Skip to main content

பழமில்லை, பார்வையுமில்லை (2பேது 1:9)

பழமில்லை, பார்வையுமில்லை



 இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். (2பேது 1:9)


இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வது மாத்திரமல்ல, அவரது ரத்தத்தினால் பாவங்கள் கழுவப்படுவது மாத்திரமல்ல, சுத்திகரிக்கப்பட்டதின் பலனான கனிகளை அனுதினமும் வாழ்க்கையில் நாம் கொடுத்துக்கொண்டேயிருக்கவேண்டும். இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார் (ஏசா. 5:1-2) என்று வாசிக்கின்றோமே. நம்முடைய வாழ்க்கையை அவர் சுத்திகரித்த பின் இப்படிப்பட்ட கனிகளையே தினமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். 

ஆனால், நற்குலதிராட்சச் செடிகளை நட்டியிருந்தபோதிலும், அதுவோ கசப்பான பழங்களைத் தந்தபோது (ஏசா. 5:2), இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின்வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம். அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார் (ஏசா. 5:5,6). சுத்திகரிக்கப்பட்ட பின்னும், கனிகொடுக்கவில்லையென்றால், கர்த்தருடைய பாதுகாப்பை நாம் இழக்க நேரிடும். அது நம்முடைய வாழ்க்கையை பரிதாபமான நிலைக்குள் தள்ளிவிடும்.

எனினும் பேதுருவோ, பாவங்களறச் சுத்திகரிக்கப்படுவது மாத்திரமல்ல, கனியில்லாத கண்சொருகிப்போன குருடர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடாது என்று மற்றும் ஒரு மேலான சத்தியத்தை நமக்குப் போதிக்கிறார். இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது (2பேதுரு 1:5-8) என்று எழுதும் பேதுரு, இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான் (2பேதுரு 1:9) என்று அத்தகையோரை முத்திரை குத்துகின்றாரே.

கனியில்லாத மனிதன், காலப்போக்கில் தான் சுத்திகரிக்கப்பட்டதையே மறந்து, ஆவிக்குரிய பார்வையையும் இழந்து நிற்பான். எனவே, 'கனியில்லாத மனிதனை பார்வையில்லாதவன்' என்றே வர்ணிக்கின்றார் பேதுரு. ஆண்டவருடைய கண்கள், நம்மிடத்தில் கனிகளை அல்லவோ தேடுகின்றது. ஆண்டவருடைய பார்வையில் நாம் கனியற்றவர்களாயிருந்தால், நம்முடைய வாழ்க்கை இருளானதே (மத். 6:23). வாய்ப்புகள் கிடைத்தும், அநேகருடைய வாழ்க்கை இன்னும் வெளிச்சமாகவில்லையே (லூக். 13:7). 

பாவங்களறச் சுத்திகரிக்கப்பட்டதற்குக் காரணம் அவர் மேல் நாம் கொண்ட விசுவாசமே. என்றாலும், அநேகருடைய வாழ்க்கை சுத்திகரிப்போடே நின்றுபோயிற்று; காலம் செல்லச் செல்ல, சுத்திகரிக்கப்பட்டதே மறந்துபோயிற்று. கசப்பான கனிகளைத் தரும் மரமாக அவர்களது வாழ்க்கை பிறண்டுபோனது. ஒருநாளில் ஆண்டவரால் சுத்திகரிக்கப்பட்டவர்கள், இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றவர்கள்; ஆனால், இன்றோ, சுத்திகரிக்கப்பட்டதை மறந்து சத்துருவோடு சுற்றிக்கொண்டிருக்கின்றார்கள். கர்த்தருடைய பாதுகாப்பு எடுக்கப்பட்டதினால், சத்துருவின் படுகுழிக்குள் அவர்களது வாழ்க்கை தள்ளப்பட்டுப்போயிற்று. நம்முடைய வாழ்க்கையிலும், கனிகள் இல்லாதிருக்குமென்றால், கர்த்தருடைய பார்வையில் நாம் குருடர்களாகவே காணப்படுவோம். கனிகளைப் பெருக்கும் காரியங்கள் நம்மிலே பெருகட்டும்.


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி