Skip to main content

ஒளியை ஒளித்துவைக்காதே (யோவான் 1:9)

ஒளியை ஒளித்துவைக்காதே



உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9) 

 

மனிதன் ஒளியினை அடையவே ஒரேபேறான குமாரன் உலகிற்குக் கொடுக்கப்பட்டார். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது (1யோவான் 1:5) என்று எழுதுகின்றார் யோவான். இந்த ஒளியோடு இருந்த உறவை இழந்துபோயிருந்ததால், இருள் மனிதனை ஆக்கிரமித்துக்கொண்டது; ஆளுகைசெய்தது. என்றபோதிலும், படைத்தவரைப் புரிந்துகொண்டு, பரிசுத்தமாக வாழ தங்களை அர்ப்பணித்து, தீமைகளுக்குத் தங்களைத் தூரமாக்கிக்கொண்டு, தேவனுக்குச் சமீபமாய் வாழ்ந்த வெகுசிலர் 'நீதிமான்கள்' மற்றும் 'தீர்க்கதரிசிகள்' என்ற எல்லைக்குள் முன்குறிக்கப்பட்டனர். தேவனுக்காக ஜனங்களோடு பேசுபவர்களாகவும், ஜனங்களுக்காக தேவனோடு பேசுபவர்களாகவும் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் இவர்களே. நீதிமான்களாக வாழும் மனிதர்கள் மூலமாக பிறரையும் நீதியின் வழிக்குள் நடத்த தேவன் வகுத்த திட்டத்தினையே, எபிரெய ஆக்கியோன், பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் (எபி. 1:1) என்று குறிப்பிடுகின்றார்; என்றபோதிலும், இருளின் ஆதிக்கத்திலிருந்து மீளுவதில் இழுபறியே நீடித்தது. மனிதர்கள் செய்த பாவத்தின் சம்பளமான மரணம், மிருகங்களின் மீதும், பறவைகளின் மீதும் பலி என்ற பெயரில் திணிக்கப்பட்டபோதிலும், பாவத்தின் வேலிக்குள்ளே மனிதனின் வாழ்க்கை அவ்வப்போது அகப்பட்டுக்கொண்டிருந்தது. 

பலியை நிறுத்தும் பலியாக உன்னதத்திலிருந்து பிதாவின் ஒளியை உலகத்திற்குக் கொண்டுவந்தார் இயேசு கிறிஸ்து. இதனையே, இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசா. 9:2) என்று தீர்க்கதரிசனமாய் உரைக்கிறார் ஏசாயா. இயேசு கிறிஸ்துவும், நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றாரே (யோவா 9:5). உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவா 1:12). இவ்விதமாக, பிதாவின் ஒளி பிள்ளைகளின் வாழ்க்கையில் வைக்கப்பட்டது. எனவே இயேசு கிறிஸ்து ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் (யோவா 8:12)என்றும், நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது (மத் 5:14) என்று குறிப்பிட்டுச்சொன்னாரே. பிதாவின் வெளிச்சம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மனிதர்களின் வாழ்க்கையில் வைக்கப்பட்டது. ஒளியாக உலகிற்கு வந்த வழியே இயேசு கிறிஸ்து. எண்ணெய் இல்லாமலும், எரியாமலும் விளக்காக மட்டுமே வாழ்க்கையை வைத்துக்கொண்டிருந்தால், வருகையில் விட்டுவிடப்படுவோம். 

மேலும், விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத் 5:15,16) என்ற இயேசு கிறிஸ்துவின் போதனை, ஒளியாய் நம்முடைய வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இயேசு கிறிஸ்துவை நாம் ஒளித்துவைத்துவிடாமல் மற்ற மனிதர்கள் காணும்படியாக உயர்த்திவைக்கவேண்டும் என்பதையே சுட்டிக்காட்டகின்றது. 

என்றபோதிலும், 'நாம் ஒளியல்ல, அவர் வாழ்க்கையில் இருப்பதாலேயே ஒளிருகிறோம்' என்பது ஒளிந்திருக்கும் இன்னுமோர் சத்தியம். எனவே யோவானைக் குறித்து, 'அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்' (யோவா 1:8) வாசிக்கின்றோமே. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள் (யோவா 15:4) என்பது எரிந்துகொண்டிருக்கும் நமக்கு விடுக்கப்பட்டிருக்கும் ஓர் எச்சரிப்பின் செய்தி.

 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி