Skip to main content

பரத்திற்கு எதிரான பாரம்பரியம்

பரத்திற்கு எதிரான பாரம்பரியம்



பாரம்பரியம் என்ற பெயரில் பாதாளத்திற்கு நேரான வாசல்களை பல திசைகளில் இன்றும் சத்துரு திறந்தே வைத்திருக்கின்றான். எனவே, தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும், கிறிஸ்தவத்திற்கும் தொடர்புடைய செயல்களைப் போலவும், அனுசரிப்புகைளப் போலவும், கொண்டாட்டங்களைப் போலவும் தோன்றும் அநேக காரியங்களில், சத்துருவாகிய சாத்தானுடைய தந்திரமான ஊடுருவலினால் கிறிஸ்தவர்களிடையேயும், கிறிஸ்தவத்திலேயும் உட்புகுத்தப்பட்டவைகள் எவைகள் என்பதை அறிந்துகொள்வதும், அடையாளங் கண்டுகொள்ளவேண்டியதும் இந்நாட்களில் மிகவும் அவசியம். நம்முடைய பழக்க வழக்கங்கள், தேவனுடைய கற்பனையிலிருந்து நம்மை வழுக்கிவிழச் செய்துவிடக்கூடாது. 

உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கை கழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்று வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் கேட்டபோது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?  (மத் 15:2,3) என்றும், உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள் (மத் 15:6) என்றும், பாரம்பரியத்தினால் பரத்திற்கு உண்டாகும் பாதிப்பைச் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமல்ல, தேவனுடைய கற்பனைகளை மீறி நடந்து, மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, தேவனுடைய கற்பனையை மனிதர்கள் மீறி நடப்பதற்கு, 'மனுஷருடைய கற்பனைகள் உபதேசங்களாகப் போதிக்கப்படுவதே காரணம்' என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்  (மத் 15:9). 

எனவே, அப்போஸ்தலனாகிய பவுல், யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல், விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்;துகொள் (தீத் 1:13,14) என்று தீத்துவுக்கு குறிப்பாக எழுதுகின்றார்.  

தேவனுடைய கற்பனையை மீறி நடக்கச் செய்யும் மனுஷருடைய கற்பனை என்றால் என்ன? என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது (ஏசா 29:13) என்று உரைக்கிறார் ஏசாயா தீர்க்கதரிசி. இப்படிப்பட்ட போதனைகளே இன்றைய நாட்களிலும் மிகுந்து காணப்படுகின்றன. உள்ளத்தை கர்த்தருக்குத் தூரமாக வைத்துக்கொண்டு, உதடுகளால் மாத்திரம் சேரும்படியாகவே ஜனங்கள் உபதேசிக்கப்படுகிறார்கள். போதிக்கிறவர்களும், போதனையைக் கேட்கிறவர்களும் உள்ளத்தைக் குறித்துக் கவலைப்படுகிறதில்லை. இரட்சிப்பைக் குறித்தும், மனந்திரும்புதலைக் குறித்தும், மறுவுலக வாழ்வினைக் குறித்தும் கவலைகொள்ளாமல், ஆசீர்வாதத்தையும், சரீரப்பிரகாரமான சுகத்தையும் மாத்திரமே முன்நிறுத்தும் உபதேசங்கள் பரத்துக்கு விரோதமானவைகளே. 

இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன். நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது (ஏசா 1:13-15) என்றும், மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1சாமு 16:7) என்றும் கர்த்தர் உரைக்கின்றாரே. மேலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான் (மத் 5:19) என்று கற்பனைகளுக்குக் கொடுக்கப்படும் கனத்தை இயேசு கிறிஸ்துவும் சுட்டிக்காட்டத் தவறவில்லையே நம்முடைய பாரம்பரியங்கள் பரத்திற்கு பாதிப்பினை உண்டாக்கிவிடக்கூடாது. 


 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி