Skip to main content

அவரும், அவனும்

அவரும், அவனும்

 

தேவன் நம்முடைய பிதா, நாம் அவருடைய பிள்ளைகள், நாம் அவருடைய பாதுகாப்பின் வளையத்திற்குள் இருப்பவர்கள், அவரால் பாதுகாக்கப்படுகின்றவர்கள். எனினும் சத்துருவோ எப்பொழுதும் நம்முடைய வாழ்க்கையை அழிக்கும்படிக்கே நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிறான். அவன் ஆக்க அறியாதவன், அழிப்பதையே அறிந்தவன். தேவனுடைய வேலிக்குள் இருப்பவர்களை வேலிக்கு வெளியே கொண்டுவர சத்துரு எடுக்கும் முயற்சிகள் அநேகம்; இவைகளில் நாம் விழுந்துவிடக்கூடாது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் வேலியை விட்டு எவ்விதத்திலும், எக்காரியத்திலும் வெளியேறிவிடக்கூடாது. நாம் அவருடைய திராட்சத்தோட்டமானவர்கள். அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருக்கிறார் (ஏசா. 5:2) என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறான். இதனையே இயேசுவும் உவமையின் மூலமாக உறுதிப்படுத்துகின்றார், 'வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதை குத்தகையாக விட்டு புறதேசத்துக்குப் போயிருந்தான்' (மத். 21:13) என்று போதித்தார். என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய் (உன். 4:12).

நமது வேலியைப் பிரித்து நம்மைக் கேலியாக்க விரும்புகிறவன் சாத்தான். சாத்தான் யோபுவைச் சுற்றிலும் தேவன் வேலியடைத்திருந்தார். வேலிக்கு வெளியே உலாவிக்கொண்டிருந்த சாத்தான், உள்ளே நுழைய வழி கிடைக்காததால், அடைத்தவரிடமே சென்று அனுமதி கோருகின்றான். சாத்தான் கர்த்தரை நோக்கி: யோபு விருதாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் (யோபு 1:10) என்று சொன்னான். அத்துடன், உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் (யோபு 1:11) என்று சொன்னான். வேலிக்குள் இருப்பவர்கள் அடைத்தவராலேயே அழிக்கப்படவேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு. வேலியை வைத்து பயிரை மேய விரும்புகிறவன் சாத்தான். தேவனே உமது கரத்தை நீட்டி யோபுவை அழியும் என்பதுதான் சாத்தான் கர்த்தருக்குக் கொடுத்த ஆலோசனை.you take away everything (GNB), put forth your hand now (MKJV & ASV) என்றே ஆங்கில வேதாகமங்கள் இவ்வசனத்தை மொழியாக்கம் செய்துள்ளன. ஆனால், கர்த்தரோ, அவனது அழிக்கும் ஆலோசனையை அழிப்பவனிடமே (யோவான் 10:10) விட்டுவிட்டார். நீதிமானுக்கு விரோதமாக கர்த்தர் கரம் நீட்டுவதில்லை, அவனது வேலியை அவர் பிரிப்பதுமில்லை. எனவே, கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார் (யோபு 1:12). உம் கையை நீட்டும் என்று சொன்னவனிடம், உன் கையை நீட்டு என்றார் தேவன். அப்படியே, உண்டானவைகளெல்லாவற்றையும் சாத்தான் தொட்டபோதிலும் உயிரைத் தொடவோ அவனால் கூடாதுபோயிற்று; யோபுவின் உயிரின் வேலியில் தேவன் உடனிருந்தார்; வெற்றி யோபுவுக்கே. நம்முடைய ஜீவனைத் தொட, நமக்காக ஜீவனைக் கொடுக்காத சாத்தானுக்கு அதிகாரமில்லை. பாலாக் பிலேயாமை அழைத்து இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கும்படி ஏவியபோது, தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களை சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார் (எண். 22:12). தேவனுடைய தீர்க்கதரிசியை தேவனுடைய ஜனத்துக்கு விரோதமாக ஏவிவிட்டபோதிலும், தேவன் அதனை அனுமதிக்கவில்லை. ஆனால், இஸ்ரவேல் ஜனங்கள் வேலியை உடைத்து, அந்நிய பெண்களோடு சேர்ந்தபோது அழிவு அவர்களுக்கும் உண்டானது.

கசப்பான பழங்களைத் தருகிற திராட்சத்தோட்டத்திற்கு விரோதமாக கர்த்தர் செய்யும் காரியத்தையும் நாம் அறிந்துகொள்ளவேண்டுமே. தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களைச் செய்து, கசப்பான கனிகளை நாம் கொடுப்போமென்றால், அவர் அதன் வேலியை எடுத்துப்போடுகிறார், அதன் அடைப்பைத் தகர்க்கிறார், அது மேய்ந்துபோடப்படவும், மிதியுண்டுபோகப்படவும் அனுமதிக்கிறார், அதை பாழாக்கிவிடுகின்றார். இவர்களுக்கு விரோதமாக கர்த்தருடைய கோபம் மூளுகின்றது (ஏசாயா 5:25). நாம் அவரோடு கொள்ளும் உறவிலேயே நம்மைச் சுற்றிய வேலி உறுதியாகின்றது.நாம் நீதிமானாயிருப்போமென்றால், அவருடைய கை நமக்கு விரோதமாக நீளாது. லோத்து நீதிமானாயிருந்தபடியினால் (2பேதுரு 2:8), ஜீவன் தப்ப ஓடிப்போகும் சிலாக்கியம் அவனுக்குக் கிடைத்தது (ஆதி. 19:17).

இன்றோ கிறிஸ்தவனுக்கு விரோதமாய் கிறிஸ்தவனையே ஏவிவிடும் சத்துருவின் தந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டவர்கள் ஏராளம். சபைக்கு சபை அடித்துக்கொள்ளும் மனிதர்களும், சபைக்காக வைராக்கியம் பாராட்டும் மக்களும் ஏராளம். கிறிஸ்தவர்களாயிருந்தும் விரோதிகளாகவே வாழும் குடும்பத்தினரும், மக்களும் ஏராளம். இவை அனைத்தும் சத்துருவின் தந்திரங்களே. நம்முடைய ராஜ்யத்தைப் பாழ்ப்படுத்தும்படிக்கே நமக்கு விரோதமாய் நம்மை எழுப்புகிறான் சத்துரு. நாம் நீதிமானாயிருந்தால், நீதியே நம்மைக் காக்கும். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி