Skip to main content

விட்டுவிடப்படுவது விவாகத்திற்கே

 விட்டுவிடப்படுவது விவாகத்திற்கே


நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்துவந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக. (உபா 24:19)

ஆசீர்வாதங்களை மாத்திரமல்ல, ஆசீர்வதிப்பவரையே ஆத்தும மணவாளனாக ஆதாயப்படுத்தவே அழைக்கப்பட்டவர்கள் நாம். அவரது வயல்களில் சிந்துபவைகளைப் பொறுக்கிக்கொண்டிருப்பவர்களாக மாத்திரமல்ல, வயலுக்கு எஜமானாகிய அவரையே நமதாக்கிக்கொள்ள ஆயத்தமாகவெண்டியவர்கள் நாம். ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத் 6:26) என்ற வசனத்தை வேதத்தில் வாசிக்கும்போதெல்லாம், அதிகமானதோர் நம்பிக்கை நமது உள்ளத்தில் உருவெடுத்தபோதிலும், தனிப்பட்ட விதத்தில் நேரடியாக நமக்கு உபயோகமேதுமில்லாமல், ஊர் ஊராகப் பறந்துகொண்டிருக்கும் அத்தகைய பறவைகளுக்காக நமது விரல்களில் ஒட்டியிருப்பவைகளைக்கூட உதறிவிட மறந்துபோகின்றோம் அல்லது மறுத்துவிடுகின்றோம். எனினும், பறவைகளைப் போல இங்கும் அங்கும் திரிந்துகொண்டிருக்கும் நமக்கு, அவரது கரங்களிலிருந்து விட்டுவிடப்படும் ஆசீர்வாதங்களோ ஏராளமானதல்லவா? அவைகள் அனைத்தும் அவரை நம்முடைய ஆத்தும மணவாளனாகச் சுதந்தரித்துக்கொள்ளவே.  

மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்று சொன்னபோது, நகோமி அவளைப் பார்த்து, என் மகளே, போ என்றாள். அவள் போய், வயல்வெளிகளில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள். அப்போது வயல்வெளிக்கு வந்த போவாஸ் அறுக்கிறவர்களை நோக்கி, 'கர்த்தர் உங்களோடே இருப்பாராக' (ரூத் 2:2-4) என்று அவர்களை ஆசீர்வதித்ததோடு மாத்திரமல்லாமல், தன்னுடைய வயல்வெளியில் அறுக்கிறவர்கள் ஊடே புதிதாக உலாவிக்கொண்டிருக்கும் பெண் ஒருத்தியை அடையாளம் கண்டுகொண்டவனாக, 'அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள்?' என்று கேட்டபோது, அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடேகூட வந்த மோவாபிய பெண்பிள்ளை.அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள். இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான். அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு என்றான் (ரூத் 2:5-8). அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம்பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான். அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய 'ஒரு மரக்கால்' வாற்கோதுமை கண்டது (ரூத் 2:15-17).

மேலும், 'என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு' என்றும் சொன்னான் போவாஸ். (ரூத். 2:21) 

பொறுக்கிக்கொள்ளும்படியாகக் கதிரைக் கொடுத்த போவாஸுக்காக, தனது மாமியாகிய நகோமியின் ஆலோசனையின்படி, தன்னையே கொடுக்க ஆயத்தமானாள் ரூத். போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான்; அப்பொழுது அவள்: மௌ;ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள். நீ யார்? என்று போவாஸ் கேட்டபோது, 'நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி' என்றாள் (ரூத் 3:7,8). அப்பொழுது போவாஸ் அவளை நோக்கி, 'நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக' என்றதோடு, தன்னையே கொடுக்க ஆயத்தமான அவளுக்கு 'ஆறுபடி வாற்கோதுமையை அள்ளிக் கொடுத்து,  மனைவியாகவும் ஏற்றுக்கொண்டானே.' (ரூத் 3:17; 4:10)

நம்முடைய வாழ்க்கையும் இப்படிப்பட்டதே; எகிப்து என்னும் பாவத்தின் அடிமைத்தனத்தில் அகப்பட்டுக் கிடந்த நாம், கிறிஸ்து என்னும் மணவாளனை அடையாளம் கண்டுகொண்டபோது, அவரது வயல்வெளிகளில் நமக்காக அவரது வேலைக்காரர்களால் அதாவது ஊழியர்களால் சிந்தவிடப்பட்ட அநேக ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்படிச் செய்தார்; என்றபோதிலும், பொறுக்கிக்கொள்ளும்படியாக மாத்திரமல்ல அவரது நேசத்தில் பொதிந்துகொள்ளும்படியாகவும், புதைந்துகொள்ளும்படியாகவும் நம்மையே அவருக்காகக் கொடுக்க நாம் ஆயத்தமாகும்போதோ இரட்சிப்பு என்னும் போர்வையால் மூடி 'மணவாட்டி' என்ற மகிமையான ஸ்தானத்திற்குள்  நம்மை இழுத்துக்கொள்ளுகின்றார். 


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி