Skip to main content

சபையின் சங்கிலிகள்

 

சபையின் சங்கிலிகள்



ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற இனிய நாமத்தில் அன்பின் நல் வாழ்த்துக்கள். கர்த்தர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. இம்மட்டும் கண்மணிபோல நம்மைக் காத்த தேவனுக்கு கனமும் மகிமையும் உண்டாகட்டும். 'சிநேகிதன்' வாட்ஸ்அப் குரூப்-ல் நடைபெற்றுக்கொண்டிருந்த எழுத்து உரையாடல்களைப் தொடர்ந்து பார்த்தவனாகவும், இந்த உரையாடல்களுக்கு நீ பதிலெழுது என்று பலமுறை என் இதயத்தில் ஆவியானவர் ஏவினபடியினாலும் நியாயாதிபதியாக என்னை அல்ல வேதத்தை எழுதினவரையே நிறுத்தியும், நீதிபதியாகிய அவரது தீர்ப்பினையே அழுத்தியும் இம்மடலில் பதிலெழுத விரும்புகின்றேன். 'ஐக றந வரசn யறயல கழசஅ வாந றழசன ழக புழனஇ ஐவ றடைட டிநஉழஅந ய ளறழசன ழக ளுயவயn' என்ற சத்தியத்தை நாம் மறந்து, சத்துருவின் பக்கம் சரிந்துவிடாதபடிக்கு கர்த்தர் நம்மைக் காப்பாராக. எனவே, கர்த்தருடைய வசனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தையும், முதலிடத்தையும் முதலில் நாம் அறிந்துகொள்ளவேண்டியது மிக மிக அவசியம். எனவே, 'வசனமாகிய விளக்கை' நாம் அணைத்துவிட்டால், நமது வழிகள் அனைத்தும் இருளாகிவிடும்; தொடர்ந்து வேதத்திலும், தியானத்திலும்  நாம் பயணிப்பது என்பது முடியாததாகிவிடும். வெளிப்படுத்தப்பட்டிருப்பவைகளுக்கு நாம் கீழ்ப்படியத் தவறிவிடுவோமென்றால்,  வரவிருக்கும் வெளிப்பாடுகளுக்கு நாம் தூரமாகிவிடுவோம். எனவே, வசனத்தின் முக்கியத்துவத்தை முதலில் சற்று நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தேவ ஆவியானவர்தாமே தெளிவாகப் புரிந்துகொள்ள கிருபைசெய்வாராக. 

உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும் (சங் 119:103) என்ற அனுபவம் நம்முடைய வாழ்க்கையிலும் உண்டாகட்டும். மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் (ஏசா 55:10,11) என்ற வசனம் அவரது வார்த்தைகக்கு இருக்கும் வலிமையை எத்தனையாய் நமக்கு வெளிப்படுத்துகின்றது.

உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர் (சங் 138:2) என்பதே சங்கீதக்காரனின் வாக்கு. மேலும், என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் (ஏசா 66:2) என்றும், கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள் (ஏசா 66:5) என்றுமே கர்த்தருடைய வசனத்திற்கு வாழ்க்கையை அர்ப்பணித்தோரைச் சுட்டிக்காட்டி ஏசாயா தீர்க்கதரிசியும் எழுதுகின்றார். 

'வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை' (மாற் 13:31) என்ற வார்த்தை இயேசு கிறிஸ்துவின் வாயிலிருந்து புறப்பட்டது. அதுமாத்திரமல்ல, அவ்வாறே பவுலைக் குறித்தும்;, 'நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்' (2 பேது 3:15) என்றே எழுதுகிறார் பேதுரு. மேலும், வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2 தீமோ 3:16,17) என்றே தீமோத்தேயுவும் குறிப்பிடுகின்றார். எழுதப்பட்டிருப்பதின் நோக்கத்தை நாம் அறிந்து, உணர்ந்து, எழுதியவரின் விருப்பத்தை நிறைவேற்றாதபடியும், அதற்குக் கீழ்ப்படியாதபடியினால் அவருக்கும் கீழ்ப்படியாதவர்களாகும்படியும் நம்மை தினம் தினம் திசை திருப்ப விரும்புகிறவன் சத்துரு என்பதை நாம் புரிந்துகொண்டால், சாத்தான் வெட்டிவைத்திருக்கும் குழியில் புதைந்துபோகமாட்டோம். 

எனவே சங்கீதக்காரன், உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும் (சங் 119:18) என்று எழுதுகின்றான். அப்படியே இயேசு கிறிஸ்துவும் தனது சீஷர்களை நோக்கி, 'பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை' (மத் 13:11) என்று கூறுகின்றார். 'நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்' என்று பிசாசு எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளைக் கொண்டே இயேசு கிறிஸ்துவை வஞ்சிக்க நினைத்தபோது, இயேசு கிறிஸ்து பிரதியுத்தரமாக, 'மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே' (மத் 4:3,4) என்றே ஜெயித்தார். அவ்வாறே, பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னபோதிலும், அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றே சொல்லி அவனை ஜெயித்தார். மேலும், மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னபோதும் அப்பாலே போ சாத்தானே;  உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்று சொல்லியே அவனை ஜெயித்தார். அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள் (மத் 4:5-11 (மத் 4:7). எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் அனைத்தும், ஆவியானவரால் அருளப்பட்டவைகளே; இதில் சந்தேகம் ஏதுமில்லை; ஆனால், அந்த வார்த்தைகள் யாருடைய வாயிலிருந்து வெளிவருகின்றன; அதன் நோக்கம் என்ன? என்பதை நாம் அறிந்துகொள்வதே மிக மிக மிக முக்கியமானது. சொல்லுவது பிசாசு என்பதை அறியாமல், வேதத்தில் எழுதப்பட்டிருப்பதுதானே என்ற எண்ணத்தில் 'கீழே குதித்துவிட்டால்' வேதனைதான் மிஞ்சும்.  

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது (யோவா 1:1) என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து வேதத்தில் வாசிக்கின்றோமே, ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிற (எபி 4:12) தேவனுடைய வாளாகிய வார்த்தைக்கு விரோதமாக நாம் எழும்பி நின்றால் நமது வாழ்க்கையே வீழ்ந்துபோகும் என்பதை விளக்கவேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட, எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாத வாரிசுகளாக நம்மை மாற்றிவிடவே சத்துருவாகிய சாத்தான் விரும்புகிறான்; இதற்கு நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டியது அவசியம். 'நாம் அறிந்துகொள்ளும்படியாகவே நம்முடைய கரங்களில் எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கும் கற்பனைகளை கோபத்தில் நாம் எறிந்து உடைத்துவிட்டால் சிதறிப்போன அது சிறிதாகி காணாமற்போய்விடாது; கற்பனைகள் என்றும் அவரது கரத்திலேயே இருக்கின்றன; நாம் அறிந்துகொள்ளும்படியாகவே அவைகள் எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன; நம்மை உருவாக்கும்படி கொடுக்கப்பட்ட அதனை உடைத்துவிடக்கூடாது' என்பதை உணர்ந்துகொள்வது அவசியம். ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் (யோவா 12:47,48) என்றும் இயேசு கிறிஸ்து கூறிச்சென்றாரே. ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான் (மத் 5:19) என்கிறார் இயேசு கிறிஸ்து. இந்த ஆதாரங்கள் அனைத்தும் ஆண்டவரது வார்த்தைக்கு இருக்கும் வல்லமையையும், வலிமையையும் எத்தனை அழகாய் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. 

வார்த்தைக்கு இருக்கும் வலிமையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த முன்னுரையை ஆவியானவர் முன்நடத்தினபடி எழுதியிருக்கிறேன். 

சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டபோது, இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:  நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்  (மத் 18:1-3). 'எவன் பெரியவனாயிருப்பான்?' என்ற கேள்விக்கு 'பரலோகத்தில் பிரவேசிப்பீர்களா?' என்பதை முதலில் நீங்கள் உறுதி செய்யுங்கள் என்ற உத்தரவுதான் இயேசுவினிடமிருந்து கிடைத்தது. 

மற்றுமொரு சம்பவத்தில், செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள். அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள். அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில்; நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள்  பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு  ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்று பதிலளித்தார். அப்போது, மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள் (மத் 20:20,21,23,24) என்று வாசிக்கின்றோமே. அத்துடன், உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன் (மத் 20:26) என்ற உச்சிதமான மற்றும் உன்னதமான ஓர் பதிலையும் சீஷர்களின் உள்ளத்தில் அவர் பதித்தாரே.  'பதவி ஆசையினால், பகைமை உருவாகின்றதை அல்லவோ வேதம் இங்கு வெளிக்காட்டுகின்றது.' இத்தகைய பிசாசின் சூழ்ச்சிக்கு நாம் தப்பிக்கொள்வது அவசியமல்லவா. 

தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார் (1கொரி 12:28) என்ற வார்த்தை ஆவியானவரால் வரிசைப்படுத்தப்பட்டது; நம்முடைய வசதிக்காக அதனை மாற்றி எழுதிவிட முடியாது. ஆவியானவர் எழுதியிருப்பதின்படி. ஆதி சபையில் முதலாவது இடம் வகித்தவர்கள் அப்போஸ்தலர்களே; ஆண்டவர் நமது கரங்களில் எழுதிக்கொடுத்திருக்கும் வேதத்தின் ஒரு எழுத்தையாகிலும், எழுத்தின் உறுப்பையாகிலும் நாம் மாற்றி எழுதக்கூடாதே. அவ்வாறே எபேசியருக்கு எழுதும்போதும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார் (எபே 4:13) என்றே எழுதுகின்றார் பவுல். இந்த இரண்டு வசனங்களையும் சற்று நாம் உற்று கவனிப்போமென்றால், மூன்று பிரிவுகளாக அவர்கள் பிரிக்கப்பட்டிருப்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும். முதலாவதாக அப்போஸ்தலர்களும், இரண்டாவதாக தீர்க்கதரிசிகளும் மூன்றாவதாக போதகர்களும் (Teachers) அத்துடன் ஆத்துமாக்களின் மேல் அக்கரைகொள்ளும் சுவிசேஷகர்களும், மந்தையை மேய்க்கும் மேய்ப்பர்களும் (Shepherds), பின்பு அற்புதங்கள் மற்றும் குணமாக்கும் வரங்களையுடையோரையும், ஊழியங்களையும் (1 கொரி. 12:5), ஆளுகைகளையும், பாஷைகளையும் என்பதை நாம் அறிந்துகொள்ள இயலும்; தலை கிறிஸ்துவே. (எபே. 5:23)

ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.  கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார் (1கொரி 12:5-11). எத்தனை வரங்கள் செயல்பட்டாலும், செயல்படுத்துகிறவர் ஒருவரே என்ற உணர்வு நமது உள்ளத்திற்குள் இருக்குமென்றால், எவரையும் உயர்ந்தவரென்றோ அல்லது தாழ்ந்தவரென்றோ நாம் காணாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ள முடியும். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான் (எபே 5:23; 1கொரி. 11:3) என்று போதிக்கும் வேதம், குணசாலியான ஸ்தீரி தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள் (நீதி 12:4) என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லையே. கிரீடத்தை புருஷர்கள் காலுக்கு அடியிலேயா போடுவார்கள்? அல்லவே, தங்கள் தலைக்கு மேல் அல்லவோ தூக்கி வைப்பார்கள். அப்படியென்றால், ஸ்திரீகள் புருஷர்களின் தலைக்கும் மேலிருக்கிறார்களோ! புருஷர்களின் தலை மனைவிக்குக் கீழே இருக்கிறதோ! அப்படியல்லவே, ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரை யொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள் (பிலி 2:3) என்று அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதும் சத்தியத்தின் சூத்திரமே இது. சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும் (நீதி 6:6-8). நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் தாலந்துகளின்படியும், வரங்களின்படியும், கிருபையின்படியும், வேதம் போதிக்கும் வரிசையை நமக்கானதாக ஏற்றுக்கொண்டு, ஒருவரையொருவர் சகோதரர்களாக சிநேகிப்போம் (மத். 23:8). எங்களுக்கு நிச்சயம் ஒரு தலைவன் தேவை, ராஜா தேவை என்ற இஸ்ரவேல் ஜனங்களின் விருப்பம் தேவனுக்கு விரோதமானதாகவே காணப்பட்டது. அப்போஸ்தலர்கள், தீர்;கதரிசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள் மற்றும் வரங்களையுடையோர் என எத்தனை பேர் சபையில் இருந்தாலும், எறும்புகளைப் போல வாழவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் (நீதி. 6:6-8); ஒருவருக்குப் பின்னால் ஒருவர் செல்ல அழைக்கப்பட்டிருக்கிறோம், குழுவாகவே செயல்பட அழைக்கப்பட்டிருக்கின்றோம். தங்களுக்கு தலைவன் வேண்டும் என்று கேட்ட இஸ்ரவேல் மக்களின் நிலை இறுதியில் தலைவனே இல்லாத நிலைக்குத் தலைகீழாக மாறிப்போனது, பாபிலோனிலும், அசீரியாவிலும் அகப்பட்டுக் கிடந்தது. தேவ கிருபை உடனிருப்பதாக.

யார் அப்போஸ்தலர்கள்? என்ற கேள்விக்கு  1 கொரி. 9:1, அப். 9:15, அப். 2:43, 2 கொரி. 12:12 போன்ற வசனங்களின் அடிப்படையில் இன்று நாம் விடைகாண விளைவோமென்றால், தற்போது மனிதர்கள் சூட்டிக்கொள்ளும் பட்டங்களெல்லாம் பட்டுப்போகும் என்பதே உண்மை.  தேவனைவிட்டு விட்டு தேவைகளை நோக்கியே ஒலிக்கும் பல தீர்க்கதரிசனங்களின் நிலையும் இதுவே. சபைகளில் இவர்களின் சரித்திரங்கள் சாய்ந்துவருவதினாலேயும், சபைகளில் இருக்கவேண்டிய இவர்களில் சிலர் தனிப்பட்டுச் செயல்படுவதினாலேயும், போதகர்கள் மற்றும் மேய்ப்பர்களோடு மாத்திரம் தனிப்பட்டு செயல்படுவதைப் போன்று நமது கண்களுக்குத் தெரிகின்றது. 'என் சபையைக் கட்டுவேன்' (மத். 16:18) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தை நம் எல்லோரின் இதயத்திலும் தொனிக்கட்டும். வரங்கள் செயல்படுவதினால் சபையை விட்டு விலகிச் செல்லாமல், நமக்கு அருளப்பட்டவைகளைக் கொண்டு அஸ்திபாரத்தின் மேல் (1 கொரி. 3:11) கட்டுவோம்; நாம் இங்கே கட்டுவது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்படும் (மத். 16:19). 'யார் பெரியவன்?' என்ற பெருமையை நம்மிலே விதைக்கவும், ஒற்றுமையை நம்மிலே குலைக்கவும் சத்துரு மேற்கொள்ளும் சதிகளிலிருந்து தப்பித்துக்கொள்ளுவோம். 'உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை, ஏழையில்லை பணக்காரன் இல்லை' என்ற பாடல் நமது உதடுகளில் மாத்திரமல்ல உள்ளத்திலிருந்தும் ஒலிக்கட்டும். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி