Skip to main content

தூண்டில்

 

தூண்டில்



ஆண்டவரோடு இணைந்திருப்பதினால் உண்டாயிருக்கும் ஆசீர்வாதங்களை மட்டுமே அனுபவித்து, அர்ப்பணிப்பையோ அதற்கடுத்ததாக நாம் மாற்றிவிடக்கூடாது. ஆசீர்வதிக்க வரும் ஆண்டவரை தங்கள் முழு இருதயத்தோடும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் அதே  நேரத்தில், அழைக்கும்படியாக வரும் அவரையோ, மோசேயைப் போல, 'நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன்' (யாத் 4:10) என்று அரைகுறையான மனதுடன் தங்கள் தகுதியையும், தரத்தையும் சொல்லித் தப்பிக்க விழையும் கூட்டமும், பேதுருவைப் போல, 'நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும்' (லூக். 5:8) என்று அவரை அனுப்பிவிட விரும்பும் கூட்டமும் இவ்வுலகத்தில் அதிகம் உண்டு. ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டபின் ஆண்டவரை அனுப்பிவிட பேதுரு நினைத்தபோது, ஆண்டவரோ, அழைப்பிற்கடுத்த தூரமான பயணத்திற்கான தூண்டிலே அது என்பதை உணர்த்தும் வண்ணமாக,  'பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்' (லூக் 5:10) என்றாரே. பேதுருவின் வலை இராமுழுவதும் கடலிலிருந்து காலியாக வந்ததற்குக் காரணம், கடல் பணியை முடித்துவிட்டு கர்த்தருடன் பயணத்தைத் தொடரவேண்டும் என்பதற்காகவே. போடப்படும் புழுக்கள் எல்லாவற்றையும் தின்றுவிட்டு கடலுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கவே பல நேரங்களில் நாம் விரும்புகின்றோம்; ஆசீர்வாதத்தை மட்டுமே அனுபவித்தவர்களாக அர்ப்பணிப்பை விட்டு நமது வாழ்க்கையை அப்புறப்படுத்திவிடுகின்றோம். எனினும், ஆசீர்வாதங்கள் அனைத்தும் அர்ப்பணிப்பிற்கான தூண்டில்களே. 

கெனேசரேத்துக் கடலருகே இயேசு கிறிஸ்து சென்றுகொண்டிருந்தபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படியாக அவரை நெருக்கிக்கொண்டிருந்தார்கள் (லூக். 5:1); ஆனால், அதே கடற்கரையில் நின்றுகொண்டிருந்த இரண்டு படகில் உள்ளவர்களோ, படகுகளை விட்டிறங்கி தங்கள் வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள் (லூக். 5:2). ஒருகூட்ட ஜனங்களின் இருதயங்களில் தேவவசனத்தைக் குறித்த தாகமும், கேட்கவேண்டும் என்ற வாஞ்சையும் நிரம்பியிருந்தது; எனினும், இந்த இரண்டு படகுகளிலிருந்த மீனவர்களின் இருதயங்களிலோ, இராமுழுவதும் பிரயாசப்பட்டும் தங்களுக்கு ஒன்றும் அகப்படவில்லையே ஏதும் தங்கள் வலைகளில் கிடைக்கவில்லையே என்ற தவிப்பும் வருத்தமும் நிரம்பியிருந்தது.   

ஆசீர்வாதங்கள் எதற்கு அருளப்படுகின்றன என்பதை அறிந்துவைத்திருந்தான் தாவீது. எனவே, 'நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்' (1 நாளா 29:2) என்று தன் குமாரனாகிய சாலொமோனிடத்தில் கூறுகின்றான். தன்னிடத்தில் கொடுக்கப்பட்டவைகள் எதற்கு என்றும், எதற்காகச் செலவிடப்படவேண்டியவைகள் என்றும் நன்றாக அறிந்துவைத்திருந்தான் தாவீது. அவ்வாறே, அப்போஸ்தலனாகிய பவுலும் கொரிந்தியருக்கு எழுதும்போது தனது நிருபத்தில், 'ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய்  உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்' (2 கொரி. 12:15) என்றே எழுதுகின்றார். மேலும், மக்கெதோனியா நாட்டுச் சபைகளைக் குறித்து பவுல் எழுதும்போது, 'அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்' (2 கொரி. 8:2) என்று எழுதுகின்றாரே. மக்கெதோனியா நாட்டு மக்கள், ஆசீர்வாதத்தினால் நிரம்பியிருந்த நாட்களில் அல்ல; மிகுந்த தரித்திரத்திலிருந்தபோதிலும்,  தங்களிடத்திலிருக்கும் 'கொஞ்சமும் ஆண்டவருக்காகக் கொடுக்கப்படவேண்டியதே' என்பதை அறிந்துகொண்டவர்கள். 

மேலும், ஒரு ஏழை விதவை காணிக்கைப் பெட்டியிலே இரண்டு காசைப் போடுகிறதை இயேசு கிறிஸ்து கண்டபோது, 'இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' (லூக். 21:3) என்று சொன்னாரே. ஜீவனுக்கானது மாத்திரமே தன்னிடத்தில் உண்டு; கொடுப்பதற்கோ தன்னிடத்தில் ஒன்றுமில்லை என்று சொல்லக்கூடிய நிலையில் அந்த விதவை காணப்பட்டாலும், ஜீவனுக்குரியதையே அதாவது ஜீவனையே அவருக்குக் கொடுத்துவிட்டாளே! அத்துடன், 'இதோ நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் என் குமாரனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன்' (1 இராஜா. 17:12) என்று சாறிபாத் விதவை சொன்னபோதிலும், 'கொண்டுவா' என்று எலியா சொன்னபோது, தன்னிடத்திலிருப்பதிலும் 'கொடுக்கவேண்டிய பங்கு உண்டு' என்பதை அவள் உணர்ந்துகொண்டாளே. பங்கு கொடுத்து தப்பித்துக்கொள்ளும்படியாக அல்ல, நம்மையே அவருக்காக பலியாகக் கொடுக்கும்படியாகவே ஆசீர்வாதங்கள் நமக்குக் கொடுக்கப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி