Skip to main content

பாடுகளின் பலன்கள்

பாடுகளின் பலன்கள்

 

அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.(சங் 126:6)

கிறிஸ்துவுக்காகவும், ஆத்தும அறுவடையின் நிமித்தமும் நாம் படும் பாடுகளின் பிரதிபலனைப் பரலோகத்தில் பெறும் வேளை ஆனந்தமானது. பலவிதமான இக்கட்டுகளில் மத்தியில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஆத்துமாக்களை அறுவடை செய்த நாம், அந்த அரிக்கட்டுகள் பரலோகத்தில் அம்பாரமாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பது பரவசமானது. 'அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்' (ஏசா. 53:11) என்ற ஏசாயா தீர்க்கதரிசனம் அன்று நமக்கும் பொருந்துவதாகிவிடும். நமக்கு உண்டாகும் பாடுகளினால் பரலோகத்தில் ஆத்துமாக்கள் பெருகுமென்றால், நாம் களிகூறவேண்டியவர்களல்லவா! எனவே, பவுல், ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது (2கொரி 1:6) என்கிறார். நம்முடைய பாடுகள் நமது உயிருக்கு எதிரிடையாக இருப்பதைப்போன்று நமது கண்களுக்குத் தோன்றினாலும், அது ஆத்துமாக்களை அறுவடை செய்கின்றது என்ற ஆனந்தத்தையும் நமது கண்கள் காணவேண்டும்.

பாடுகள் கிறிஸ்துவின் பிரமாணங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொண்டேன் என்று எழுதுகின்றான் தாவீது (சங். 119:71). நமக்கு வரும் சில துன்பங்களும், துக்கங்களும் கிறிஸ்துவின் பிரமாணங்களை நமக்கு போதிக்கவே தேவனால் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், நாமோ, அவைகளைக் கண்டு கண் கலங்கிவிடுகின்றோம், கண்ணீர் வடித்து அழுகின்றோம், 'ஆண்டவரே, ஏன் எனக்கு இந்த பாடுகள்' என்று புலம்புகின்றோம். அத்தகைய பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட சுற்றி சுற்றி வழியையே தேடிக்கொண்டிருக்கின்றோம். யாராவது உதவ மாட்டார்களா, யாராவது என்னுடைய துக்கத்தில் பங்கெடுக்கமாட்டார்களா என்று மனிதர்களையே தேடி அலைகின்றோம்; ஆனால், 'அத்தகைய பாடுகளின் மத்தியில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய கிறிஸ்துவின் பிரமாணம் என்ன?' என்பதை அறிந்துகொள்ளாமல் விட்டுவிடுகின்றோம். நம்முடைய பாடுகள் பாடங்களைக் கற்றுத்தருகின்றது.

நாம் சந்திக்கும் பாடுகளின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளாவிடில், அது விருதாவாகப் போய்விடும்; அந்த பாடுகளினால் நமது வாழ்க்கையில் பலன் ஏதும் உண்டாயிருக்காது. நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள் (எரே. 2:30) என்று கர்த்தர் சொல்லும் நிலையே பலருடைய வாழ்க்கையில் உண்டாகின்றது. புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போகிறது, பொல்லாப்புகளோ அற்றுப்போகவில்லை; அவர்கள் தள்ளுபடியான வெள்ளி எனப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார் (எரே. 6:30) என்ற நிலையில் தள்ளப்பட்டுக் கிடப்போரும் உண்டு.

பாவங்களின் நெருக்கத்தினால் பரிசுத்தத்தை விட்டுக்கொடுப்பதும்
சத்துருவினைச் சகிக்க இயலாமல் சத்துருவாக மாறுவதும்
பொறுமையாயிருக்கவேண்டிய நேரத்தில் போட்டுடைப்பதும்

இழப்புகளை ஏற்படுத்தும் 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி