவேண்டிய அவசியமில்லை. கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷனே ஆசீர்வாதங்களையும் வாழ்க்கையில் பெற்றுக்கொள்கிறான் (சங். 128:4). யாருக்குப் பயப்படவேண்டும், யாருக்குப் பயப்படக்கூடாது என்பதை அடையாளம் கண்டுகொள்ளுவோம், பயம் தேவன் ஒருவருக்கே. 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி