Skip to main content

பாரமும், பாரமும் (2தீமோ. 2:4)

 பாரமும், பாரமும்



போகவேண்டிய இடத்திற்கு நாம் போய்ச்சேரக்கூடாதபடிக்கு, புறமுதுகில் பாரத்தைக் கட்டி, வேகத்தைக் கட்டுப்படுத்தி, ஓடிக்கொண்டிருந்த நம்மை நடக்கச்செய்து, நடந்துகொண்டிருக்கும் நிலையிலிருந்தும் ஒரே இடத்தில் நம்மை நிற்கச்செய்துவிட முயற்சிப்பவன் சத்துரு. ஆத்துமாக்களைச் சந்திக்கவேண்டும் என்ற பாரத்தோடு புறப்பட்ட பலர், பாரதோடு ஓட முற்பட்டதால், பாதியிலேயே அவர்களது பரமதரிசனம் பறிபோய்விட்டது. அழைப்பினை நோக்கி ஓடத்தொடங்கின அவர்கள், பல்வேறு அலுவல்களில் சிக்கிக்கொண்டதால் (2தீமோ. 2:4), வலையிலிருந்து வெளியெற இயலாத மீன்களைப்போலவே சில காலம் கடலுக்கு வெளியே கரையிலே காற்றுவாங்கிக்கொண்டிருக் கின்றார்கள்' எனினும், விரைவிலே அவர்களது ஆத்தும பாரம் ஆவியாகிவிடும். 

'எங்கே நாம் அழைக்கப்பட்டோமோ?' அங்கிருந்து நம்மை அகற்ற முயற்சிப்பதுதான் சத்துருவின் முதற்பணி. எனவே எபிரெய ஆக்கியோன் ஆலோசனையாக எழுதும்போது, ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (எபி 12:1) என்று எழுதுகின்றார். 'பொறுமையோடே' என் பதம், மெதுவாக ஓடக்கடவோம் என்று அல்ல, மாறாக 'அவசரப்பட்டு எந்த சுமையையும் தூக்கிவிடக்கூடாமல், ஓட்டத்தைப் பாதிக்கும் காரியங்களில் சிக்கிக்கொள்ளாமல், எதை வாழ்க்கையோடு சேர்த்துக்கொள்ளவேண்டுமோ, அதை மாத்திரமே சேர்த்துக்கொண்டு நிதானமாக பொறுமையுடன் ஓடக்கடவோம்' என்பதையே குறிக்கின்றது. நம்மைப்போல மற்றவர்கள் இந்த காரியத்தைச் கச்சிதமாகச் செய்துமுடித்துவிடமுடியாது என்ற எண்ணத்தில், அநேக காரியங்களை நம்முடைய முதுகில் நாம் மூட்டை கட்டி ஏற்றிக்கொள்ளுகின்றோம்' விளைவு, எதற்காக நாம் அழைக்கப்பட்டேமோ அந்த ஓட்டத்தின் வேகம் தணிந்துபோய்விடும். 

அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தபோது, அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல (அப். 6:1,2) என்று திட்டமாய்  சொன்னார்களே. தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான் (நீதி. 27:8) என்று எழுதுகின்றான் சாலொமோன். மற்றவர்கள் கொடுக்கும் ஆலோசனையைக் கேட்டு கூட்டைவிட்டு நாம் வேறெந்த நபராலும் துரத்தப்பட்டவிடவும் கூடாது (ஏசா. 16:2). 

மோசே தனியொருவனாக இஸ்ரவேல் ஜனங்களை நியாயம்விசாரித்துக்கொண்டிருந்தான். ஜனங்கள் காலமே துவங்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள். இதனைக் கண்ட மோசேயின் மாமன், நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்று சொன்னதுடன், நீர் செய்கிற காரியம் நல்லதல்ல, நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்' இது உமக்கு மிகவும் பாரமான காரியம்' நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது (யாத் 18:13-18), பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்' இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும் (யாத். 18:22) என்று சொன்னான். 

இன்றும் இத்தகைய நிலையில் காணப்படும் மனிதர்கள் உண்டு. எல்லாரும் தன்னிடத்தில் வந்தால்தான், தான் 'தலைவன்'' இல்லையேல், அதனைத் தவறவிட்டுவேன் என்ற தவறான மனப்பாங்கோடு, பொறுப்புகளை யாருடனும் பகிர்ந்துகொள்ளாமல், கனத்தை யாருக்கும் கையளிக்காமல் கவனமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் உண்டு. சிலர் 'பாரமான காரியங்களைக்' கொடுத்துவிட ஆயத்தமாயிருப்பார்கள், ஆனால், பதவியை கொடுத்துவிடும் அளவிற்கு மற்றொருவனை ஆயத்தப்படுத்தமாட்டார்கள். இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு (எண்;. 27:20) என்று மோசேக்கு சொல்லப்பட்ட வார்த்தை அப்படிப்பட்டவர்களுக்கே. 


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி