Skip to main content

அளந்தால் அளக்கப்படும்

அளந்தால் அளக்கப்படும்

 

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.(லூக் 6:38)

கோடை விடுமுறைக்காக பீஹாரிலிருந்து தூத்துக்குடிக்கு வந்திருந்தேன். விடுமுறை நாட்களின்போது, எனது மகள் ஜெரின் கிரேஷியாவின் மருந்துவ பரிசோதனைக்காக, மதுரையில் உள்ள அரவிந் கண் மருத்துவமனைக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். காரில் செல்ல தீர்மானித்திருந்த நான், எனது உடல் நிலையினைக் கருதியும், தூரத்தைக் கணக்கில் கொண்டும், பேருந்தில் செல்ல தீர்மாணித்தேன். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தூத்துக்குடியிலுள்ள எனது மனைவியின் வீட்டிலிருந்து ஆட்டோவில் புறப்பட்டு, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தேன். பேருந்து புறப்பட்டது; காலை சுமார் ஒன்பதரை மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்; அங்கிருந்து ஆட்டோவில் அரவிந் கண் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்து மருத்துவ ஆலோசனையினைப் பெற்று, தூத்துக்குடிக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அரவிந் கண் மருத்துவமனையிலிருந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம்; தூத்துக்குடி பேருந்து ஆயத்தமாயிருந்தபோதிலும், மதிய உணவை பேருந்து நிலையத்திலேயே உண்ட பின்னர் பயணிக்கலாம் என்று எண்ணி, பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கை இருக்கைகளில் அமர்ந்தவாறு கொண்டுவந்திருந்த உணவினைச் சாப்பிடத் தொடங்கினோம். நான் முதலில் சாப்பிட்டு முடித்தேன், தொடர்ந்து எனது மனைவி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அப்போது, ஒரு நபர் தனது வலது கையை வயிற்றில் மடித்து வைத்திருந்த வண்ணம் எங்களை நோக்கி நடந்து வந்தார். வலது கை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டது போன்றோ அல்லது பிறப்பிலேயே அப்படிப் பிறந்துவிட்டது போன்றோ அவர் தனது பாவனைகளால் வெளிக்காட்டிக்கொண்டிருந்தார். எங்கள் அருகில் வந்ததும், 'அண்ணே பசிக்குது' என்று சொன்னார். வலது கையைத் தவிர அவரது உடலில் எவ்வித பழுதையும் நான் காணவில்லை. எனவே, எனது கையால் அவரது வலது கையைப் பிடித்து இழுத்துப் பார்த்தேன், என்னால் இழுக்க முடியவில்லை, கை மடித்த வண்ணமாகவே இருந்தது. இந்த கையை நீட்ட முடியாதா? என்று அந்தச் சகோதரரிடம் கேட்டபோது, 'இல்ல முடியாதுண்ணே' என்று பரிதாபக் குரலில் பதில் சொன்னார். எங்காவது பணி செய்ய உங்களுக்கு விருப்பமா? வருகிறீர்களா? என்று கேட்டபோது, அமைதியாக நின்றுகொண்டிருந்தார். எனது மனைவியோ வலதுகையால் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள், இவரோ வலதுகையை வயிற்றில் வைத்த வண்ணம் நிற்கிறாரே என்று கலங்கினேன் நான். எங்களிடம் அவருக்குக் கொடுக்கும் அளவிற்குச் சாப்பாடு அதிகம் இல்லாததினால், பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். தனது இடது கையை நீட்டி அதனைப் பெற்றுக்கொண்டவண்ணம் திரும்பிச் சென்றார்.

அவர் சென்றதும், அவரைக் கண்காணிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உண்டானதினால், வேறொரு வழியில் அவர் அறியாத வண்ணம் நான் அவரைப் பின் தொடர்ந்து சென்றேன். எங்களை விட்டு, சுவரின் அந்தப் பக்கம் சென்றதும் அவர் வலது கையை நன்றாக நீட்டியவாறு நடந்து சென்றார். பேருந்து நிலையத்திற்குள் இருந்த ஒரு சாலையோரக் கடையில் நின்று நாவற்பழம் வாங்கினார். இதனைக் கண்டவாறு, நான் சற்று முந்திச் சென்று, பேருந்து நிலையத்தின் பிரதான வாசலில் நின்றுகொண்டிருந்தேன். பேருந்து நிலையத்திலிருந்து வெளியே அவர் செல்லும்போது, அவரது தோளில் கைபோட்டவாறு, அண்ணன் நல்லாயிருங்கீங்களா? என்னைத் தெரியுதா? என்று கேட்டேன். அவரோ, திரு திருவென விழித்தார். வேறோன்றும் பேச என் வாய் வார்த்தைகளைத் தரவில்லை. அவரைச் சந்தித்துவிட்டு திரும்ப வந்துகொண்டிருந்தேன். அப்போது, பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு அந்தச் சகோதரனை இத்தனையாய் நீ பின்தொடர்கின்றாயே, நான் உனக்குக் கொடுத்தவைகளுக்காக உன்னைத் தொடருகிறேன் என்பதையும் அறிந்துகொள் என்று இறைவன் பேசுவதைப் போன்ற சத்தம் என் இதயத்தில் தொனிக்க. எனக்கும் அன்று அது பாடமாயிற்று. சின்னச் சின்ன வியாதிகளையெல்லாம் காரணம் காட்டிக்கொண்டு, ஒன்றும் செய்ய இயலாதவர்கள் போல தேவனுக்கு முன் சாகும் வரை சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் மனிதர்கள் உண்டே. தலைவலி என்றாலே தாலந்துகளை ஒளித்து வைத்துக்கொண்டு உறங்கவே முற்படும் நமக்கு இத்தகைய மனிதர்கள் ஓர் பாடம்தானே. நானும் அன்று இப்பாடத்தைக் கற்றவனாக, மதுரை பேருந்து நிலையத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு பேருந்து ஏறி தூத்துக்குடி பயணமானோம்.

எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும். லூக்கா 12:48 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி