Skip to main content

ராஜ்யத்தின் பக்கமா? ராஜாவின் பக்கமா?

ராஜ்யத்தின் பக்கமா? 

ராஜாவின் பக்கமா?

 

'இரண்டு எஜமான்களுகு;கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது' என்றார் இயேசு (மத். 6:24). நமது எஜமான் ஒருவரே; ஊழியமும் அவருக்கே. எங்கு என்ன நடந்தாலும், நாம் நமது எஜமானின் பக்கம் நிற்கவேண்டியவர்கள்; உலகத்தாரின் பக்கம் அல்ல. இதனைப் புரிந்துகொண்டதாலேயே 'தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன், மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?' (சங். 56:4) என்ற சங்கீதக்காரன் தான் நிற்கும் பக்கத்தையும், எவரும் தன்னை அசைக்க இயலாதென்பதையும் உறுதியாய் கூறுகின்றான். 'கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டும் மனிதர்களாக' 'கன்மலையின் மேல் நிற்கும் மனிதர்களாக' 'கன்மலையின் கூடவே நடக்கும் மனிதர்களாக' நாம் காணப்படுவோம். ஊழியத்தின் பாதையிலும் ஒவ்வொரு நாளும் நாம் யாரைச் சார்ந்தவர்களாக நமது வாழ்க்கையினை நகர்த்துகின்றோம் என்ற அறிவு நமக்குத் தேவை. 'எல்லாம் கிடைக்கின்ற இடத்தைச் சார்ந்து அல்ல, எல்லாவற்றையும் கொடுக்கின்ற தேவனைச் சார்ந்ததாய் நமது வாழ்க்கை அமையட்டும்.'

நமது வாழ்க்கை யாரைச் சார்ந்து நிற்கிறது என்பதையும், எதைச் சார்ந்ததாய் தொடர்கிறது என்பதையும் நாம் அறிந்துகொண்டால் மாத்திரமே, தேவனுடைய விருப்பத்திற்கேற்ற, சித்தத்திற்கேற்ற வழியில் தொடர்ந்து வெற்றியோடு செல்லமுடியும். தங்களோடு இருக்கும் மனிதர்கள் எப்போதும் தனக்கு ஒத்தாசையாகவும், உதவியாகவும், எந்த நிலையிலும் தனக்கு மாத்திரமே ஆதரவு தருவோராயும் இருக்கவேண்டும் என்று விரும்புகிற மனிதர்கள், தங்களைச் சார்ந்து நிற்போரை தன் திசையிலேயே இழுத்துச் செல்ல முயலுவர். ஒருவேளை, தவறான திசையில் அத்தலைவனின் பயணம் அமையுமானால், தொடர்வோரின் பயணமும் கர்த்தரை விட்டுத் தொலை தூரமாய்ப் போய்விடும். இவர்களுக்கு எதிர்த்திசையில் நாம் பயணிப்பது என்பது எதிர்நீச்சல் போன்றதே. அது, அவர்கள் நம்மை எதிரியாகப் பாவிக்கும் நிலைக்குக்கூடத் தள்ளிவிடும். இந்நிலைக்குத் தங்களை ஆளாக்கிக்கொள்ள விரும்பாத தொண்டர்கள் பலர், ஆவிக்குரிய வாழ்க்கையினைத் தொலைத்துவிட்டு, தொடர்ந்து அத்தலைவர்களோடு பயணம் செய்துகொண்டிருப்பர். மனிதனைச் சார்ந்து நிற்கவேண்டியவர்கள் அல்ல, நாம் தேவனைச் சார்ந்து நிற்கவேண்டியவர்கள். நாம் ராஜ்யத்தின் பக்கமா? அல்லது ராஜ்யத்தை ஆளும் ராஜாவின் பக்கமா?

யோசுவாவின் தலைமையின் கீழ், எரிகோவை நோக்கி இஸ்ரவேலர் அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்தபோது, உருவின பட்டயத்துடன் நின்ற ஒருவரைக் கண்டதும், யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார் (யோசுவா 5:14). அப்புறத்தில் எதிரி, இப்புறத்தில் தங்கள் சேனை இடையிலோ உருவின பட்டயத்தோடு ஒருவரைக் கண்டபோது அவர் யாரைச் சேர்ந்தவர் என்பதை அறிந்துகொள்வதிலேயே தனது முதற்கவனத்தைச் செலுத்தினான் யோசுவா. யோசுவா மாத்திரமல்ல, அநேகரின் நிலையும் இதுவே. பிரச்சனைகள் உருவெடுக்கும்போது, தங்களைச் சார்ந்து நிற்பர்கள் யார்? யார்? 'இவன் யாரைச் சேர்ந்தவன்' என்பதை அறிந்துகொள்வதிலேயே நேரம் செலவிடுகின்றனர். அவர்கள் தங்களைச் சார்ந்து நிற்பவர்களாக இருந்தால் யுத்தத்திற்கு அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்றும், அவர்களால் யுத்தத்தில் நமக்குப் பெலன் சேருமே என்றும் விருப்பஞ்கொள்கின்றனர். இப்படிப்பட்ட ஆசையுடன், தவறானவர்களையும், ராஜ்யத்திற்குப் புறம்பானவர்களையும் தன் பக்கம் சேர்த்துக்கொண்டால் சேர்ந்துகொண்டால் போரில் தோற்றுப்போவது நிச்சயம்.

யோசுவாவுக்கு முன்னால் பட்டயத்தோடு நின்ற அவர், தான் எதிரியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லாமல், உன்னைச் சேர்ந்தவர் என்றும் சொல்லாமல், 'கர்த்தருடைய சேனையின் அதிபதி' (யோசுவா 5:14) என்று தன்னை அடையாளப்படுத்தினார். அது மாத்திரமல்ல, தான் நின்றுகொண்டிருக்கும் இடம் 'பரிசுத்தமானது' (யோசுவா 5:15) என்பதையும் அறிவித்தார். உருவின பட்டயத்தோடு நின்ற தூதனைப் போல நாமும் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். அந்த தூதனைப் போலவே நாமும் பதில் சொல்லக் கற்றுக்கொள்ளுவோம். 'நாம் யாரைச் சேர்ந்தவர்கள்' என்று ஆராய முற்படும் மனிதர்களுக்கு முன் 'நாம் கர்த்தரைச் சேர்ந்தவர்கள்' என்றே அறியப்படுவோராக வாழுவோம்.

தூதன் நின்ற பரிசுத்தமான இடத்தில் யோசுவாவும் நின்றுகொண்டிருந்ததால், அவர் யோசுவாவைச் சேர்ந்தவரே என்று நாம் அறிந்துகொள்ள முடிகின்றதல்லவா. பரிசுத்தமான இடத்தில் நீங்கள் நின்றுகொண்டிருந்தால், கர்த்தருடைய சேனையின் அதிபதியும் உங்களோடேதான் நின்றுகொண்டிருப்பார்; எனவே, பரிசுத்தத்தை விட்டுவிடவேண்டாம். பிரியமானோரே! நமது கால்கள் நிற்கும் இடம் எங்கே? நமது வார்த்தைகளுக்கு ஆதாரமாய் நாம் கொள்ளும் இடம் எங்கே? பரிசுத்தமான இடத்தில் நாம் நிற்போமென்றால், தேவன் நம்மைச் சார்ந்தவரே என்பதை கேட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை; அவர் நம்மைச் சார்ந்தவரே. ராஜாவின் பக்கமாய் சேர்ந்த மனிதர்கள் ராஜ்யத்தையே அழித்துவிட்ட சம்பவங்கள் உண்டே.

இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலத்திலே ராஜ வஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம் தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுகு;கு முன்பாக தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள். 'இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் சீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர்' என்று ஒருவன் ராஜாவின் பக்கமாய் தீர்க்கதரிசனம் சொல்ல, அனைவரும் அதற்கு இசைவாகவே சொன்னார்கள் (1இராஜா. 22:11,12). கர்த்தருடைய தீர்க்கதரிசியான மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான். அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான் (1இரா 22:13,14). பொய்யின் தீர்க்கதரிசிகளையே சார்ந்துநின்ற ராஜாவோ வீழ்ந்துபோனான்.

சாலமோனின் மரணத்திற்குப் பின்னர், அவனது குமாரனான ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தார்கள். அப்போது, சாலமோனின் நாட்களில் ஓடிப்போய் எகிப்திலே குடியிருந்த யேரொபெயாம் இச்செய்தியினைக் கேள்விப்பட்டான். ரெகொபெயாமை ராஜாவாக்கும் நிகழ்ச்சிக்காக, இஸ்ரவேல் ஜனங்கள் யெரொபெயாமை அழைப்பித்தார்கள். யெரொபெயாமுடன் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் இணைந்து, 'உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம்' என்றார்கள் (1இரா 12:4). தன் தகப்பனாகிய சாலமோன் உயிரோடிருக்கும்போது, அவர் சமுகத்தில் நின்ற முதியோருடன் ரெகொபெயாம் ஆலோசனை செய்தபோது, அவர்கள் ரெகொபெயாமுக்குப் பிரதியுத்தரமாக: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள் (1இரா 12:7). சாலமோனின் சமுகத்தில் நின்ற முதியோர்கள், ராஜ்யத்தைக் காப்பாற்றும்படியான ஆலோசனையை ரெகொபெயாமுக்குக் கொடுத்தனர். ஆனால், யெரொபெயாமோ அவர்களது ஆலோசனையைத் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோரே அவன் ஆலோசனை பண்ணினான்; அவர்களோ, ராஜ்யத்தின் மேல் கரிசனையில்லாதவர்கள். ராஜ்யத்தில் வாழும் ஜனங்களின் மேல் கரிசனையற்றவர்கள். இன்பத்துக்குப் பதிலாக துன்பத்தைக் கொடுப்பவர்கள். ராஜ்யம் உடையக் காரணமாயிருப்பவர்கள்.

ராஜ்யத்தின் பக்கம் நிற்பவர்கள் யார் என்பதை அடையாளம் காணமுடியாதவனாயிருந்தான் ரெகொபெயாம். ராஜ்யத்தைக் காப்பாற்றிக்கொள்ள, ஜனங்களுக்கு நல்லதோர் தலைவனாயிருக்க சரியான ஆலோசனையினைச் சொல்வது யார்? என்பதை அறியாதவனாயிருந்தான் ரெகொபெயாம். தகப்பனோடு கூட இருந்த முதியவர்களோடு இருந்த தொடர்பைக் காட்டிலும், தன்னோடு கூட வளர்ந்த வாலிபர்களுடனான தொடர்பே அவனுக்கு அதிகமாயிருந்தது. தகப்பனுக்கு முதியவர்களோடு கூட தொடர்பு, ரெகொபெயாமுக்கோ தன் வயது வாலிபர்களுடன் தொடர்பு. இதுவே, ராஜ்யம் இடிந்துபோகக் காரணமாயந்தது. இன்றைய நாட்களிலும், ஊழியர்களின் பிள்ளைகள் பலர் இப்படியே வளர்ந்துவருகின்றனர். தகப்பனுடன் ஊழியத்தில் உடனிருந்த, அனுபவமிக்க, ஆவிக்குரிய ஆலோசனைகளைக் கொடுக்கக் கூடிய முதியவர்களுடன் தொடர்பு இல்லாமலேயே முதிர்ந்த ஊழியர்களின் பிள்ளைகள் பலர் வளர்கின்றனர். தங்கள் வயதினருடனேயே அவர்களது வாழ்க்கை கழிகிறது. தகப்பனின் மரணத்திற்குப் பின்னர், ராஜ்யத்தைக் காப்பாற்றும் ஆலோசனை தரக்கூடிய முதியவர்களை கையில் வைத்துக்கொள்ளாமல், தள்ளிவிடும் குணம் கொண்டவர்களாக அவர்கள் மாறிவிடுகின்றனர். தகப்பனோடு கூட இருந்த அனுபவமிக்கவர்கள், அவர்களின் கண்களுக்கு தேவையற்றவர்களாகக் காணப்படுகின்றனர். முதியோருடன் அதிகமான தொடர்பு இல்லாததினால், அதிகமாக முதியோருடன் பழகாததினால், முதியோருக்கும் தங்களுக்கு இடையில் இடைவெளி விட்டே வாழ்வதினால், தகப்பனின் மரணத்திற்குப் பின்னர், முதியவர்களின் ஆலோசனையையும் அவர்கள் விட்டெறியும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். 

இக்காலத்து ஊழியர்களின் பிள்ளைகள் இரண்டு இடைவெளிகளோடு வாழ்கின்றனர். ஒன்று, ஊழியர்களான தங்கள் பெற்றோருக்கு; இரண்டாவது, ஊழியத்திலிருக்கும் மூத்தவர்களுக்கு. இந்த இரு இடைவெளிகளுடன் வளரும் ஊழியர்களின் பிள்ளைகள் தாங்களாகவே வழியினை வகுத்துக்கொள்ள விரும்புகின்றனர்; அத்துடன், தங்கள் உடன் வளர்ந்தோருடைய வார்த்தைகளைக் கேட்டு வழிதனை வகுத்துக்கொள்கின்றனர். விளைவோ, தகப்பனுக்குத் தொடர்பில்லாத ஊழிய நெறிமுறைகள், ஊழியத் திட்டங்கள், எதிரான கொள்கைகள். ராஜ்யத்தின் பக்கத்தில் நிற்பவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், ராஜாவின் பலம் அதுவே. 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி