Skip to main content

அத்தி மரத்துக்குக் கத்தி

அத்தி மரத்துக்குக் கத்தி

 

ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. (லூக் 13:6)

எந்த இடத்திலே நாம் வைக்கப்பட்டிருந்தாலும், எவர்கள் நடுவே நாம் வைக்கப்பட்டிருந்தாலும், கனி கொடுப்பது என்பது நமது பிரதானப் பணியாயிருக்கவேண்டும். மற்றவர்களின் கனியை உண்ணும் நாம், நமது கனியினையும் பிறருக்கு உண்ணக் கொடுக்கவேண்டுமே. சுவிசேஷம் கேட்பதோடு மாத்திரமல்ல, சுவிசேஷம் அறிவிக்கிறவர்களாகவும் மாறவேண்டும். இதையே பவுல், காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள் (எபி 5:12) என்று எழுதி எச்சரிக்கின்றார். நான் வேறொரு தோட்டத்திற்குள் வைக்கப்பட்டிருக்கிறேன், தனியாக வைக்கப்பட்டிருக்கிறேன், எனக்குத் துணையாக யாருமில்லை என்ற எண்ணம் நம்மில் மேலோங்கி நிற்குமானால், நம்முடைய கனியை நாம் மறந்துவிடுவோம், கனி கொடுக்கிற திராட்சச் செடிகளின் மத்தியில் அத்திமரம் கனிகொடாமல் நின்றுகொண்டிருந்தது போல, சுற்றிலும் நிற்கிற கனிகொடுக்கிறவர்கள் மத்தியில் கனிகொடாதவர்களாக நாம் நின்றுகொண்டிருப்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் ஏதாகிலும் ஒரு கிருபையினை, தாலந்தினைக் கொடுத்திருக்கிறார். தாலந்தைப் பெற்ற மனிதனிடத்தில் 'தா' என்று கேட்க கொடுத்தவருக்கு உரிமை உண்டல்லவா. சுற்றிலும் திராட்சச் செடிகள்; திராட்சப் பழத்தின் சுவை வேறு, அத்தி மரத்தின் சுவை வேறு; திராட்சச் செடிகளின் எண்ணிக்கை யோ அதிகம், ஆனால், அத்தி மரமோ தனியாக நிற்கிறது. சுற்றிலும் இருக்கிற திராட்சச் செடிகள் கனிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன, ஆகையால், தனியாக நிற்கும் அத்தி மரமோ கனி கொடாமல் நின்றுகொண்டிருக்கிறது.

அத்திமரமே, அத்திமரமே திராட்ச் செடிகள் கனி கொடுக்கிகிறதைப் பார்த்து நீ ஏன் கனி கொடுக்கவில்லை? திராட்சச் செடியின் கனிகளைக் காட்டிலும் உனது கனிகள் வித்தியாசமானவைகள் அல்லவா! உனது கனியினை திராட்சச் செடிகள் கொடுக்க முடியாதே. எத்தனை உரம் போட்டாலும், எவ்வளவாய் பாதுகாத்தாலும் திராட்சச்செடிகளில் அத்திமரத்தின் பழங்களைப் பறிக்க முடியாதே. அத்தனை பெரிய திராட்சச் தோட்டமாயிருந்தாலும், தோட்டக்காரனான எனக்கு ஒரு அத்திப்பழம் தேவை என்றால், தனியாக நிற்கும் உன்னைத் தானே நான் தேடிவரவேண்டும். ஆயிரம் நபர்கள் பிரசங்கம் செய்தாலும், நீ பிரசங்கம் செய்தால் அது வித்தியாசமாயிருக்கும்; ஆயிரம் பேர் பாடல் பாடினாலும், நீ பாடினால் அது வித்தியாசமாயிருக்கும்; ஆயிரம் பேர் போதித்தாலும், நீ போதித்தால் அது வித்தியாசமாயிருக்கும். உனது சுவை உன்னிடத்தில்தான் இருக்கின்றது. அது மற்றவரிடத்திலிருந்து தோட்டக்காரனுக்குக் கிடைக்காது. ஆம், எனக்கு அருமையானவர்களே; தேவன் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கும் கிருபை வித்தியாசமானது; தாலந்துகள் வித்தியாசமானவைகள். நாம் எங்கு வைக்கப்பட்டிருந்தாலும், தனியாக இருந்தாலும் நம்மிடத்தில் தேவன் கொடுத்த சுவையை வேறொருவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியாது. எனவே, இயேசுவும், 'முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்புண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?' (மத். 7:16) என்றும் 'அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்' (மத். 7:20) என்றும் போதிக்கின்றார்.

அத்திமரமாகிய உனது சுவை வித்தியாசமானது. அப்பொழுது மரங்கள் அத்திரமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு (நியா 9:10) என்று சொன்னபோது, அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ (நியா 9:11) என்று சொன்னதே. கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றவார்களும், திராட்சக் குலைகளுடன், அத்திப் பழங்களில் சிலவற்றையும் கொண்டுவந்தார்கள் (எண். 13:23). அபிகாயில் தாவீதைச் சந்திக்கச் சென்றபோது, வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் கொண்டு சென்றாள் (1சாமு. 25:18). உயிர் போகும் தருவாயில் இருந்த எகிப்தியனுக்கு, திராட்சக் குலைகளுடன், அத்திப்பழ அடை கொடுக்கப்பட்டபோது, சாகக் கிடந்த அவன் பிழைத்துக்கொண்டான். எசேக்கியா ராஜாவின் பிளவையின் மேல் அத்திப் பழத்து அடையின் பற்றைப் போட்டபோது அவன் உயிர் பிழைத்தான் (2இராஜா. 20:7). திராட்சப் பழம் இடம்பெறுகின்ற இடங்களிலெல்லாம் அத்திப்பழமும் இடம் பெறுகின்றதே (1நாளா. 12:40; நெகே. 13:15; எரே. 5:17) இத்தனை பயனுள்ள, சுவையுள்ள அத்திமரமாகிய நீ கனி கொடுக்காமல் நிற்கலாமோ?

எத்தனை பெரிய ஊழியத்தில் நாம் இணைந்திருந்தாலும், எத்தனை பெரிய ஊழியருடன் இணைந்திருந்தாலும் தேவன் நமக்குக் கொடுத்த கிருபைகளை நாம் வெளிப்படுத்துகின்றோமா அல்லது நம்மைச் சுற்றிலும் இருக்கின்ற திராட்சச் செடிகள் கனி கொடுப்பதைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறோமா? என்னுடைய தாலந்தினை வெளிப்படுத்த தருணம் கிடைக்கவில்லை என்று மற்றோரைக் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கின்றோமா? அத்தி மரமே கனி கொடுக்கவில்லையென்றால் உனக்குக் கத்திதான்! உங்களது வேருக்குக் கீழே கோடரி வைக்கப்பட்டிருக்கிறது. 'நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப் போனேன்' (எரே. 15:6) என்று கர்த்தரின் பொறுமையை சோதிக்கிறவர்களாக நமது வாழ்க்கை காணப்படவேண்டாம். வெறுமையானவே வாழ்ந்துகொண்டிருக்கவேண்டாம்.

அத்திமரமே, அத்திமரமே 
வித்து போட்டவர் விரைந்து வருகிறார்
கொத்துக் கொத்தாய் பழங்கள் உண்டா - இல்லை

வெத்துக் கைதான் உன்னிடம் உண்டா 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி