Skip to main content

தூரமாயிருக்கும் துணை

 

தூரமாயிருக்கும் துணை




உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புகொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. (உபா. 23:14)


அவர் காட்டும் திசையினை நோக்கி பயணித்தால் மாத்திரம் போதாது; அசுத்தங்களோடு பயணத்தைத் தொடருவது பயணிகளுக்கே பாதுகாப்பற்றது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து பயணத்தைத் தொடங்கியிருந்தாலும், கானானுக்குச் சென்று சேரும் முன், வழியிலேயே பிணங்களாக நாம் வீழ்ந்துவிடக்கூடாதே. எள்ளளவு பாவமும், உள்ளான மனிதனைக் கொன்று ஆவிக்குரிய உயிரைக் குடித்துவிடும் பெலனுள்ளது; எனவே, எச்சரிக்கையோடு பயணித்தால் மாத்திரமே ஆவிக்குரிய மூச்சை நாம் காத்துக்கொள்ள முடியும். 

கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டுவந்த ஜனங்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஒடுகிற தேசத்துக்குப் போங்கள் என்று சொன்னதோடு, நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன் என்றும் கூறினார் (யாத். 33:1-2). அழைப்பின் திசையினை நோக்கி அனுப்புவதும், பயணத்திற்கான பாதுகாப்பினை அளிப்பதும் அழைத்தவரது பொறுப்பே. வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன் (யாத். 23:20) என்றும், நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு 

விரோதியாயும் இருப்பேன். என் தூதனானவர் உனக்குமுன்சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன் (யாத். 23:22-23) என்று அவர் வாக்குபண்ணியிருக்கிறாரே. யாக்கோபின் பிரயாணத்தின்போதும், தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாயிருந்தார்களே (ஆதி. 28:12). அதுமாத்திரமல்ல, அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி. 28:15) என்றும் வாக்குக்கொடுத்தாரே. என்றபோதிலும், இஸ்ரவேல் ஜனங்களை அனுப்பியபோது, 'ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் (யாத். 33:3) என்று தன்னையே தடுத்து நிறுத்திக்கொண்டார். ஜனங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்றும், பிரயாணம்பண்ணவேண்டும் என்றும் விரும்பினபோதிலும், அவர்கள் நிர்மூலமாகிவிடாதபடி தன்னையே நீக்கிவைத்துக்கொள்ள விரும்பினார் தேவன். நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை (புல 3:22)

என்று எழுதப்பட்டிருந்தபோதிலும், அவர் உடனிருந்ததால் நிர்மூலமாகிவிடும் நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களும் உண்டு. எனவே, அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை (யாத். 23:21). இதனையே தாவீதும் எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? (சங். 60:10) என்று எழுதுகின்றார்; என்றபோதிலும், அவரது பாதுகாப்பினை பதிவு செய்ய மறக்கவில்லையே (சங். 60:11,12). உடன்வர விரும்புபவரை உதறிவிடவேண்டாம் (உபா. 32:12). 

ஜனங்களைப் பரிசுத்தப்படுத்து என்று மோசேயைப் பார்த்துச் சொன்ன தேவன் (யாத். 19:10), அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான் (யாத் 19:12) என்றும் எச்சரித்தாரே. பரிசுத்தமின்மையால், பலியாகிவிடக்கூடாது என்பதற்காக விதிக்கப்பட்ட பாதுகாப்பின் கட்டளைதானே அது. பிரயாணத்திற்கான பாதுகாப்பினை பிற பரிசுத்தவான்கள் மூலமாக வழங்கிவிட்டு, நம்முடைய வாழ்க்கை அழிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்  தூரத்தில் நின்றுகொண்டிருக்கக்கூடும். பாதுகாப்பினை பிறர் மூலமாய் அல்ல பிதாவின் முன்னிலையிலேயே பெற்றுக்கொள்ளும் பிள்ளைகளாக மாறுவோம்.


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி