Skip to main content

கொடுத்தது கொடுக்கவே (யோவா 3:16)

கொடுத்தது கொடுக்கவே



 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவா 3:16)


'தேவன் கொடுத்ததைக் கொண்டாடும் நாளே' கிறிஸ்து பிறப்பின் பண்டிகை. தேவனால் தங்களிடத்தில் கொடுக்கப்பட்டதை, தேவனுக்கே திருப்பிக்கொடுக்க சிலர் மறந்துவிடுகிறார்கள், வேறுசிலர் மறுத்துவிடுகிறார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்  (மத் 6:20) என்றார் இயேசு கிறிஸ்து. மண்ணிலுள்ள பொக்கிஷங்களை மனப்பூர்வமாகக் கொடுப்போமென்றால், மறுவாழ்விலும் அதன் பலனைக் நம்மால் காண இயலும். 'உலத்தில் சம்பாதித்தவைகளை உலகத்திலேயே அனுபவித்தால் போதும்' என்ற மனதுடையோர், மரணவேளையில் மண்ணிலேயே அதனை விட்டுச்செல்ல நேரிடும். நம்முடைய பொக்கிஷத்தை பரலோகத்திற்குக் கொண்டுசெல்லும் ஒரே வழி, கிறிஸ்துவுக்காக அதனை செலவுசெய்வதே. எனவே தாவீது, என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்; பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய் (சங் 16:2,3) என்று தன் இருதயம் தன்னிடத்தில் பேசிக்கொண்டதை, நாம் வாசிக்கும்படியாக பதிவுசெய்திருக்கிறார். ஆபிரகாம், அன்னாள் ஆகியோரின் வாழ்க்கை இந்நாள் வரை நமது மனதை ஆக்கிரமிப்பதின் அர்த்தம் கர்த்தர் கொடுத்ததை கர்த்தரிடமே கொடுத்துவிட அவர்கள் ஆயத்தமாயிருந்ததே. 

இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றபோது, அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான் (மாற் 10:21,22); பொக்கிஷங்கள் அனைத்தும், தான் அனுபவிப்பதற்காகவே என்ற நினைவோடு வாழ்ந்தவன் அவன். தனக்கு இருந்த நிறைவு அவனது கண்ணில் புரையாயிருந்தது. 'தேவன் அவனிடத்தில் அன்புகூர்ந்ததினால்' கொடுத்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க அவன் ஆயத்தம்; ஆனால், அவைகளை மற்றவர்களுக்கு அன்புகூர்ந்து கொடுக்கவோ அவன் ஆயத்தமாயில்லை. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மத் 19:19) என்ற மறுமுனை அவனது வாழ்க்கையைப் பாதிக்கும் கூர்முனையாயிருந்தது. 

சிலர், தங்களிடத்தில் உள்ளதைக் கொடுக்காவிட்டாலும், தங்களுக்குச் சமமாகப் பிறருக்குக் கொடுக்கப்படுவதை விரும்புவதில்லை. எஜமான் தன் ஊழியக்காரியகாரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு (மத் 20:8) என்று சொன்னபோது, முந்தி அமர்த்தப்பட்டவர்களின் கண்கள் காணும்படியாக, பிந்தி அமர்த்தப்பட்டவர்கள் முதலில் வந்து கூலியை வாங்கிச் சென்றார்கள். அதனைப் பார்த்துக்கொண்டிருந்த முந்தி அமர்த்தப்பட்டவர்கள், தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், ஆனால், அவர்களுக்கும் ஆளுக்கு ஒவ்வொரு பணமே கொடுக்கப்பட்டபோது, 'எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்' (மத் 20:10-12). மற்றவர்களுக்கு கொடுக்கப்படுவதைப் பார்த்து, பார்த்து தங்களுடைய மனதின் திருப்தியை இழந்தவர்கள் இவர்கள். 

சிலரோ, மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்போது வாசலுக்கு வெளியே நின்றுவிடுகின்றார்கள். இளைய குமாரன் எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம் (லூக் 15:21-23) என்றான். இளைய குமாரனுக்குச் செய்யப்படுவதை அறிந்த மூத்த குமாரனோ வீட்டிற்கு வெளியிலே நின்றுவிட்டான். (லூக். 15:28) 

 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி