Skip to main content

பழமானால் பசி தீரும்

பழமானால் பசி தீரும்




வழியில் நாம் நின்றுகொண்டிருந்தால் மாத்திரம் போதாது; மாறாக, இயேசு கிறிஸ்துவின் விழிகள் நம்மிடத்தில் என்ன தேடுகின்றன என்பதையும் நாம் அறிந்திருப்பது அவசியம். ஆயக்காரனுக்குத் தலைவனும், ஐசுவரியவானுமாயிருந்த சகேயு, இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். என்றபோதிலும், அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான் (லூக் 19:2-4). 'ஆயக்காரனுக்குத் தலைவனும், ஐசுவரியவானுமாயிருந்ததினால்' அடுத்தவரிடத்தில் உதவி கேட்பதற்கு ஒருவேளை சகேயு வெட்கப்பட்டிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அவனது கண்களில் பட்டது ஒரு காட்டத்தி மரமே. அந்த காட்டத்தி மரம் சகேயுவின் கனவை நனவாக்கியது; சகேயுவின் விருப்பமும் நிறைவேறியது. என்றபோதிலும், அப்போது, உதவிசெய்த காட்டத்தி மரத்தை அல்ல, அதன் மேல் ஏறியிருந்த சகேயுவையே நோக்கிப் பார்த்தன இயேசு கிறிஸ்துவின் கண்கள். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார் (லூக் 19:5). இயேசு கிறிஸ்து போகும் வழியில் காட்டத்தி மரம் நின்றுகொண்டிருந்தபோதிலும், சகேயுவை தன்மீது சுமந்துகொண்டிருந்தபோதிலும். அதனிடத்தில் கனிகள் காணப்பட்டதோ அல்லது காணப்படவில்லையோ? நாம் அறியோம்; எனினும், அப்போதைக்கு இயேசு கிறிஸ்துவின் பார்வைக்கு அது தப்பித்துக்கொண்டது. 

இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார் (யோவா 1:47, 48). அடர்ந்து வளரும் அத்திமரம், தனது நிழலினால் மனிதர்களைக் கவரக்கூடியது. எனவே, சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள் (1இரா 4:25) என்றும், அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரி;ன் வாய் இதைச் சொல்லிற்று (மீகா 4:4) என்று வேதத்தில் வாசிக்கின்றோம். இவ்வாறு, நிழலுக்காக ஒருவேளை நாத்தான்வேல் அத்திமரத்தின் அடியிலே நின்றுகொண்டிருந்திருக்கக்கூடும். இயேசு கிறிஸ்து போகும் வழியில் ஒருவேளை அது நிற்காதிருந்தாலும், அநேக மனிதர்கள் கடந்துசெல்லும் பாதையில் அது நின்றிருந்திருக்கக்கூடும். நாத்தான்வேலுக்கு மாத்திரமல்ல, அநேக மனிதர்களை தனது நிழலினால் அது இளைப்பாற்றியிருக்கக்கூடும். என்றபோதிலும், அதனிடத்தில் கனிகள் காணப்பட்டதோ, காணப்படவில்லையோ, நாம் அறியோம்; இயேசு கிறிஸ்துவின் கண்களுக்கோ அப்போது அது தப்பித்துக்கொண்டது. 

எனினும், இயேசு கிறிஸ்துவோ அதன் மேல் ஏறுவதற்காகவோ, நிழலுக்காகவோ அத்திமரத்தினண்டை செல்லவில்லை; மாறாக, தனது பசியைத் தீர்த்துக்கொள்ளும்படியாக பழங்களையே தேடிச் சென்றார். அப்போது, அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று (மத் 21:19). அவரே அருகில் வந்தபோது மாட்டிக்கொண்டது. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26)

உலக மனிதர்களுக்கு ஒருவேளை நம்மால் இயன்ற உதவிகளைச் செய்துவிடக்கூடும், நம்மிடத்திலிருப்பவைகளைக் கொண்டு அவர்களைத் திருப்திபடுத்திவிடக்கூடும்; என்றபோதிலும், இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நாம், கனியற்றவர்களாயிருப்போமென்றால், பட்டமரம்போல விட்டுவிடப்படுவோமே. அப்பொழுது மரங்கள் அத்திரமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது (நியா 9:10,11) என்று வாசிக்கின்றோமே. ராஜாவாயிருப்பது அல்ல, கனிகொடுப்பதே முக்கியம். மற்றவர்களது காயங்களையும் குணமாக்கும் கனிகள் நம்முடைய வாழ்க்கையில் உண்டாகட்டும் (2 இராஜா. 20:7). மனிதர்களின் வெளிப்புற நிர்வாணத்தை மூடினால் மாத்திரம் போதாது (ஆதி. 3:7), நமது கனிகள் அவர்களது உட்புறத்தை அழகாக்கும்.

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி