Skip to main content

தாழ்மையினால் பெருகும் கிருபை

 

தாழ்மையினால் பெருகும் கிருபை



அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (1பேது 5:5)


மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா. 54:10) என்பது ஏசாயாவின் மூலமாக நமக்காக எழுதப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன வார்த்தை. இச்சத்தியத்தினையே, 'நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை' (புல. 3:22) என்று உள்ளத்தில் உணர்ந்தவனாக எழுதுகின்றான் எரேமியா தீர்க்கதரிசி. இவ்வுலக வாழ்க்கையில் நம்மை பத்திரமாகப் பாதுகாப்பதாக மாத்திரம் காணப்படாமல், மறுவுலகிற்குள் நம்மை நித்தியமாகப் பிரவேசிக்கும்படியான மறுவாழ்வையும் மறுபிறப்பின் மூலமாக தருவது கிருபையே (எபே. 2:8).

'இரட்சிப்பு' என்பது கிருபையின் தொடக்கமானால் (எபே 2:8), தாழ்மை என்பதே கிருபையின் பெருக்கத்தை வாழ்க்கையில் தொடரப்பண்ணும் ஆதாரமானது. இதனை உணர்ந்துகொண்டோரின் ஆவிக்குரிய வாழ்க்கை, 'இரட்சிப்பு' என்ற புள்ளியில் நின்றுவிடாமல், கிருபையினால் தங்களது ஆவிக்குரிய வாழ்க்கையில் பெருகிக்கொண்டிருக்கும் தாலந்துகளினாலும், வரங்களினாலும் பரலோகத்தை தினம் தினம் நிரப்பிக்கொண்டிருக்கும். 

எனினும், தாழ்மைக்கும், கிருபைக்கும் இடையிலான பாலத்தை தகர்த்துவிட்டு, ஆவிக்குரிய வாழ்க்கையின் உயர்தரமான நிலையினை நோக்கிய பயணம் என்பது சாத்தியமில்லாதது. கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டபோதிலும், 'தாழ்மை' என்றும் சுவரைத் தகர்க்காததினால், தொடர்ந்து பயணிக்க இயலாதபடி, தாங்கள் நின்ற இடத்திலேயே இன்றும் நின்றுகொண்டிருக்கும் மக்கள் அநேகர். ஆவிக்குரியவர்களாயிருந்தபோதிலும், தங்கள் ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொண்ட பலர், இன்னும் அடுத்தவருக்கோ இலாபமற்றவர்களாகவே தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மரணபரியந்தம் தன்னைத் தானே தாழ்த்திய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை உலக மக்களின் இரட்சிப்புக்குக் காரணமாயிற்றே. அவ்வாரே, நம்முடைய வாழ்க்கையின் தாழ்மையான பயணம் பிற ஆத்துமாக்களை கிறிஸ்துவின் மந்தையில் நிச்சயம் சேர்க்கும். இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார் (நீதி. 3:34) என்று எழுதுகிறான் சாலொமோன்; இதனையே, யாக்கோபும் தனது நிருபத்தில் உறுதிப்படுத்துகின்றார் (யாக். 4:6). 

மேலும், அவர் (இயேசு கிறிஸ்து) மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார் (பிலி. 2:8,9) என்று தாழ்மைக்கும், உயர்வுக்கும் இடையிலான தொடர்பினை பவுல் வலியுறுத்துகின்றாரே. மேலும், கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார் (யாக் 4:10) என்று யாக்கோபுவும்  தாழ்மையின் முக்கியத்துவத்தை முன்வைக்கின்றனரே. தாழ்மை நம்முடைய வாழ்க்கையில் கிருபையைப் பெருகப்பண்ணுவதோடு மாத்திரமல்லாமல், வாழ்க்கையின் உயர்வுக்கும் காணரமானது. நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப்பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு கனமுண்டாகும் (லூக் 14:10) என்று தாழ்மையினால் கிடைக்கும் உயர்வினை இயேசுவும் உபதேசித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார் (லூக் 1:52) என்று மரியாளும் பாடுகின்றாளே.

அத்துடன், அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் (1பேது 5:5) என்று பேதுருவும் ஆலோசனையாக எழுதி உணர்த்துகின்றார். தேவனது பக்கத்தில் நம்மை நிறுத்துவது தாழ்மையே.


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி