Skip to main content

சத்துருவின் ஊடுருவல்

 

சத்துருவின் ஊடுருவல்



உறுதியாயிருக்கும் ஊழியத்தினையும் ஒழித்துவிடும் நோக்கத்துடன் தன்னுடைய ஒற்றர்களை ஒவ்வொருவராக உள்ளே ஊடுருவச் செய்து, இறைவனுக்கு முன் இரும்பென இவ்வுலகத்தில் உயர்ந்து நிற்பதையும் இடித்துப்போடுவதற்கு முயற்சிப்பவன் சத்துரு. ஊழியத்தில் மாத்திரமல்ல, தனிப்பட்ட மனிதனின் உடலிலும், சிந்தையும், குணத்திலும், செயலிலும் தன்னுடையதைத் திணித்து, தேவனுடைய பிள்ளை என்ற ஸ்தானத்திலிருந்து நம்மை தூரப்படுத்த துடிப்பவன் சத்துரு என்பதையும் கூடவே நாம் புரிந்துகொள்வது அவசியமே. தூணின் மேல் ஏறுவதற்கு, துருவாய் ஒவ்வொரு நாளும் சத்துருவினால் சகோதரர்களிடத்தில் அனுப்பப்படுபவர்களை, துடைத்து துப்புரவாக்காவிட்டால்; தூணாய் நிற்கும் அர்ப்பணிக்கப்பட்டவர்களையும்கூட ஒரு நாளில் தூரிலிருந்து அரித்து அத்தகையோர் துரத்திவிடுவார்கள்; தேவனுக்கென்று பலமாகக் கட்டப்பட்டிருந்த மாளிகையைக்கூட தகர்த்து தரைமட்டமாக்கிவிடுவார்கள். ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள் (1பேது 2:5) என்றே மாளிகையில் இணைந்திருக்கும் ஒவ்வொரு மனிதர்களாகிய கற்களைக் குறித்தும் வேதம் எடுத்துரைக்கின்றது அல்லவா. மேலும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக (வெளி 1:6) என்றே வெளிப்படுத்தின விசேஷத்திலும் நாம் வாசிக்கின்றோமே. 

என்றபோதிலும், ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கப்பட்டவர்களும், விண்ணகத்தின் பார்வையில் விலையேறப்பெற்றவர்களுமாகக் காணப்படுகின்ற இத்தகைய கற்களை ஒவ்வொன்றாக நீக்கிவிட்டு, அந்த பொந்துகளை அடைக்க தன் சந்ததியைச் சார்ந்தவர்களை ஒவ்வொருவராக வைத்து சாந்துபூசி, இறுதியில் சத்தியத்திலிருந்தே சரிந்து விழும்படியாகவும், சரித்திரத்திலிருந்தே அழிந்துபோகும்படியாகவும் கிரியை செய்கிறவன் சத்துரு என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். பார்வைக்கு அர்ப்பணிக்கப்பட்டவைகளைப் போலவே ஊழியத்திற்குள் பாதம் பதித்தாலும், வெளிப்புறத்தில் அவர்கள் காட்சியளித்தாலும், அழைக்கப்பட்டோரின் மாளிகையில் அங்கங்களாக இணைந்திருந்தாலும் அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கற்களே. ஆடுகளுக்குள்ளே ஆட்டுத்தோலைப் போர்த்திக்ககொண்டு, ஓநாய்களாக உலாவரும் போலிகளே. இத்தகைய மனிதர்களின் வெளிவேஷம் அவர்களின் வாழ்க்கையினாலேயே நிச்சயம் ஒருநாளில் வெளிப்படும். கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது;  கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது (மத் 7:15-18) என்று இயேசு கிறிஸ்து போதித்தாரே. 

அஸ்திபாரத்தின் மேல் மாளிகையாகக் கட்டப்பட்ட அனைத்தையும் அதமாக்கிவிட்டு, தான் உலாவுவதற்கு இதமான பாதையாக அதனை மாற்றிக்கொள்ள விரும்புவன் சத்துரு. சத்துருவின் இத்தகைய தந்திரத்தை அறியாமல், தரத்தை இழந்து தத்தளித்துக்கொண்டிருக்கும் ஊழியங்கள் இன்றைய நாட்களில் அநேகம் உண்டு. தூளிலிருந்து தான் தூக்கியெடுக்கப்பட்டதை மறந்து, தூசியாக தன்னுடைய கண்களில் சேர்ந்துகொண்டிருப்பவைகளால் பார்வை இழந்து, உத்திரமாக உருமாறியபின் அதனை தூக்கியெறியவும் மனம்தளர்ந்து, நீதியாய் வாழவேண்டிய தன்னுடைய வாழ்க்கை நீர்த்துப்போகச் செய்துவிட்ட மனிதர்கள் அநேகர். சகோதரனுடைய கண்களிலிருக்கிற துரும்பைப் பார்க்குமளவிற்கு தெளிவான தூரப் பார்வையைக் கொண்ட இவர்கள், தன்னுடைய கண்களிலிருக்கிற உத்திரத்தை உணர இயலாத கிட்டப்பார்வையற்றவர்களாக மாறிப்போனது பறிதாபமே (லூக். 6:41). நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையினை நிர்வகிக்கும் பொறுப்பு நம்முடைய கையிலேயே. நம்முடைய வாழ்க்கை ஆண்டவருக்கு நீர்த்துப்போகாதபடிக்குக் காத்துக்கொள்வது அவசியம்.

செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் (பிர 10:1) என்று எழுதுகின்றார் சாலொமோன். ஆவிக்குரிய நாம் நம்முடைய அஸ்திபாரங்களைக் குறித்தும், எல்லைகளைக் குறித்தும் கவனமாயிருக்கவேண்டியது அவசியம். பரிமளதைலமாக நாம் மாறிய பின்பு, செத்த ஈக்களை நம்மோடு சேர்க்கும்படியாக சத்துரு எடுக்கும் முயற்சிகளை முறியடிப்போம். தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது ஊழியத்திலோ செத்த ஈக்களைப் போல சேர்ந்துகொண்டிருக்கும் மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ளவோ, அகற்றிவிடவோ நாம் அறியாதிருப்போமென்றாலோ அல்லது உணராதிருப்போமென்றாலோ, பரிமளம் போன்ற நம்முடைய பெயரோ அல்லது ஊழியத்தின் பெயரோ நிச்சயம் ஒருநாள் பறிபோய்விடும். 


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி