Skip to main content

ஆமான் ஆகிவிடாதே (எஸ்தர் 3:5)

 ஆமான் ஆகிவிடாதே



ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான். (எஸ்தர் 3:5)


சரீரத்தையும், சிந்தையையும், மனதையும் பாதிக்கும் காரியங்களைக் கொண்டு, ஆவிக்குரிய வாழ்க்கையையே அடக்கம்செய்துவிட முற்படுகிறான் சத்துரு. உடலின் வெளிப்புறத்தில் ஆற்றக்கூடிய அளவிற்கே உண்டான காயத்தை, உள்ளத்தின் உட்புறம் வரைக்கும் கொண்டு சென்று, ஆற்றக்கூடாததாகவும், ஆத்துமாவையே அழிக்கக்கூடியதாகவும் மாற்றிவிடுகின்றான் சத்துரு. நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது (எபே. 4:26) என்று ஆலோசனையாக எழுதுகின்றார் பவுல்; என்றாலும், சூரியன் மறைந்த பின்னும், சுகமாக நித்திரை செய்யவேண்டிய வேளையிலும், சுமையாக கோபத்தைச் சுமந்துகொண்டிருப்பதினால், சரீரம் சந்திக்கும் இரவு ஆத்துமாவையும்; இருளாக்கிவிடுவதோடு, இருதயமும் இறுகிவிடுகின்றது. கனத்த இதயத்துடனேயே காலையிலேயே கண்விழிக்கும் நிலையும் உண்டாகிவிடுகின்றது.  

இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட ராஜாவாகிய அகாஸ்வேரு (எஸ்தர் 1:1), அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்திருந்தான். ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. (எஸ்தர் 3:1,2)

மொர்தெகாய் ஆமானை வணங்காததையும், நமஸ்கரியாததையும் பிற ஊழியக்காரர்கள் கண்டபோது, அதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் வாழ்க்கையிலும் நடந்தது இதுவே (தானி. 3:12). நாங்கள் ஆமானை வணங்குவதைப்போல நீயும் ஆமானை வணங்கவேண்டும் என்று 'நாளுக்கு நாள்' மொர்தெகாயினிடத்தில் அவர்கள் சொல்லியும், மொர்தெகாய் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர்கள் அதை ஆமானுக்கு அறிவித்தார்கள் (எஸ். 3:3,4). 

ஆமான் அதைக் கேட்டபோது, நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாளும் அகாஸ்வேருவின் ராஜ்யத்தில், சகல பிரபுக்களுக்கும் மேலாக தன்னுடைய ஆசனம் உயர்த்திவைக்கப்பட்டிருப்பதை மறந்து (எஸ்தர் 3:1), மொர்தெகாயையும், அவனது ஜனங்களையும் அழிக்க முற்பட்டான்; பதவியை மறந்து, பழிவாங்கப் புறப்பட்டான். இன்றும் கோபத்தினால், இருக்கையை மறந்து, தெருக்களில் சுற்றுவோர் அநேகர்.அதுவே, ஆமானின் அன்றாடக அலுவலகப் பணியாகிப்போனது. விருந்துக்கு ராஜாவுடனேகூட அழைக்கப்பட்டிருந்தபோதிலும், அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான். அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்று சொன்னபோது, இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான் (எஸ்தர் 5:14). எனினும்,  தாழ்வோ அமானைத் தேடிவந்தது. (எஸ். 6:13)

ஆமானை வணங்கிக்கொண்டிருந்த மக்கள், மொர்தெகாயைக் குறித்து தங்களுக்கு இருந்த கோபத்தை ஆமானிடம் கடத்தினார்கள், ஆமான் மொர்தெகாயைக் குறித்த கோபத்தை, யூத இனத்தின் மேல் காட்ட முற்பட்டான்; ஆனால், இதற்கிடையில், ராஜா குறுக்கிட்டுவிட்டார்; ராஜாவின் கோபம் ஆமானை தூக்குமரத்திற்குத் தள்ளிற்று (எஸ்தர் 7:10). மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரத்திலேயே அவன் தூக்கிப்போடப்பட்டான். கோபத்தை சுமந்துகொண்டேயிருப்போமென்றால், அது நம்மை தண்டனைக்கு நேராகத் தள்ளிவிடும்; சிங்காசனத்தில் இருக்கும் நமது நிலை, பிறர் சிரிக்கும் அளவிற்கு மாறிவிடும். சூரியன் அஸ்தமிப்பதற்கு முன், கோபத்தை அடக்கம்பண்ணிவிட்டால் 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' என்ற சிலுவையின் அன்பு நம்மிலே தென்படும். இல்லையேல், அதுவே நமது ஆவிக்குரிய வாழ்க்கையை அடக்கம்பண்ணிவிடும். .


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி