Skip to main content

நாணல்

 

நாணல்



அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். (மத் 12:18-20)


வாழ்க்கையில் உண்டாகும் போராட்டங்கள், நம்மை போருக்குத்தான் ஆயத்தப்படுத்துகின்றன என்ற சத்தியம் நமது சிந்தையிலெங்கும் பரந்து, படர்ந்து, புதைந்து, பரவியிருக்குமென்றால், எப்போதும் போருக்கு ஆயத்தமாகவேயிருக்கும் வீரனைப் போல பட்டயத்தோடு பயமின்றி உலாவிக்கொண்டிருப்பது மாத்திரமல்ல, பின்வாங்காமல் போர்முனையினையும் எதிர்நோக்கிக் காத்திருப்போம். எத்திசையில் சத்துருவின் சத்தம் நித்தம் நித்தம் முழங்கிக்கொண்டிருந்தாலும், சத்தியத்தை அறிவிக்க முடியாதபடி நம்மை ஒருபோதும் அது தடுத்து நிறுத்திவிட முடியாதே. எக்காளத்தை வாயில் வைத்து, எரிகோவை ஜெயிக்கவேண்டியவர்களல்லவா நாம். அவ்வாறே, கர்த்தருடைய வீட்டின் மேல் சத்தரு கழுகைப்போல் பறந்துவரும்போது, எக்காளத்தை வாயில் வைத்து எச்சரிக்கவேண்டியவர்களல்லவா நாம் (ஓசியா 8:1).

விழுப்புண்களைப் பார்த்து அழுதுகொண்டிருப்பதற்கு அல்ல; வெற்றியைப் பார்த்து களிகூரும்படியாக அழைக்கப்பட்டவனே வீரன். காயங்கள் பல பட்டாலும், கல்லெறி பட்டாலும், கனிகளைப் பறித்திருப்போமென்றால்; நம்முடைய கரங்கள் காயங்களை ஆற்ற அல்ல, கனிகளை நினைத்து ஆர்ப்பரிக்கவே முந்திக்கொள்ளவேண்டும். 

நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை (2கொரி 4:8,9) என்று எழுதுகின்றாரே அப்போஸ்தலனாகிய பவுல். நாணலைப் போல நம்முடைய வாழ்க்கை நெரிக்கப்பட்டாலும், அவருக்கும் நமக்கும் இருக்கும் உறவிலோ நாம் ஒருபோதும் முறிக்கப்படுகிறதில்லை என்பதை அறிந்துகொள்வது அவசியம். என்றபோதிலும், பாடுகளைச் சந்திக்கும்போது, நெருக்கங்களில் அகப்படும்போது, உபத்திரவங்கள் உண்டாகும்போது, ஆண்டவருக்கும் தங்களுக்கும் இடையிலான உறவிலிருந்து தூரமாகப் போய்விடும் மக்களே இன்றைய நாட்களில் அநேகர். 

வாழ்க்கையில் உண்டாகும் பல்வேறு போராட்டங்களில், உன்னதருடனான உறவைக் காத்துக்கொள்வதே ஆத்துமாவுக்கு முதல்.ஆண்டவருக்கும் நமக்கும் இடையிலான உறவினை முறிக்க, பல்வேறு சூழ்நிலைகளை சத்துரு உருவாக்கினாலும், நெரிந்த நாணலைப் போல நம்முடைய வாழ்க்கை காணப்பட்டாலும், நாணலாகிய நம்முடைய வாழ்க்கையை சத்துருவின் கைகள் அசைத்துவிட முடியாதே. 

நெரிந்த நாணலாக ஒருவேளை நாம் இருந்தாலும், நமக்கு இருக்கும் சிறந்த வலிமையை நாம் புரிந்துகொள்வது அவசியம்; நம்முடைய வலிமையை வெளிப்படுத்தும் வார்த்தைகள் சத்துருவின் வாயிலிருந்தே வெளிப்படுகின்றதே. அசீரியாவின் ராஜா லாகீசிலிருந்து தர்தானையும், ரப்சாரீசையும், ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு அனுப்பினபோது, ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? யுத்தத்திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கைவைத்திருக்கிறாய்? இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான் (2இரா 18:19-21) என்றல்லவா கூறுகின்றான்; நெரிந்த நாணலைப் பற்றியதோர் சிறந்த குணம் ரப்சாக்கேயின் வார்த்தைகளில் இங்கே வெளிப்படுகின்றதல்லவா. நம்முடைய வாழ்க்கையும் இப்படிப்பட்டதே; எத்தனையாய் நாம் நெரிந்திருந்தாலும் சத்துருவின் கைகள் நம்மை பறித்துவிடமுடியாது, முறித்துவிடமுடியாது. நமக்கும் தேவனுக்கும் இடையிலான உறவிற்கு இடையில், சத்துரு ஊடுருவ முயன்றால், அவனது உள்ளங்கையில் நாம் பட்டு உருவிப்போய்விடுவோம் என்பது நிச்சயம். இஸ்ரவேல் மக்களை விடுக்கும்படியாக தெரிந்துகொள்ளப்பட்ட மோசே நாணலுக்குள்ளேயே மறைத்துவைக்கப்பட்டான். மோசேயைக் காக்கும்படியாக பெட்டியாக மாறவும் சில நாணல்கள் பறிக்கப்பட்டிருந்தன ஆனாலும், ஆண்டவருடைய திட்டத்திலிருந்து அவைகள் முறிக்கப்பட்டிருக்கவில்லை; பறிக்கப்படாத நாணல்களோ, சத்துருவின் கண்பார்வையினை மறித்து நின்றன; நம்முடைய வாழ்க்கையும் இத்தகைய நாணலைப் போலக் காணப்படக்கூடும். (யாத். 2:3,4)

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி