Skip to main content

வழி காட்டும் வீரர்கள்

 

வழி காட்டும் வீரர்கள்



தன்னைக் குறித்து தானே அறிந்துகொள்ள அவதியுறும் இவ்வுலக மனுக்குலத்திற்குள், தன்னைக் குறித்து மாத்திரமல்ல, பிறரைக் குறித்தும், அவர்களது பாதைகளைக் குறித்தும், அவர்களது வாழ்க்கையைக் குறித்தும் மற்றும் அவர்களது வருங்காலத்தைக் குறித்தும் விண்ணகத்தின் வெளிச்சத்தில் வெளிப்படையாக அறிந்த ஊழியர்கள் உண்டு. கர்த்தர் காண்பிக்கும் உள்ளங்களை நோக்கி ஓடி ஓடி ஊழியம் செய்யும்படி, அம்மாபெரும் பணிக்கென்று தங்களை அர்ப்பணித்தவர்களாகவும், உயிரையும் பணையம் வைத்தவர்களாகவும், தங்களைத் தாங்களே உந்தித்தள்ளிக்கொள்ளும் ஊழியர்கள் அநேகர் உண்டு. கனனமான ஊழியத்திற்கு கர்த்தரால் அழைக்கப்படவேண்டும் என்று காத்திராமல், 'போ' என்ற வார்த்தையைக் கேட்காமலேயே புறப்பட்டுச் செல்பவர்கள் இவர்கள். ஆத்துமாக்களைச் சந்திக்கும்படியாகவும், இரட்சிப்பின் வழிக்கு நேராகத் திருப்பும்படியாகவும், பிறருடைய தியாகங்களை எதிர்பார்த்து அல்ல, தங்களையே தியாகமாக பலிபீடத்தில் வைத்து பயணம் செய்பவர்கள் இவர்கள். 

இத்தகைய ஊழியர்களைப் புரிந்துகொண்டு, அவர்களது வார்த்தைகளுக்குச் செவிமடுத்து, தங்களது ஆத்துமாக்களைத் தப்புவித்துக்கொண்ட மனிதர்கள் அநேகர் உண்டு; எனினும், உணர்வற்றவர்களாக, இருளின் ஆதிக்கத்திற்குள்ளும், உலகத்தின் பிடியிலும், மாம்சீக இச்சைகளிலும் மற்றும் பிசாசின் பிட்சிலும் தங்கள் பாதங்களைச் சிக்கவைத்துக்கொண்டவர்களாக, அத்தகைய ஊழியர்களின் வார்த்தைகளை மனதில் கொள்ளாமலும், சிந்தியாமலும், பாவத்தின் சம்பளமான இரண்டாம் மரணத்திற்கு நேராகவே தங்கள் ஆத்துமாவை இழுத்துக்கொண்டு செல்லும் மனிதர்கள் ஏராளம். நரகத்தின் வேதனைக்குத் தப்பும்படியாக, நம்மிடத்தில் அனுப்பப்படும் ஒற்றர்களான ஊழியர்களை நாம் உணர்ந்துகொள்வது அவசியம். அவர்கள் நம்மைத் தப்புவிக்கும்படியாக தெரிந்துகொள்ளப்பட்ட கர்த்தருடைய கரத்தின் பாத்திரங்களே என்பதை புரிந்துகொண்டோமானால், ஆத்துமாவை அழிவினின்று நாம் காத்துக்கொள்வது நிச்சயம். 'போகவேண்டாம்' என்று ஊழியர்கள் எச்சரிக்கும் இடத்திற்கு நாம் போவோமென்றால், நம்முடைய பயணம் திரும்பிவரக்கூடாததாக மாறிவிடக்கூடும். புத்தியீனனான வாலிபனின் ஈரல் குத்திக் கிழிக்கப்பட்டது போல (நீதி. 7:23), நம்முடைய வாழ்க்கையும் சத்துருவினால் சிதைக்கப்பட்டுவிடக்கூடும். நம்முடைய ஆத்துமாவை காப்பாற்ற இயலாமற்போகும் யுத்தத்தில், நம்முடைய சரீரத்தை ஈடுபடுத்தாதபடிக்கு நாம் கவனமாயிருக்கவேண்டும்.

சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணியபோது, தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான் (2 இராஜா. 6:8-10). இஸ்ரவேல் ராஜா எடுத்த இந்த முடிவினிமித்தம், அவனது ஜீவன் மாத்திரமல்ல, தேசத்து ஜனங்களின் ஜீவனும் காக்கப்பட்டது அல்லவா. நம்முடைய வாழ்க்கையிலும், சில நேரங்களில் சத்துருவை வெற்றிகொள்ளும்படியாகவும், யுத்தத்தைச் சந்திக்கும்படியாகவும் தேவன் நம்மை புறப்பட்டுச் செல்லும்படியாக ஆணையிடக்கூடும்; எனினும், சில நேரங்களிலோ, 'இன்ன இடத்திற்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்' என்ற இத்தகைய எச்சரிப்பை விடுத்து யுத்தத்திலிருந்து நம்மை விலகிச் செல்லும்படியாக வழிநடத்தக்கூடும்.

கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுத்துக்கொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயை நோக்கி, நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தபோது, மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது. நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார். அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்;றான்.என்றபோதிலும், மோசேயின் வார்த்தைக்கு செவிகொடாமல், மலையின் மீது அவர்கள் ஏறத் துணிந்தபோது, அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும் துரத்தினார்களே (எண்; 14:40-45). வீழ்ந்துபோன ஆத்துமாவை வைத்துக்கொண்டு நாம் வீரர்கள் என நிரூபிக்கத் துணியக்கூடாது. 

பாலிய இச்சை (2 தீமோ. 2:22), மாம்ச இச்சை (1 பேதுரு 2:11), வேசித்தனம் (1 கொரி. 6:18),  விக்கிரக ஆராதனை (1 கொரி. 10:14; (1 யோவான் 5:21), புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் (2 தீமோ. 2:23), சீர்கேடான வீண்பேச்சு (2 தீமோ. 2:16) மற்றும் சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகள் (1 தீமோ. 4:7) போன்ற பாவங்களுக்கு விலகுங்குள் என்று வேதம் வழிகாட்டுகின்றதே. விலகிச் செல்லவேண்டிய இடத்தை விட்டுவிட்டு, விழிகளால் பார்த்துக்கொண்டேயிருப்போமென்றால் விழுந்துவிடுவது நிச்சயம். 'கர்த்தருடைய சந்நிதிக்கு விலகும் நிலைக்கும் நாம் தள்ளப்பட்டுவிடுவது நிச்சயம் (ஆதி. 3:8). சரீரத்தை யுத்தத்திற்குப் பயன்படுத்தி, ஆத்துமாவை சத்துரு அழித்துவிடும் தந்திரத்திற்குத் தப்பிக்கொள்ளுவோம்.

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி