Skip to main content

தகர்ந்துபோன தலைவன்

 

தகர்ந்துபோன தலைவன்



அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான்.(1சாமு 18:11)


தன்னைப் பார்க்கிலும் தரத்தில் இன்னும் உயர்ந்தவர்களாகவும், சிறந்தவர்களாகவும் உடனிருப்பவர்களை உருவாக்கணே;டும் என்ற உள்ளத்துடனும், அதற்கேற்ற எண்ணத்துடனும் செயல்படுபவர்களே உன்னதம் விரும்பும் தலைவர்கள். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படியாக இப்பூமிக்கு வந்த இயேசு கிறிஸ்துவும், 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய 

கிரியைகளையும் செய்வான்' (யோவா 14:12) என்றுதானே விரும்பி உரைத்தார். ஆனால், இன்றைய நாட்களில் தலைவர்கள் சிலரோ, தன்னோடிருப்பவர்கள் தன்னைக் காட்டிலும் உயர்வாகப் பேசப்பட்டுவிடக்கூடாது என்றும், தன்னைக் காட்டிலும் அதிகமாக ஜனங்களுக்கு முன் காட்சியளித்துவிடக்கூடாது என்றும், தங்களைக் காட்டிலும் அதிகமாகச் செயல்பட்டுவிடக்கூடாது என்றும், தங்களைவிட சிறந்தவர்களாகவும், உயர்ந்தவர்களாகவும் பெயர்பெற்றுவிடக்கூடாது என்றுமே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களிலும் மற்றும் ஆண்டவருக்கிடையிலான உறவிலும், தாலந்துகளிலும் தன்னோடிருப்பவர்களின் பாத்திரம் பரலோக தேவனால் நிறைந்து வழிந்துகொண்டிருக்கின்றபோதிலும், சகோதரர்களாக

அவர்களைப் பாவிக்காமல் சத்துருக்களாகவே தங்களுக்கு முன் பார்த்துக்கொண்டிருக்கிற தலைவர்கள் உண்டு (சங். 23:5). அரசனைப் போல அரியனையில் தான் அமர்ந்திருந்தபோதிலும், அடுத்தவர்கள் தன்னைக் காட்டிலும் அதிகமாக அளக்கப்படும்போது, தன்னுடைய பாத்திரத்தில் இருப்பதையும் இழந்து, சத்துருவோடு இணைந்துவிடுபவர்கள் இவர்கள். சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின்மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக் கொள்ளுவான் (1சாமு 14:52) என்பதுதான் சவுலின் குணம்; என்றபோதிலும், தன்னைக் காட்டிலும் அதிகமாக தாவீது பாராட்டப்பட்டபோது, தாவீது பலசாலியாயிருந்தபோதிலும், பழிவாங்கத் துடித்துவிட்டானே! 

சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்று சவுலின் ஊழியக்காரர் சொன்னபோது, அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான். அதுமாத்திரமல்ல, அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்

என்றும், தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்றும் சவுல் சொன்னதாக வாசிக்கின்றோமே. (1சாமு 16:16,18,21,22) வாசிக்கின்றோமே. 'பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்' என்று தாவீது வர்ணிக்கப்பட்டிருந்தபோதிலும், பெலிஸ்தியருடன் நடைபெற்ற யுத்தத்திற்கும், கோலியாத்தை எதிர்கொள்வதற்கும் தாவீதை சவுல் அழைத்துச் செல்லவில்லை; அவன் ஆட்டு மந்தைகளோடேயே விடப்பட்டிருந்தான். என்றபோதிலும், 'பராக்கிரமசாலியான தாவீதுக்கு தகப்பன் ஈசாயின் வழியாக யுத்தத்திற்குச் செல்ல பாதையை உண்டாக்கிக்ககொடுத்தார் ஆண்டவர்'. அதுமாத்திரமல்ல, தாவீது பெலிஸ்தியனான கோலியாத்தைக் வென்றபோதும், சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்றுமுதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான் (1சாமு 18:2). தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும்போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான் (1சாமு 18:5) என்றும் காண்கிறோமே.  

எனினும், தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பிவந்தபின்பு,  ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல்பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தபோது, அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினபோது (1சாமு 18:6,7) சவுலினால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை; தனக்குள்ளேயே சவுல் தகர்ந்துபோனது மாத்திரமல்ல, தாவீதையும் தகர்த்துவிடவேண்டும் என்று துடித்தானே. இத்தகைய நிலையிலுள்ள தலைவர்கள் இன்றும் உண்டு, பிரசங்க பீடத்திலோ, பொறுப்பிலோ, ஸ்தானத்திலோ, உடனிருக்கும் ஊழியர்கள் தங்களைக் காட்டிலும் ஒருபடி உயர்ந்தால்கூட உடைந்துபோகும் மனதுடைய தலைவர்கள் உண்டே. சபையில் அவர்களை சிறுமைப்படுத்தாமல், பரந்த மனதோடு சிறந்த ஸ்தானத்தில் வைத்தால், பரலோகம் மகிழும். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி