Skip to main content

பெலவீனம் என்னும் பாலம்

 

பெலவீனம் என்னும் பாலம்



அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். (2 கொரி. 12:9)


ஆவிக்குரிய மனிதர்கள் தங்கள் சரீரத்தில் பெலவீனப்படும்போது, சத்துரு அணைத்துவிட நினைப்பது அவர்களது ஆத்துமாவையே. சரீரத்தில் பெலவீனப்பட்டுவிட்டவர்களின், சத்தத்தைக் கூட கேட்க வழிவிடாதபடி விலக்கிவைத்துவிடும் மக்கள் அநேகர். சரீரத்தில் ஒருவேளை அவர்கள் பெலவீனப்பட்டிருந்தாலும், அவர்களது ஆத்துமாவின் அஸ்திபாரமோ, இன்னும் சத்துருவினால் இடிக்கப்படாமலும், அசைக்கப்படாமலும் உறுதியாக நிற்பதனை ஊடுருவிப் பார்க்கும் கண்களைக் கொண்ட மனிதர்கள் வெகு சிலரே. சரீர பெலவீனம், பேசக்கூடாத நிலைக்கும் ஒருவேளை மனிதர்களைத் தள்ளியிருந்தாலும், அவர்களில் இருக்கும் தேவப் பிரசன்னமோ, அவர்கள் இருக்கும் இடத்தில் வல்லமையினை வெளிப்படுத்தி வெளிச்சமாக்கப் போதுமானது என்பதை புரிந்துகொண்டால், உடைந்த பாத்திரத்தில் இருக்கும் உன்னதமான காரியங்களை நாம் இழந்துவிடமாட்டோம். 

சரீரத்தில் பெலவீனமாயிருப்போரைச் சந்திக்கும்போது, பெலவீனம் என்னும் வெளிச்சுவற்றை மாத்திரம் பார்த்துவிட்டு, பரிதாபமான வார்த்தைகளையும் தங்கள் பேச்சுக்களில் உதிர்த்துவிட்டு, பார்த்தது போதும் என்று திரும்பிவிடாமல், அவர்களது உள்ளத்தின் உள்ளறைக்குள்ளும் பிரவேசிக்கும் வார்த்தைகளோடு உரையாடினால் மாத்திரமே, 'பலவீனத்திலே, அவர்களது பலம்' என்ன என்பது நமக்குத் தெரியவரும். சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் (ஏசா. 40:29); ஆனால், இன்றைய நாட்களிலோ, அநேக மனிதர்கள் சோர்ந்துபோகிறவனுடைய பெலனை மேலும் கெடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தை தங்கள் வார்த்தைகளால் சிறுகப்பண்ணிவிடுவிறார்கள். 

அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை  உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான்  உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன் (2 கொரி 12:7,8) என்று எழுதுகின்றார் பவுல். மாம்சத்திலிருந்த முள்ளை நீக்கும்படியாக மூன்றுதரம் வேண்டிக்கொண்டபோதிலும் அது முடிவுக்கு வந்துவிடவில்லை; மாறாக, 'என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்' என்ற பதிலே விடையாகக் கிடைத்தது. மண்ணான சரீரத்திலிருந்து கொஞ்சம் மண்ணை எடுப்பதினால் உண்டாகும் பெலவீனத்தை, பொன்னால் அதனை நிரப்புவதைப் போல தன்னால் தேவன் நிரப்புவதைப் போன்றதுதான் இந்த அனுபவம் (யோபு 23:10). எனவே, பலவீனத்தினாலே பூரணமாய் விளங்கும் பலத்தினைப் புரிந்துகொண்டதும், 'என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்' என்று சந்தோஷமாக எழுதுகிறார் பவுல். 

நம்முடைய வாழ்க்கையிலும், இதனைப் புரிந்துகொள்வது அவசியம். பெலவீனத்தையே தினம் தினம் பார்த்துக்கொண்டிராமல், பெலவீனத்தினை நினைத்து நினைத்தே மனம் உடைந்து அவரது பாதத்தில் வேண்டிக்கொண்டிராமல், நம்முடைய பெலவீனத்தின் மத்தில் பூரணமாக விளங்கும் அவரது கிருபையினைப் புரிந்துகொண்டால், தேவ பெலன் நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுவது நிச்சயம். ஆனால், இன்றோ, தங்கள் சரீர பெலவீனத்தையே சாக்காகச் சொல்லிச் சொல்லி, தங்களுக்குள்ளே அடைபட்டிருக்கும் வல்லமையையும், தங்களிடத்திலிருந்து வெளிப்படவிருக்கும் வல்லமையையும் வெளிக்காட்ட வழிவிடாமல், மறைவாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் உண்டு. தங்கள் மேல் இருக்கும் கர்த்தருடைய பெலத்தை உணர்ந்துகொள்ளாமல், தங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து பரிதாபத்தையே தினம் தினம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். பெலவீனம் என்பது தேவனுக்கும் தங்களுக்கும் இடையில் உருவாக்கப்படும் பலமானதோர் பாலம் என்பதை மறந்துவிட்டு, பலமான அந்த பாலயத்தில் பயணிப்பதையும் பயத்தினால் தவிர்த்துவிட்டு, பரிதாபம் என்ற குழிக்குள் தங்களைத் தள்ளிக்கொண்டோரின் ஆவிக்குரிய வாழ்க்கை கேள்விக்குரியிலேயே முடியும். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி