Skip to main content

ஒன்று நூறாக

 

ஒன்று நூறாக

 

சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.(லூக் 8:8)

கிறிஸ்துவை அறிந்துகொண்ட நாம், கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கும் நாம், ஆவிக்குரிய வாழ்க்கையில் பயணிக்கும் நமது வாழ்க்கையிலிருந்து தேவன் முழுமையான பலனை எதிர்பார்க்கிறார். சீஷர்களும், ஊழியத்தில் உதவி செய்வோரும், பிற ஜனங்களும் இயேசுவைச் சூழ்ந்து நிற்கும்போது, இயேசு சொன்ன விதைகளைப் பற்றிய உவமை நாம் அறிந்த ஒன்றே; எனினும், இந்த உவமையின் கருத்து என்னவென்று சீஷர்கள் இயேசுவினிடத்தில் கேட்டதுபோல (லூக் 8:9), நாமும் கேட்கும் நிலையிலேயே வாழ்ந்துவிடக் கூடாது. இயேசு போதிப்பதின் கருத்தினை அறியாதோராய் நாம் இருப்போமெனில், கனிகொடுக்காதவர்களாக நாம் மாறிவிடும் சந்தர்ப்பம் நமது வாழ்க்கையில் உண்டாகிவிடும். இயேசு ஏதோ போதித்தார்; ஆனால், என்ன போதித்தார் என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை என்று சீஷர்கள் அமைதியாய் இருந்துவிடவில்லை; அதன் கருத்தினை அறிந்துகொள்ள முற்பட்டார்கள்.

இன்றைய நாட்களில், பலர் போதனைகளின் மேலே கவனம் செலுத்துவதில்லை, ஆலயத்தில் கொடுக்கப்படும் செய்திகளின் சாராம்சத்தை அறிந்துகொள்ளவும் அதன்படி செய்ய தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் முன்னேறுவதில்லை. தங்களுக்கு விளங்கினாலும், விளங்காவிட்டாலும்; காதுகளால் கேட்டுவிட்டு செல்வோராகக் காணப்படுகின்றனர். போதனையினையே புரிந்துகொள்ளாத ஜனங்களின் மனதில் விழுந்த விதை முழுமையான பலனைத் தரமுடியாது. நூறாகப் பலன் தர வேண்டுமென்றால், சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதையினிடத்தில் கர்த்தர் எதிர்பார்ப்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டுமே. வழியருகே விழுந்த விதைகள் மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகளால் பட்சிக்கப்பட்டது; கற்பாறையின் மேல் விழுந்த விதையோ, ஈரமில்லாமல் உலர்ந்துபோயிற்து; முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைகள், முட்களால் நெருக்கப்பட்டது. ஆனால், நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கோ இவ்வித ஆபத்துக்கள் இல்லை, அங்கே முட்கள் இல்லை, பாறை இல்லை, ஆகாயத்துப் பறவைகள் இல்லை. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் கனிகொடுப்பதைத் தடைசெய்வதற்கும், தடுத்து நிறுத்துவதற்கும் அங்கே விரோதமானவைகள் ஒன்றுமில்லை. எனவே நாம்நூறத்தனையான பலனைக் கொடுக்கவேண்டும், முழுமையான பலனைக் கொடுக்கவேண்டும். முற்றிலும் பாதுகாப்பான இடத்தில் விழுந்த அந்த விதை நூறத்தனையான, தேவன் விரும்புகின்ற, முழுமையான பலனைக் கொடுக்கவேண்டும். நல்ல நிலமாக கர்த்தர் நம்மை மாற்றியிருப்பாரென்றால், வசனம் நமது வாழ்க்கையில் விழுந்ததும் அது செயல்படத் தொடங்கும். நல்ல நிலத்தில் இருந்தபோதிலும், ஆவிக்குரியவர்கள் என்று சொல்லிக்கொண்டும், அரைகுறையாகக் கனிகொடுத்துக்கொண்டு அலைந்துகொண்டிருக்கும் மக்கள் அநேகர். தாலந்துகள் பலவற்றைப் பெற்றும், திறமையாக அவைகளைப் பயன்படுத்தாமல் தூங்கிக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர். நல்ல நிலத்தில் இருக்கின்ற விதை நூறாகப் பலன் தரவேண்டும் என்பதே தேவனின் விருப்பம். நல்ல நிலத்தில் இருக்கின்ற ஒவ்வொரு விதைகளும் நூறு நூறாகப் பலன் தருமென்றால், அதன் பிரதிபலிப்பு பரலோகத்தை மகிழ்விக்கும். ஐந்து பேர் சேர்ந்து ஒருவர் கொடுக்கக் கூடிய பலனைக் கொடுத்துக்கொண்டிருக்கக் கூடாது. வசனம் நிலத்தில் விழுந்தாலும், உன் வாழ்க்கைதான் பலனைக் கொடுக்கவேண்டும்.

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி