Skip to main content

திறக்கப்படாத கண்கள் (2 இரா 6:17)

திறக்கப்படாத கண்கள்




திறக்கப்படாத கண்களைக் கொண்ட மனிதன், தரிசனத்தை நோக்கி தைரியமாகப் பயணிக்கும் மனிதனுக்கும் தடையாகவே பேசிக்கொண்டிருப்பான். தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான் (2இரா 6:15). அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். (2 இரா 6:17) 

இன்றும், தலைவர்களோடு இருந்துகொண்டிருந்தபோதிலும், அவர்களது தரிசனங்களைக் காணக்கூடாதவர்களாகவே வாழும் உடன் ஊழியர்கள் உண்டு. தலைவர்கள் போகும் இடமெல்லாம் அவர்களுடனே பயணித்தபோதிலும், தலைவர்களுடனேயே இணைந்து செயல்பட்டபோதிலும், தலைவர்களோடு ஒன்றாக உண்டு உறங்கினபோதிலும், தலைவர்களது உணர்வில் கலந்திருக்கும் தரிசனத்தை உணராதவர்கள் அநேகர் உண்டு. எலிசா அன்று ஜெபித்தது போலவே, உடன் ஊழியர்களைப் பார்த்து 'இவர்கள் கண்களைத் திறந்தருளும்' என்று ஜெபிக்கவேண்டிய நிலை அநேக தலைவர்களுக்கு உருவாகியிருக்கின்றது. எலிசாவின் வேலைக்காரனுக்கு சத்துருவின் சேனையைக் காணும் கண்கள் இருந்தது; ஆனால், கர்த்தருடைய சேனையைக் காணும் கண்கள் இல்லையே. வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டபோது, எலிசாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் (2இரா 6:15) அதிர்ச்சியோடு உணர்ச்சியை வெளிப்படுத்தினான். இந்த நிலையில் காணப்படும் மக்கள் இன்றும் உண்டு; அவர்களது கண்கள் சத்துருக்களை மாத்திரமே காணும் சக்திகொண்டவை; கர்த்தருடைய சேனையைக் காணவோ பெலனற்றவை. சீரிய இராணுவத்தினரின் கண்களுக்கு, கர்த்தருடைய சேனை தென்படவில்லை; அதுபோலவே, எலிசாவின் வேலைக்காரனின் கண்களுக்கும் தென்படவில்லை. சத்துருவின் கண்களும், வேலைக்காரனின் கண்களும் ஒரே சக்திகொண்டவைதானோ! பார்வையற்றவனாக இருந்ததே வேலைக்காரனது பதட்டத்திற்குக் காரணம். வேலைக்காரனின் கண்மயக்கத்திற்குக் காரணம் என்னவோ! நம்முடைய கண்களின் பெலன் என்ன? தலைவர்களோடு இணைந்து ஊழியம் செய்துகொண்டிருந்தபோதிலும், தலைவர்களின் கண்கள் காணும் தரிசனங்களை நம்மால் காணமுடிகிறதா? அப்படி முடியவில்லையென்றால், தலைவர்கள் செய்கிற காரியங்களையும் நம்மால் புரிந்துகொள்ள இயலாது, 'ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்' என்ற பயமே பல நேரங்களில் தொற்றிக்கொள்ளும். 

தன்னை பிடிக்கும்படியாக வந்த மனிதர்களை, கண்மயக்கம் உண்டாகச் செய்து, அவர்களை சமாரியாவுக்கே கூட்டிக்கொண்டு சென்றான் எலிசா. அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள் (2இரா 6:20). இப்படியே, ஒருநாள் அவர் மேகங்களுடனே வரும்போது, கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள் (வெளி 1:7). வருகையின்போது கண்கள் திறக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட அல்ல, பரலோக வாசலுக்குள் பிரவேசிக்க இன்றே, நம்முடைய கண்கள் திறக்கட்டும். 

இப்பிரபஞ்சத்தின் தேவனானவன், அவர்களுடைய மனதைக் குருடாக்கிவைத்திருக்கிறான் (2கொரி. 4:4); இருளின் ஆதிக்கத்தால் இன்றும் குருடர்களாகவே வாழும் மக்கள் (1யோவா. 2:11) கண்கள் திறக்கப்படாமல் அவரை அறிந்துகொள்வது கூடாதது (லூக் 24:31). கர்த்தருடைய சேனையைக் காண மாத்திரமல்ல; அவரது சேனையில் போர்வீரர்களாகவும் மாற அழைப்பு பெற்றவர்கள் நாம். கண் திறக்கப்படாததினால், கழுதை கண்டதைக்கூட பிலேயாமினால் காணமுடியவில்லையே. கண்திறக்கப்பட்ட பின்னரே, 'கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது' (எண் 24:15) என்று திறக்கப்பட்ட கண்களோடு இஸ்ரவேல் மக்களை பிலேயாம் பார்த்தான். 

 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி