Skip to main content

படையிலா? படுக்கையிலா?

 படையிலா? படுக்கையிலா?



எழுதப்பட்ட வார்த்தைகளை கர்த்தர் நமது கரங்களில் கொடுத்திருந்தபோதிலும், எழுந்துபோகவேண்டிய இடத்திற்கு நாம் எழுந்துபோனால் தகுந்த வார்த்தைகள் நம்முடைய வாயிலிருந்து வெளிப்படுவதை நாம் உணரமுடியும். அழைப்பிற்குக் கீழ்ப்படியாமல், அமர்ந்திருக்கும் இடத்திலேயே முழுமையான வெளிப்பாட்டையும் பெற்றுவிடவேண்டும் என்றோ, கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும் என்றோ ஒருவேளை நாம் நினைத்துக்கொண்டிருந்தால், அது முடியாததாகிப்போய்விடக்கூடும். 

போர்வீரன் தன்னை எப்போதும் ஆயத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியது அவசியமே; போர் நடந்தாலும், நடைபெறாவிட்டாலும், வீரன் வீட்டிலே அனுதினமும் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வது அவசியமே; இல்லையேல், வீரனது ஆவிக்குரிய சரீரம் பெலவீனப்பட்டு வீணாகப்போய்விடும்; ஆயுதங்களைக்கூட கையாள பெலனற்றதாக அது மாறிவிடும். போர் என்றால் மாத்திரமே போராடையையும், ஆயுதங்களையும் தேடுவோர் அநேகர்; பிரசங்கிக்கவேண்டும் என்றால் மாத்திரம் வேதத்தை மணிக்கணக்காக தியானிப்போரும், உபவாசமிருப்போரும் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே (ஐஊரு) தங்களை ஆயத்தப்படுத்துகின்றனர். அப்படிப்பட்டோர், 'பெலவீனமான கைகளில் பெலமுள்ள ஆயுதத்தைச் சுமந்துகொண்டிருப்பவர்களே'. 

கோலியாத் இஸ்ரவேலுக்கு எதிராக வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்துக்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள். அவன் என்னிடத்தில் வரட்டும் (1சாமு 17:8) என்று சத்தமிட்டபோது, ஆயுதங்களோடு இருந்த, ராஜாவாகிய சவுல் முதலாய், வீரர்களில் ஒருவனும் புறப்பட்டுச் செல்லவில்லை. ஆயுதங்களோடு இருந்தும், எதிரியை எதிர்க்கப் பெலனற்றவர்களாக, வீரர்கள் என்ற பெயருடன் வீட்டிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் இன்றும் ஆவிக்குரிய உலகத்தில் உண்டு. வீரர்களாக, போர்முனைக்கு இத்தகையோர் புறப்பட்டுச்செல்லாவிட்டாலும்; வீட்டிற்குத் தங்களைத் தேடிவரும் ஆத்துமாக்களையும் வேத வசனங்களைக் கொண்டு போரிட்டு அவர்களை வென்றுவிட இயலாத நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுவிடுகின்றனர். போருக்குப் புறப்படும்போது மாத்திரமல்ல, வீட்டிலேயே எப்பொழுதும் வீரர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருந்தால், வீரனைத் தேடி ஜனம் வீட்டிற்கு வரும். இத்தகைய ஆயத்தத்தோடு அனுதினமும் வீரர்கள் என்று சொல்லிக்கொள்ளுவோர் வாழாததினாலே, வாள் இருந்தும் உருவ பெலனில்லை. 

கிதியோன், தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்று சொன்னபோது, அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான். அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துக்களில் இருந்த சாந்துக்காறைகளை எடுத்துக்கொண்டான் (நியா 8:20,21). கிதியோனின் குமாரனான யெத்தேரைப் போன்று, வீட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னும், வெட்ட இயலாத நிலைக்கு நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை காணப்பட்டுவிடக்கூடாது. எனவே, அனுதின ஆயத்தம் வீரனுக்கு அவசியமே. எதிரியைச் சந்திக்காதவரை, வீரனுடைய பெலம் வெளிப்படுவதில்லை. 

எத்தனை ஆயத்தங்களோடு நாம் காணப்பட்டாலும், அவர் காட்டும் இடத்திற்குப் புறப்பட்டுச் செல்லவும், அந்நேரத்தில் அருளப்படும் அவரது வார்த்தைகளுக்கும் நமது வாய் வழிவிடவும் ஆயத்தமாயிருக்கவேண்டும்; கர்த்தர் எரேமியாவை நோக்கி: நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார் (எரே 18:2). கர்த்தருடைய வார்த்தையின்படி, குயவன் வீட்டிற்கு எரேமியா புறப்பட்டுச் சென்றபோது, அங்கே கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு வெளிப்பட்டது (எரே. 18:5-11). அப்படியே, மோசேயை கர்த்தர் அழைத்தபோதும், 'நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்' (யாத் 4:12) என்றே அவனை திடப்படுத்தினார். அவர் காட்டும் திசையில் நாம் பயணித்தால், வார்த்தைகளைத் தெரிவிப்பதோடு, வாயோடும் இருப்பார்.


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி