Skip to main content

தினமும் தேவன்

 

தினமும் தேவன்

 

நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? (ஆதி. 18:18) என்று தன்னை சிநேகிக்கிற மனிதர்களிடத்தில் தான் செய்யும் காரியங்களை முன்னறிவிக்கிறவர் நமது தேவன்; வருங்காலங்களைக் குறித்த வார்த்தைகள் தேவனிடத்திலிருந்து நமக்கு வெளிப்படுத்தப்படுமென்றால், தேவன் வருங்காலத்தில் செய்யப்போவதைகை; குறித்த அறிவு நமக்கு இருக்குமென்றால் நாம் எத்தனை பாக்கியமுள்ளவர்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அறியாத மனிதருக்குள், அடுத்த வேளை என்ன நடக்கும் என்று நமக்கு அறிவிக்கும் தேவனைப் பெற்ற நாம் விசேஷித்தவர்கள் அல்லவா. உலகத்தில் நடைபெறவிருக்கும் காரியங்களை மாத்திரமல்ல, நமக்கு விரோதமாக சத்துரு செய்யும் பிரயத்தனங்களையும், தந்திரங்களையும், சதிகளையும் நமக்கு முன்னறிவித்து, நம்மை அதினின்று தப்பித்துக்கொள்ள வகை செய்கின்றார் தேவன். சத்துரு சதி என்ற சடுகுடு விளையாட்டை நடத்தினாலும், நாம் வெற்றிபெறவேண்டும் என்பதுதான் இறைவன் எழுதிவைத்த விதி; இது தேவப் பிள்ளைகளான நம் ஒவ்வொருவருக்கும் பாத்தியப்பட்டது.

வருங்காரியங்களை அறிந்து நாம் செயல்படவேண்டுமென்றால், நாம் தேவனிடத்திலேயே எப்பொழுதும் விசாரிக்கிறவர்களாக காணப்படவேண்டும். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேது. 5:7) என்ற வசனம் நாம் அறிந்த ஒன்று, கவலையின் நேரங்களில் நமது மனதினைக் காக்கும் அறிவைக் கொடுப்பது. அவர் நம்மை விசாரிக்கிறதுபோலவே, நாமும் அவரிடத்தில் விசாரிக்கும் பழக்கம் கொண்டவர்களாக மாறவேண்டுமே. கவலைகளுக்கு மாத்திரம் கர்த்தரிடத்தில் விசாரிப்பதல்ல, காலடி எடுத்து வைப்பதற்கும் கர்த்தரிடத்தில் விசாரிக்கவேண்டும். நமது வாழ்க்கை வெற்றியுள்ளதாக மாற இதுவே பிரதானமானது.

கோலியாத்தை வெல்லும் பலனை தாவீதுக்கு கர்த்தர் கொடுத்திருந்தார். இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் முடியாது என்று போர் முனையில் அவமானப்பட்டு நின்றுகொண்டிருந்தபோது, தேவபலத்தினால் இதெல்லாம் சாத்தியமே என்று முடித்துக் காட்டியவன் தாவீது. கோலியாத்தை வெற்றிகொள்ளும்போதே தேவனின் பெலன் தன்னுடன் இருப்பதை தாவீது அறிந்துகொண்டான். என்றாலும், அந்த பெலன் என்னுடன் தொடர்ந்து இருக்கிறது, எனவே, நான் போகும் இடமெல்லாம் எனக்கு வெற்றியே கிடைக்கும் என்ற மனநிலையோடு வாழ்ந்துவிடவில்லை தாவீது. என்றோ வெற்றிபெற்ற அனுபவத்தையும், வெளிப்பட்ட பெலத்தையும் நினைவில் கொண்டு தேவனை மறந்துவிடவில்லை தாவீதின் மனது. தனது வாழ்நாட்களில், தொடர்ச்சியாக, ஒவ்வொரு அடியிலும், முடிவெடுக்கும் நிலையிலும், போர் முனையிலும் தேவனிடம் விசாரிக்கிறவனாகவே அவன் காணப்பட்டான். அவனது ஜீவன் வெற்றியோடு முற்றியதற்கு இதுவே ரகசியம்.

பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது (1சாமு. 23:1) அவன் தனக்கு இருந்த முந்திய பலத்தையும், அபிஷேகத்தையும் நம்பி அப்படியே சென்றுவிடவில்லை. 'நான் போய் அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா?' என்று கர்த்தரிடத்தில் விசாரித்தான். அப்பொழுது கர்த்தர்: 'நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை ரட்சிப்பாயாக' என்று தாவீதுக்குச் சொன்னார் (1சாமு 23:2). அப்படியே, பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர் எப்ரோனுக்குப் போ என்றார்.(2சாமு 2:1) பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக் கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.(2சாமு 5:19) தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,(2சாமு 5:23) தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்தருடைய சமுகத்தில் விசாரித்தான். கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.(2சாமு 21:1) தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தான்.

நான் போதகன், நான் சுவிசேஷகன், நான் ஸ்தாபனத்தின் தலைவன், நான் தீர்க்கதரிசி என்ற பெயர்ப்பலகையில் கர்த்தரிடத்தில் விசாரிக்காமல் செயல்படும் ஊழியர்கள் இன்று அநேகர். என்றோ கர்த்தர் தங்களைப் பயன்படுத்தியதை மனதில் கொண்டு, அந்த பெலன் இன்றும் தங்களுக்கு இருக்கிறது என்று துணிச்சலுடன் செயல்படும் ஊழியர்கள் ஏராளம் ஏராளம். இதுவே, மாம்சமான பல முடிவுகளையும், மாம்சமான பல செய்கைகளையும் தலைவர்கள் செய்துவிட வழிவகுத்துவிடுகின்றது. நேற்று கர்த்தர் உன்னை பயன்படுத்தியிருந்தாலும், இன்று செய்பவைகளுக்காக அவரிடத்தில் விசாரிக்கவேண்டும். இப்படிச் செய்வோமென்றால், நம்மையும், நமது ஆவிக்குரிய வாழ்க்கையையும், நமது ஊழியத்தையும் நாம் காத்துக்கொள்ளுவோம். தேவ பெலனும் நம்மைத் தொடர்ந்து வரும். நான் ஊழியன், எனவே நான் செய்யும் அத்தனையும் தேவனால் அங்கீகரிப்பட்டது என்ற போர்வையில், வஞ்சகத்தில் விழுந்துவிடாமல், நான் ஊழியனாயிருந்தாலும், ஆலோசனை அவரிடத்திலிருந்தே வரும் என்ற அறிவு நமக்கு அனுதினமும் உண்டாயிருக்கட்டும். இல்லையென்றால், சிம்சோனைப்போல, வல்லமை இழந்த பின்னரும், தேவ அபிஷேகத்தை இழந்தபின்னரும், 'நசரேயன்' என்ற போர்வையில் ஓடத் துணிந்து, சத்துருவின் கையில் சிக்கிக்கொண்ட நிலையே நமக்கும் நேரிடும். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி