Skip to main content

அழைப்பும் பிழைப்பும் (லூக் 9:58)

   அழைப்பும் பிழைப்பும்



அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். (லூக் 9:58)


தன்னைப் பின்பற்ற விரும்பும் மனிதர்களிடத்தில் காணப்படவேண்டிய சில தரக்கட்டுப்பாடுகளை இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. தேவைகளைத் தேடும் மனிதர்களால் அல்ல, தேவனையே தேடும் மனிதர்களாலேயே அவரைப் பின்பற்றுவது சாத்தியம். தேவைகளிலேயே இடறிவிழும் மனிதருக்கு, தொடர்பயணம் என்பதுதோ தொலைதூரமாகிவிடும். அழைக்கப்பட்ட பின்னும், 'பிழைப்புக்கடுத்த அலுவல்களிலேயே சிக்கிக்கொண்டிருந்தால்' (2 தீமோ. 2:4), அழைப்பின் பாதையிலோ அது பிழையாகிவிடக்கூடும்.

முதலாவதாக, 'நீர் எங்கே போனானும் உம்மைப் பின்பற்றி வருவேன்' என்று சொன்ன மனிதனை நோக்கி, 'மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை' என்று இயேசு சொல்வதின் அர்த்தம், 'அடிப்படை தேவைகளைக்கூட எதிர்பார்க்கும் மனது தன்னைப் பின்பற்றுவோர்க்கு இருந்துவிடக்கூடாது' என்பதே. அடிப்படைத் தேவைகளும் அழைப்பிலிருந்து மனிதனைப் பிரித்துவிடக்கூடும். என்றாலும், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்றும், ஆகாயத்துப் பட்சிகளைப்  நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத் 6:25,26) என்றும் இயேசு வாக்களித்திருக்கின்றாரே. (சங். 37:25, 1 தீமோ. 5:18, 1 கொரி. 9:14, மத். 6:34) ஆகிய வசனங்கள் நமக்குரியவைகளே. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும்  ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே (ரோம 8:36,37) என்பதல்லவோ அழைப்பில் உறுதியாயிருந்த பவுலின் வாய்மொழிகள். அடிப்படை தேவைகளைக் கூட எதிர்பார்க்கும் மனதில்லாதவனுடைய அழைப்பின் அஸ்திபாரமே உறுதியாயிருக்கும். ஆவியை ஒப்புக்கொடுக்கும்போதே இயேசு கிறிஸ்து தனது தலையினைச் சாய்த்தார் (யோவான் 19:30). நமக்காக அல்ல, பிறருக்காக தலைசாய்ப்போம்.

இரண்டாவதாக, வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா  என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார் (லூக் 9:59,60). தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிப்பதே அவரைப் பின்பற்றுவதற்கான அடையாளம். நாம் இருக்கின்ற இடங்களில், ஆண்டவரது அன்பைப் பற்றியும், அவர் மனிதர்களுக்காக தனது சொந்தக் குமாரனையே பலியாகக் கொடுத்த பாசத்தைப் பற்றியும், மரணத்தை ஜெயித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டாகும் பாவமீட்பினைப் பற்றியும்,  தேவனுடைய ராஜ்யத்தில் மனிதர்களைப் பிரவேசிக்கச் செய்யும் செய்தியினை சுவிசேஷமாக அறிவிப்போமென்றால், நாம் அவரைப் பின்பற்றுகிறவர்களே. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிறருக்குப் பிரசங்கியாத அல்லது அறிவியாத எந்த ஒரு மனிதனும் அவரைப் பின்பற்றுகிறேன் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றவனே.  

மூன்றாவதாக, பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில்  அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார் 

(லூக் 9:61,62). பின்னிட்டுப் பார்க்கும் மனிதர்களால் பின்பற்ற  இயலாது. இஸ்ரவேல் அடிப்படைத் தேவைகளுக்காக எகிப்தை நோக்கிப் பார்த்தார்களே. (எண்; 11:5, யாத் 16:3, எண்; 20:2-4). பின்னிட்டுப் பார்த்தவர்கள் கானானுக்குள் பிரவேசிக்கவில்லையே. அப்படியே, கையை கலப்பையிலும், கண்களையோ உலகத்தின் மேலும் 

 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி