Skip to main content

தடம்புரளச் செய்யும் தேவைகள்

 

தடம்புரளச் செய்யும் தேவைகள்



முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். (மத் 6:33)


தேவனுடைய ராஜ்யமா? அல்லது தேவைகளின் ராஜ்யமா? என்ற கேள்விக்கு வாழ்க்கையில் விடைகாண விழையும்போது, பயணித்துக்கொண்டிருக்கின்ற ஆவிக்குரிய வாழ்க்கையின் வழியிலிருந்தே விலகி வழுக்கி விழுந்துவிடும் மனிதர்கள் அநேகர். தேவைகள் வாழ்க்கையில் முந்திக்கொள்ளும்போது, தேவனையோ வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளிவிடும் மக்கள் பலர் உண்டு. மேலும், தேவைகள் சந்திக்கப்பம்வரை தேவனோடு சம்பந்தம் கொண்டு,  தேவைகள் சந்திக்கப்பட்டுவிட்டவுடன் தேவனை விட்டே தூரமாகிவிடும் கூட்டத்தினரும் உண்டு. அதுமாத்திரமல்ல, தேவைகளைச் சந்தித்தால் மாத்திரமே, தேவனை தேவனென்று ஏற்றுக்கொள்ளுவோரும் இவ்வுலகத்தில் உண்டு; இத்தகை கூட்டத்தினரை, பாதையில், பாதியில், பசிக்காகக்கூட பிசாசு திசை திருப்பிவிடக்கூடும். ஆசீர்வாதத்திற்குப் பாத்திரனாயிருந்தபோதிலும் (ஆதி. 28:14,15), 'ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட  பின்னரே' பொருத்தனை என்பதில் யாக்கோபு கவனமாயிருந்தானே (ஆதி. 28:21,22). 'மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே' (மத் 4:4) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள், பசியாயிருந்தாலும் 'அப்பத்திற்கு அல்ல' 'தேவனுடைய வார்த்தைக்கே' முதலிடம் என்பதை அல்லவோ நமக்கு பிரதியொலிக்றது. 

பிரசங்க மேடைகளிலும் தேவனுடைய ராஜ்யத்தைப் பின்னுக்குத் தள்ளி பூஜ்யமாக்கிவிட்டு, தேவைகளின் ராஜ்யத்தையே பிரசங்கித்துக்கொண்டிருக்கும் ஜனங்கள் அநேகர். இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் 

பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் (1கொரி 15:19) என்பதல்லவோ பவுலின் ஆலோசனை. உலக ஆசைகள் நம்மிலே பெருகப் பெருக, தேவ ராஜ்யத்திற்கடுத்த ஆஸ்திகளை நம்மிடத்திலிருந்து சத்துரு திருடிக்கொள்ளுவது நிச்சயம். தேவ ராஜ்யத்தினையே நோக்கிக்கொண்டிருக்கும் கண்களை தேவைகளை நோக்கித் திருப்பி, தங்களிடத்திலிருக்கும் ஆஸ்திகளைக் கொண்டு தேவராஜ்யத்தின் தேவைகளைச் சந்திப்பதற்குப் பதிலாக, தேவனுடைய ராஜ்யம் தன்னுடைய தேவைகளைச் சந்திக்கவேண்டும் என்றே சிந்தித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் உண்டு. அத்தகைய மனிதர்கள், 'இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும், நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்' (1நாளா 22:14) என்று தாவீதைப் போலவும், 'ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய்  உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்' (2கொரி 12:15) என்று பவுலைப் போலவும் சொல்வது கடினமே. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் (யோவா 3:30) என்றல்லவோ தன்னுடைய விருப்பத்தை அறிக்கை செய்கிறார் யோவான்.

ஊழியத்தின் பாதையிலும் இது பொருந்தக்கூடியதே. தேவனுடைய ராஜ்யத்திற்கடுத்தவைகளுக்கும், தேவனுடைய ராஜ்யத்திற்கே முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், சத்துருவின் சந்ததிகள் சந்துகளில் ஊடுருவ இடங்கொடுப்போமென்றால், எந்நேரத்திலும் சத்துரு ஊழியத்திற்கு முட்டுக்கட்டையாக மாறி அதன் ஓட்டத்தையே முடித்துவிடக்கூடும். பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள் (எண்; 11:4-6) என்று இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து வாசிக்கின்றோமே. புறஜாதியான மக்கள் பெருகினபோது, அவர்களுடைய இச்சைக்கு நேராக இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையும் இழுக்கப்பட்டது. வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள் (சங் 106:14). இத்தகைய பரீட்சையை நம்முடைய ஊழியத்தில் நாம் தொடங்கிவிடக்கூடாது. 


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி