Skip to main content

எதிரியை அறிவிக்கும் உளவாளி

 

எதிரியை அறிவிக்கும் உளவாளி

 

ஒவ்வொரு நாளும் ஆபத்தினின்று நாம் தப்பும்படியாகவும், ஆபத்திலிருப்போரைத் தப்புவிக்கும்படியாகவும் தேவன் அனுப்பும் செய்தியினை அறிந்து நடப்போராயும், அறிவித்துக்கொண்டிருப்போராயும் நாம் வாழவேண்டும். எத்தனையோ மக்களை, தீமையில் சிக்கிக்கிடப்போரை, சத்துருவின் தீயில் கருகிக்கொண்டிருப்போரை கர்த்தரிடம் கொண்டுவரும் பெரும் பணி இன்று நம்முடைய கரத்திலே. இதனை உணர்ந்தோர் உள்ளத்திலே அது தொடர்ந்து தொனித்துக்கொண்டேயிருப்பதினால், அவர்கள் செயல்படாமல் இருப்பதில்லை, செயல்வீரர்களாகவே மாறிவிடுகின்றனர்; சத்துருவின் செயல்களை முறியடிக்கும்படி முன்னேறிச் செல்வோராயும் தங்களை மாற்றிக்கொள்கின்றனர். நமது ஆவிக்குரிய பாடம் இன்றும், என்றும், எப்பொழுதும் பரிசுத்த வேதத்திலேயே. அவர் எழுதிக்கொடுத்துள்ளதை கருத்தாய் கவனித்தால், சத்துருவின் கண்ணிகளுக்குத் தப்பிப் பிழைக்கலாம், மற்றோரையும் தப்புவிக்கலாம்; ஆயத்தமாவோம்.

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.(1பேது 5:8) சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான்.(2இரா 6:8)

சீரியாவின் இராஜாவுக்கும் தேவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; அப்படியே இஸ்ரவேலின் இராஜாவும் தேவனை தேவன் என்று அறிந்திருந்தாலும், தெரிந்திருந்தாலும், அவரையே வணங்கிக்கொண்டிருந்தாலும், அவருக்காக வைராக்கியம் கொண்டிருந்தாலும், தேவனிடத்திலிருந்து நேடியாகச் செய்தியினைப் பெற்றுக்கொள்ளும் திறன் இல்லை. இந்நிலையிலே உருவாகின்ற ஆபத்து, அழித்துவிட வல்லமையுள்ளது. தேவன் தன் ஜனத்தைக் காக்கிறவர், எனவே தேவஜனத்திற்குள்ளே தன்னோடு உறவாடுகிற மனிதர்களைக் கொண்டு அவர்கள் உயிரைக் காக்கின்றார்.

சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ண, எங்கு பாளயமிறங்கலாம் என்று ஆலோசனை பண்ணிக்கொண்டிருந்தான். அந்த ஆலோசனையின்போது தேவன் உளவாளியாக இருந்தார் என்பதை சீரிய ராஜாவும், அவன் உடனிருந்தவர்களும் அறியாதிருந்தார்கள். சத்துருவின் திட்டங்களும், தீர்மானங்களும் தேவனுக்குத் தெரியாதவைகள் அல்லவே. யுத்தத்தின்போது சத்துவத்தைக் கொடுத்து எதிரியை முறியடிப்பது மட்டுமல்ல, சத்துரு நமக்கு விரோதமாக யுத்தத்திற்காக ஆலோசனை பண்ணும்போதே, அதனை நமக்கு அறிவிக்க தேவன் போதுமானவர். ஆனால், அதை அறிந்துகொள்ளும் அறிவு நமக்கு உண்டா? புரிந்துகொள்ளும் புத்தி இருக்கிறதா? தேவன் காண்பிப்பதைக் காணும் பிரகாசமுள்ள மனக்கண்கள் நமக்கு வேண்டும் (எபே 1:19).

இல்லையெனில், நமக்கு விரோதமாக எழும்பும் சத்துருவின் பிரயத்தனங்களை, தேவன் அறிந்திருந்தும், நமக்கு அதனை அறிவிக்க முயற்சித்தும், அதனை அறிந்துகொள்ளும் அவரது சமூகத்தினின்று நாம் விலகி நிற்போமெனில், தேவனே அறிந்திருந்தாலும் ஆபத்தில் நாம் அகப்பட்டுக்கொள்ளுவோம். நான்தான் கிறிஸ்தவனாயிற்றே, கிறிஸ்தவ பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவனாயிற்றே, கிறிஸ்தவர்களின் முறைகளைப் பின்பற்றுகிறவனாயிற்றே, கிறிஸ்துவுக்காக கொடுக்கிறவனாயிற்றே என்ற நினைவுடன் இருந்துகொண்டு, அவருடனான உறவினை உதறித்தள்ளிவிடமுடியாது. அவருடனான தனிப்பட்ட உறவு ஒவ்வொருவருக்கும் தேவை.

தேவனுடனான தனிப்பட்ட உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள், அவரை அண்டியுள்ள மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தேவனைக் காட்டிலும், மத்தியஸ்தர்கள் பெரிதானவர்கள் அல்ல.

சத்துருவின் ஆலோசனையைக் கேட்டுச் சொல்ல தேவன் ஆயத்தம், ஆனால் தேவனின் சத்தத்தைக் கேட்க நீ ஆயத்தமா? தேவன் நம்மோடு மாத்திரமல்ல, எதிரியின் கூட்டத்திலும் உளவாளியாக இருக்கிறார். ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார் (மத் 18:20). ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான். (2இரா 6:9,10) ஒரு நாள் கூட எலிசா தேவனை நோக்கிப் பார்க்க தவறியிருப்பான் என்றால், இஸ்ரவேலுக்கு விரோதமான சீரியரின் ஆலோசனை தெரியாதிருந்திருக்குமே; அதினால் அவர்கள் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பார்களே.

ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான். அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை (பிர 9:14,15) என்று சாலமோன் எழுதிவைத்துள்ளான். (உதாரணம். ஆசாரியனுக்கு அப்பம் கொடுக்கும் தேவன்) நமக்குத் தெரிந்தது அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்குத் தாரும் என்பதே. யாரோ நமக்கு அறிவிக்கவேண்டும் என்ற நிலையில் இருந்தால், அறிவிக்கிறவர் அயர்ந்துவிட்டால் பிடிபட்டுவிடுவோம். அப்படிப்பட்டோர் இருப்பது சந்தோஷமே, எனினும் தேவன் நமக்கு நேரடியாக அறிவிப்பது அதைவிட சந்தோஷமல்லவா! 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி