Skip to main content

தூக்கம் தந்த துக்கம்

 

தூக்கம் தந்த துக்கம்



மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.  (மத் 13:25)


செத்த ஈக்களை நாம் அடையாளம் கண்டுகொள்ளாவிட்டால், நம்முடைய அடையாளத்தையே அவைகள் அழித்துவிடும். உயிரோடு இருக்கும் ஊருக்குள் உயிரில்லாத ஒரு உடலைக் கண்டால், உடனே அதனை உயிரோடு எழுப்பவேண்டும்; இல்லையென்றால், ஊரை விடடே அதனை அகற்றிவிடவேண்டும்; அப்படிச் செய்யாவிட்டால், வீட்டில் தொடங்கும் நாற்றம் விரைவில் வீதியில் வீசத் தொடங்கிவிடும். விழித்திருக்கிற நாம் துரிதமாகவும், துணிவுடனும் இத்தகைய பணியைச் செய்யத் தவறிவிட்டால், மரித்தேரின் எண்ணிக்கை ஊரின் எல்லைக்குள் பெருகத்தொhடங்கிவிடும். இந்த பெருக்கம் ஆவிக்குரியவர்களின் எண்ணிக்கையையும் விரைவில் ஊருக்குள் சுருங்கச் செய்துவிடும். இறுதியில் அப்போஸ்தலனாகிய பவுல் சொன்ன 'ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்' (எபே 5:14) நிலைக்கு நமது விகிதத்தைக் கொண்டுவந்துச் சேர்த்துவிடும். மரித்தோரின் ஊராகவே அது மாறி, நம்மை தனித்திருக்கும் நிலைக்குள் தள்ளிவிடும்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் தூக்கம், மரித்தவர்களைக்கூட அடையாளம் காணக்கூடாதபடிக்கு நம்முடைய கண்களை அடைத்துவிடும். குடிகாரர் களையும், விபச்சாரக்காரர்களையும், வேசித்தனத்திலிருப்போரையும், காமவிகாரங்களில் ஊறிக்கிடப்போரையும், எதிர்பாலினருடனான இச்சைகளில் தினமும் திளைத்திருப்போரையும், அசுத்தமான உடைகளோடும் மற்றும் உதடுகளோடும் உலாவருவோரையும், வசனத்திற்கு விரோதமானவர்களையும், பரிசுத்தத்திற்குத் தூரமானவர் களையும், பாவங்களிலும் மற்றும் சிற்றின்பங்களிலும் சிக்கியிருப்போரையும், துராலோசனைக்காரர்களையும், ஒழுங்கற்றவர்களையும், கீழ்ப்படியாதவர்களையும், கர்த்தருடைய ஊழியத்தை அசட்டை பண்ணுகிறவர்களையும், இரட்சிக்கப்படாதவர்களையும்  கூடவே வைத்துக்கொள்ளும்படியான துக்கமான நிலைக்குள் ஆவிக்குரிய தூக்கம் நம்மைக் கொண்டுசென்றுவிடும். இன்றைய நாட்களிலும், ஊழியங்களில் உள்ள பலர் உறங்கிவிட்டதினாலேயே, இப்படிப்பட்டவர்களை சத்துதுரு உள்ளே ஊடுருவச்செய்துவிட்டான். 

நீங்கள் நினையாதவேளையில் வீட்டெஜமான் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள் (மாற் 13:36) என்று இயேசு கிறிஸ்து போதித்தாரே; இதன் பொருள் என்ன? சத்துரு இப்படிப்பட்டவர்களை உள்ளே நுழைக்கும்போது, அவர்களை துரத்துவதற்கு நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும்; மாறாக, தூங்கிக்கொண்டிருக்கக்கூடாது என்பதுதானே! இத்தகைய தூக்கம் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுமானால், நாம் இருக்கிற இடத்தையே அது நாசம்பண்ணிவிடும் என்பது நிச்சயம். ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம் (1தெச 5:6) என்று பவுலும் எழுதி உணர்த்துகின்றாரே. செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் (பிர 10:1) என்று எழுதுகின்றான் சாலொமோன். இதன் அர்த்தமென்ன? இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு செய்துவைத்திருந்த தைலத்தை, ஊழியத்தை, சபையை அல்லது ஸ்தாபனத்தை 'செத்துப்போன ஈக்கள்' நாறிக் கெட்டுப்போகச் செய்துவிடும் என்பதுதானே. 

பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது (மத் 13:24-26) என்று வேறொரு உவமையையும் இயேசு கிறிஸ்து போதித்தாரே. மனுஷர் நித்திரை செய்யும்போது, சத்துருவோ தன்னுடைய வேலையைத் தொடங்கிவிடுகின்றான். இந்த மனிதன் தன்னுடைய தோட்டத்திலே நல்ல விதையைத்தான் விதைத்திருந்தான், களைகளை அவனது கைகள் விதைக்கவில்லை; என்றபோதிலும், இந்த மனிதன் நித்திரைசெய்தபோதோ சத்துருவின் கைகள் களைகளை இவனது தோட்டத்திற்குள் விதைத்துவிட்டன. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது (மத் 13:27) என்று கேட்கும் அளவிற்கு வெளிப்படையாக அவைகள் தென்படத் தொடங்கியிருந்தது. சத்துருதான் அதைச் செய்தான் என்பதை அந்த மனிதன் அறிந்திருந்தான்; என்றாலும், கோதுமையும் வேரோடேகூடப் பிடுங்கப்பட்டுவிடாதபடிக்கு, தன்னுடைய வேலைக்காரர்களுக்கு களைகளைப் பிடுங்கிப்போட அந்த மனிதன் அனுமதியளிக்கவில்லை (மத். 13:29); அறுப்பு மட்டும் இரண்டும் வளரும் நிலைக்கு அந்த தோட்டம் தள்ளப்பட்டது. தன்னுடைய தோட்டத்தை இந்த நிலைக்கு உள்ளாக்கிவிட்ட தலைவர்கள் இன்றும் உண்டே. நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் (லூக் 22:46) என்ற இயேசு கிறிஸ்துவின் சத்தம் இன்று நம்முடைய செவிகளிலும் தொனிக்கட்டும்.

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி